<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488</id><updated>2012-02-01T09:51:30.633+05:30</updated><category term='இசை'/><category term='பாரசீக வளைகுடா'/><category term='சலாதீன்'/><category term='யூதர்கள்'/><category term='தாரிக அலி'/><category term='எண்ணெய்'/><category term='சாலமன் அரசர்'/><category term='நாகரீகங்கள்'/><category term='நாசர்'/><category term='போர்'/><category term='மாக்சிம் ராடின்சன்'/><category term='யமுனா ராஜேந்திரன்'/><category term='தேசியவாதம்'/><category term='ஆப்கானிஸ்தான்'/><category term='ஈழம்'/><category term='மலையாளிகள்'/><category term='பின்காலனியம்'/><category term='கீழைச்சிந்தனையாளர்கள்'/><category term='குர்து'/><category term='சூபிசம்'/><category term='கிழக்கு'/><category term='ஹசரத் இனாயத் கான்'/><category term='சோவியத் ரஷ்யா'/><category term='கம்ப்யூட்டர்'/><category term='அரபு இலக்கியம்'/><category term='அப்துல்ரஹ்மான் அல் முனீப்'/><category term='இனப்படுகொலை'/><category term='இஸ்லாம்'/><category term='நாடுகடத்தல்'/><category term='பெரியார்'/><category term='அரசியல் பொருளாதாரம்'/><category term='கடாபி'/><category term='பின் நவீனத்துவம்'/><category term='பின்நவீனத்துவம்'/><category term='முதலாளித்துவம்'/><category term='இடம்பெயர்தல்'/><category term='அரபு சமூகம்'/><category term='பாலஸ்தீன்'/><category term='அரபுலக புரட்சி'/><category term='ஹிசாம் சரபி'/><category term='பாகிஸ்தான்'/><category term='ஆம்பூர்'/><category term='தாரிக் அலி'/><category term='அடையாளம் பதிப்பகம்'/><category term='மார்க்சியம்'/><category term='அரபு அறிவுஜீவிகள்'/><category term='நீதிகட்சி'/><category term='இஹாப் ஹசன்'/><category term='வரலாற்று தொன்மம்'/><category term='லியோதர்த்'/><category term='எலியாஸ் கவுரி'/><category term='தத்துவம்'/><category term='நோம்சாம்ஸ்கி'/><category term='அர்மேனியா'/><category term='புத்திலக்கியம்'/><category term='ரஜினிகாந்த்'/><category term='இருப்பு'/><category term='அதிகாரம்'/><category term='எட்வர்த் செய்த்'/><category term='அழகிய பெரியவன்'/><category term='சமீர் அமீன்'/><category term='அரபு படைப்புகள்'/><category term='இந்திய இடதுசாரிகள்'/><category term='விமர்சனம்'/><category term='நேர்காணல்'/><category term='கேரளா'/><category term='பிரான்சு மாணவர் புரட்சி'/><category term='அடிப்படைவாதம்'/><category term='மத்திய கிழக்கு'/><category term='நாவல்கள்'/><category term='புத்தக விமர்சனம்.'/><category term='அறிவு'/><category term='ஓரியண்டலிசம்'/><category term='தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்'/><category term='நாகூர் ரூமி'/><category term='பொருளாதாரம்'/><category term='ராபர்ட் பிஸ்க்'/><category term='தயிப் சாலிஹ்'/><category term='மூன்றாம் உலகம்'/><category term='அக்டோபர் புரட்சி'/><category term='இன உறவுகள்'/><category term='திராவிட இயக்கம்'/><category term='மேற்கு'/><category term='திமுக'/><category term='புகாரின்'/><category term='பின் காலனியம்.'/><category term='செமிடிக். நாகரீகம்'/><category term='போதைப்பொருள்'/><category term='எச்.பீர்முஹம்மது'/><category term='அடையாளம்'/><category term='அரபுலகம்'/><category term='கருணாநிதி'/><category term='அரசியல் இஸ்லாம்'/><category term='ஈழத்தமிழர்'/><category term='இனப்போராட்டம்'/><category term='இக்பால் அஹ்மது'/><category term='ஆணாதிக்கம்'/><category term='நாவல்'/><category term='எட்வர்ட் செய்த்'/><category term='தந்தைவழி சமூகம்'/><category term='இலங்கை'/><category term='லிபியா'/><category term='திரைப்படம்'/><category term='புலம்பெயர் தமிழர்கள்'/><title type='text'>புலம் பெயர்ந்த உலகில்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>65</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-7637397790982173809</id><published>2011-12-31T15:11:00.003+05:30</published><updated>2011-12-31T15:20:25.109+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீதிகட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிட இயக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திமுக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>கழகங்களும் திராவிட மடமும் - 1969 தொடங்கி</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-FEPw7Bm7E7k/Tv7aTq8P49I/AAAAAAAAASI/MxLOJmP9Rwc/s1600/Justice_Party_1930s.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 223px;" src="http://2.bp.blogspot.com/-FEPw7Bm7E7k/Tv7aTq8P49I/AAAAAAAAASI/MxLOJmP9Rwc/s320/Justice_Party_1930s.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5692227010522244050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு இயக்கமும் வரலாற்றை மறு உருவாக்கம் செய்வது, மாற்றி அமைப்பது, கட்டுடைப்பது முதலானவற்றின் தொடர்நிகழ்வாகவே இருக்கும். அதன் நோக்கம் பரிணாம அடிப்படையிலான செயல்திறனை வைத்தே மதிப்பிடப்படும். தமிழ் வரலாற்றில் திராவிட இயக்கமும் இதன் பிரதிபலிப்பு தான். சமூக சீர்திருத்தத்திற்கான நெகிழ்வான இயக்கமாக தொடங்கபட்ட திராவிட இயக்கம் இன்று அதன் எல்லா நெகிழ்வையும் சிதைத்து இறுக்கமான ஒன்றாக மாறி விட்டது. வலுவான பசை போன்றதாக இருக்கிறது அதன் பரிணாம வளர்ச்சி. வீரமணியாச்சாரியாரின் தலைமையை தொடர்ந்து மடாலயத்திற்கான எல்லா கூறுகளையும் உள்ளடக்கி மீட்சிமைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் ஆகி விட்டது. இதை இன்னொரு தளத்தில் நாம் அதன் தேர்தல் அரசியல் இயக்கமாக பரிணமைந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும் விரிக்க வேண்டியதிருக்கிறது. இன்றைய தேர்தல் தோல்வியிலிருந்து அதன் தலைமையையும், வளர்ச்சிப்போக்கையும் பின்னோக்கி பார்ப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இந்திய நிலப்பரப்பு என்பது பிராமணிய ஆதிக்கத்தை நிரப்பிக்கொண்டதாக இருந்தது. பிரிட்டன் அதிகாரிகளுக்கு அடுத்தப்படியாக எல்லா அதிகார மையங்களும் அவர்களாலேயே நிரப்பப்பட்டிருந்தது. பல துறைகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இதன் நீட்சியில் அன்றைய சென்னை மாகாணமும்  அப்படியே. அரசின் மேல் மட்ட நிலையிலிருந்து சாதாரண உள்ளாட்சி அமைப்பு வரை அவர்களின் ஆதிக்கமே. பிராமணர் அல்லாதவர்களின் வணிக செயல்பாடுகள் கூட கேள்விக்குரியதாக இருந்தன. இந்நிலையில் 1912 ஆம் ஆண்டு சமூக சீர்திருத்த ஆர்வம் கொண்ட சில பார்ப்பணர் அல்லாத தலைவர்களால் சென்னை மாகாண திராவிடம் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் சென்னை மாகாணத்தில் பார்ப்பணர் அல்லாதவர்கள் நலனை முன்னிறுத்துவது. அதன் தொடர்ச்சியில் 1917 ஆம் ஆண்டு சர்.பி.டி தியாகராயர், டி.எம் நாயர், நடேச முதலியார் போன்றவர்களால் தென்னிந்திய நல உரிமை சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இது அ-பார்ப்பணர்களின் சுதந்திர வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் பிரிட்டிஷ் அரசின் அரசியல் சீர்திருத்தங்கள் காரணமாக 1920 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாண தேர்தலில் தென்னிந்திய நல உரிமை சங்கம் நீதிக்கட்சியாக மாறி அதன் ஆட்சியை பிடித்தது. சுப்பராயன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். நீதிக்கட்சியின் ஆட்சியில் பல்வேறு விதமான சீர்திருத்தங்களுக்கான முனைப்பு காட்டப்பட்டது.குறிப்பாக அ-பிராமணர்களுக்கான இட ஒதுக்கீடு முன்னெடுக்கப்பட்டது. அப்போது பெரியார் காங்கிரஸில் இருந்து கொண்டே நீதிக்கட்சியின் புற-கண்காணிப்பாளராக இருந்தார். இந்நிலையில் 1926 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றது. நீதிக்கட்சியிலிருந்து கட்சி மாறி தனிக்கட்சி தொடங்கிய சுப்பராயன் தலைமையில் ஆட்சி அமைந்தது.  இந்தியாவில் முதன் முதலாக கட்சி தாவலுக்கு உட்பட்டவர் சுப்பராயனே. இது அக்கால நீதிக்கட்சி தலைவர்களின் வர்க்க நலன்களின் பிரதிபலிப்பே. இக்காலகட்டத்தில் காங்கிரஸின் வைதீக, பார்ப்பண சார்பு நிலையை எதிர்த்து பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறினார். 1925 ஆம் ஆண்டின் இறுதியில் காஞ்சிபுரத்தில் நடந்த  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக தான் கொண்டு வந்த தீர்மானங்கள் பிராமண ஆதரவு தலைவர்களால் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக பெரியார் காங்கிரஸிலிருந்து விலகினார். அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் பெரியார் குடி அரசு இதழை ஆரம்பித்தார். காங்கிரஸில் இருந்த போதும் கூட பிராமணர் அல்லாத மற்ற சமூக மக்கள் மற்றும் பெண்களின் நலனை முன்னெடுத்தார். பகுத்தறிவு சார்ந்த கருத்தியல் பிரச்சாரத்தை வலுப்படுத்தினார்.காங்கிரஸிலிருந்து வெளியேறுவதற்கு முந்தைய வருடத்தில் தான் கேரள மாநிலம் வைக்கத்தில் நடந்த கோவில் நுழைவு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைச்சென்றார். இதன் பின்னர் சுய மரியாதை இயக்கத்தை தொடங்கினார். அப்போது நீதிக்கட்சி பல்வேறு சிக்கல்களாலும், நிலைபாட்டு குளறுபடியாலும் , அதிகார போட்டியாலும் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தது. பெரியார் இதை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டே அதனை ஆதரித்தார். குறிப்பாக சுப்பராயனின் கட்சித்தாவலை கடுமையாக விமர்சித்து பத்திரிகையில் எழுதினார். அதன் பின்னர் 1937 ல் இராஜாஜி கொண்டு வந்த இந்திமொழி திட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடினார். அதில் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோர் இறந்தனர்.போராட்டம் அன்றைய சுதந்திர போராட்ட நீரோட்டத்திலிருந்து விலகியதாக இருந்தது. அது தான் தமிழ் வரலாற்றில் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம். அவரின் இந்த போராட்டம் ஆங்கிலத்தை முன்னெடுப்பதற்கானது என்று பின்னாளில் பெரியார் விளக்கினார். எதார்த்தமான முறையில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது நீதிக்கட்சியிடமிருந்து விலகி தான் இருந்தது. இதன் தொடர்ச்சியில் சாதி எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவுக்கான பல்வேறு கட்ட செயல்பாடுகளுக்குப் பிறகு பெரியார் 1944 ல் திராவிடர் கழகத்தை ஆரம்பித்தார். தொடக்கத்தில் சமூக சீர்திருத்தத்திற்கான மிகுந்த முன்னெடுப்பை அது செலுத்தியது. ராமநாதன், அண்ணாதுரை, கருணாநிதி, சி.பி.சிற்றரசு, என்.வி நடராசன், நெடுஞ்செழியன், சம்பத்,மதியழகன்போன்றோர் அதன் தொடக்க கால உறுப்பினர்கள். இதன் பிந்தைய வருடங்களில் இந்தியா காலனியாதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் சார்ந்த விஷயங்களில் அண்ணாதுரைக்கும், பெரியாருக்குமிடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டன. அண்ணாதுரை சுதந்திர நாளை இன்ப நாள் என்றார். மாறாக பெரியார் அதை துக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என்றார். காரணம் இந்திய சுதந்திரம் என்பது ஆங்கிலேயர்களின் கையிலிருந்து பார்ப்பண-பனியாக்களின் கைக்குள் வந்திருக்கிறது என்பது தான். மேலும் சீர்திருத்தம் , பெண்ணுரிமை பேசிய பெரியார் தன்னை விட அதிக வயது வித்தியாசமுள்ள மணியம்மையை இரண்டாவதாக திருமணம் செய்த விஷயத்திலும் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த விஷயத்தில்  ராஜாஜியிடம்  ஆலோசனை கேட்டார் என்று பெரியார் மீது அண்ணாத்துரை குற்றஞ்சாட்டினார்.மணியம்மை விஷயம் தான் அண்ணாதுரை பிரிந்ததற்கு முதன்மை காரணம் என்பாரும் உண்டு. ஆனால் முரண்பாடு குறித்த சரியான வரலாற்று தெளிவு இல்லை. மணியம்மையை பெரியார் திருமணம் செய்ததால் தான் அவரின் நீண்டகால இருப்பு சாத்தியமானது  என்றொரு தகவலும் இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தி.மு.க என்பது அண்ணாதுரை பெரியாரிடமிருந்து பிரிந்து 1949 ல் ஏற்படுத்திய இயக்கம். வட சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை ஏற்படுத்திய போது கருணாநிதி அந்த இயக்கத்தில் இல்லை. அப்போது அவர் பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்தார். "ஆணையிடுகிறார் பெரியார். ஊளையிடுகிறார் அண்ணா என்று அன்று குடி அரசில் எழுதியவர் தான் கருணாநிதி.அதிகார பசியும், பொருளீட்டும் நிர்ப்பந்தமும் அவரை பின்னாளில் அண்ணாதுரை பக்கம் சாய்த்தது. அண்ணாதுரையை (பல்கலைகழகம் காலாவதியாகிவிட்டதால் பேரரறிஞர் பட்டம் தவிர்க்கப்படுகிறது) பொறுத்தவரையில் அன்றைய கட்டத்தில் அவர் இயக்கத்தை அரசியல்மயப்படுத்த விரும்பினார். அவரின் இயக்கம் முழுவதும் கண்ணதாசன், ஈ.வெ.கி. சம்பத், ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு,நெடுஞ்செழியன், கே.மதியழகன், என்.வி.நடராஜன்,சி.பி.சிற்றரசு, தில்லை மணாளன்,டி.கே வேலன் போன்ற பலவிதமான ஆளுமைகளால் நிரப்பப்பட்டிருந்தது. இவர்கள் பேச்சிலும் எழுத்திலும் கருணாநிதியை விட முன்வரிசையில் இருந்தனர். ஓரளவு ஜனநாயகபூர்வமாகவும், நாகரீகமாகவும் இருந்தது அன்றைய தி.மு.க. 1965 ல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாபெரும் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியை தன் அரசியல் அதிகார தளத்திற்கான சாதக கருவியாக மாற்றியது தி.மு.க. அதன் நலன்கள் இந்த போராட்டத்தில் பிரதிபலித்தன. மாணவர்கள் பலர் தூண்டப்பட்டனர். கட்சித்தொண்டர்களும் போராட்ட களத்தில் இறக்கப்பட்டனர். பக்தவச்சலம் அரசின் மோசமான நிர்வாகத்தால் வெறுப்புற்றிருந்த மக்களிடம் இந்த எழுச்சியும் சேர்ந்து கொண்டதால் தி.மு.க அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடிந்தது. தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இந்த உணர்ச்சியை  அன்று உள்வாங்க தவறி இருந்தன. அன்று அந்த விஷயத்தை மட்டும் கையில் எடுத்திருந்தால் இன்று தமிழ் அரசியலே திசை மாறியிருக்கும்.அதன் அரசியல் பற்றிய மாறுபட்ட கருத்துக்களும், நடைமுறை செயல்பாடுகளும், சோவியத் புராணமும், வழக்கமாக உச்சஸ்தமாக பாடும் நாம் - நாம் பாட்டுகளும்(நாம் இருந்தோம். நாம் கூட்டணி சேர்ந்தோம். நாம் தவறு செய்தோம். சரி. இரண்டு வடை, ஒரு சமோசா, ஒரு பிஸ்ஸா. முடிந்தது)அவற்றை தமிழ் அரசியல் களத்தில் இருந்து மாறுபட வைத்தன. இதன் விளைவாக திராவிட இயக்கங்கள் அவற்றை கடலின் உள்வாங்கல் போன்று உள்வாங்கின. வேறொரு வகையில் சொன்னால் தமிழ்நாட்டில் திராவிட கழகங்களின் பெரும் வெற்றியே இடதுசாரிகளின் இந்த தேங்கிய பலவீனம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவில் கருணாநிதியின் (துணைவேந்தர் பதவியின் மூன்றாண்டு காலம் முடிந்து விட்டதால் கலைஞர் பட்டம் தவிர்க்கப்படுகிறது.)வருகை தற்செயலான விபத்தே. அண்ணாதுரையின் காலகட்டத்திலேயே அந்த விபத்திற்கான அறிகுறிகள் தென்பட்டன. உட்கட்சி குழப்பங்கள் அதிகரித்தன. குறிப்பாக அன்றைய திமுகவின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான ஈ.வே.கி சம்பத் பல விஷயங்களில் அண்ணாத்துரையுடன் முரண்பட்டார். இதற்கு கருணாநிதியின் அடிகுத்தல்களும் ஒரு காரணமாக இருந்தன என்பதை அக்காலத்திய கழக முன்னோடிகள் வெளிப்படுத்துகிறார்கள். இவரை பற்றிய பல புகார்கள் அண்ணாத்துரைக்கு சென்றன. ஆனால் அவற்றை அதிகம் பொருட்படுத்தாமல் ஒத்துபோகுமாறு கருணாநிதியிடம் சொன்னார் அண்ணாதுரை. (இத்தகைய உட்கட்சி குழப்பங்கள் பற்றி அண்ணாத்துரை தன் கடைசி காலத்தில் பி.ராமமூர்த்தியிடம் வருத்தத்துடன் சொன்னதாக தன் நூல் ஒன்றில் பி.ராமமூர்த்தி குறிப்பிடுகிறார்.) இது அன்றைய கட்டத்தில் கருணாநிதிக்கு பெரும் சாதக அம்சமாக மாறியது. இந்நிலையில் 1969 ஆம் ஆண்டு அண்ணாத்துரை இறக்கிறார். அப்போது தான் கருணாநிதியின் சுய ரூபம் வெளிப்பட்டது. தி.மு.க முன்னணியினர் எல்லோரும் தங்களின் தலைவர் இறந்த துக்கத்தில் இருக்க , கருணாநிதி மட்டுமே அன்றைய கட்டத்தில் எம்.எல்.ஏக்கள் எல்லோரையும் தனித்தனியாக சந்தித்து பேச தொடங்கினார். அண்ணாத்துரைக்கு  பிறகு முதலமைச்சர் பதவிக்கு நெடுஞ்செழியன் முன் வரிசையில் இருந்தார். ஆனால் அன்றைய கட்டத்தில் தமிழ் இனத்தின் தேங்கி போன இயல்பான பலவீனமாக இருந்த திரைமோகம் காரணமாக நட்சத்திரமாக ஜொலித்த எம்.ஜி.ஆரின் வலுவான ஆதரவு கருணாநிதிக்கு இருந்தது. அவர் இவருக்காக பரிந்துரையில் இறங்கிய காரணத்தால் தான் கருணாநிதியால் முதலமைச்சர் பதவிக்கு வர முடிந்தது. இந்நிலையில் அண்ணாத்துரை பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியதிருக்கிறது. அண்ணாத்துரை போன்ற பண்பட்ட, நாகரீகமான அரசியல்வாதி 1967 ல் முதலமைச்சராக வந்த போது செய்த முதல் சீர்திருத்தமே அதுவரை சென்னை மாகாணமாக அறியப்பட்ட தமிழ்நாட்டை "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்தது தான். ஆனால் அதற்கான குரல்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே ஒலிக்க தொடங்கி விட்டன. அதற்காக காமராஜர் காலத்தில் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து இறந்து போனார். சில நிர்பந்தங்கள் காரணமாக காமராஜர் அதை தட்டிக் கழித்தார். அண்ணாதுரை ஆட்சிக்கு வந்த பிறகு தான் அது நிறைவேற தொடங்கியது. ஆனால் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் சுவரில் ஒட்டப்படும் காகித ஒட்டி மாதிரி உயிர்ப்பற்றது இருந்தது என்பதை அது ஏற்படுத்திய தாக்கத்தில்  இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும். மிக முக்கியமாக அண்ணாத்துரை சென்னை மாகாணம் என்பதிலிருந்து தமிழ் என்பதை பிரித்து பார்த்தார். பெயர் மாற்றத்தையும் தமிழ் மொழியையும் இணைத்து பார்க்கவில்லை. அதன் உயிரோட்டம் பற்றிய தொலைநோக்கு திறன் இல்லாமல் இருந்தார்.தமிழ் என்பது இன்றும் ஆங்கிலத்தில் Tamil என்றே அழைக்கப்படுகிறது. இதன் உளவியல் தாக்கம் ஒரு வர்க்கத்தை அப்படியே பாதிக்கிறது என்பதை திராவிட மடங்கள் புரிந்து கொள்ள தவறின. (இன்றைய மொழி அழிப்பின் தொடக்கமே இதில் தான் இருக்கிறது) விளைவாக இன்று தமிழ்நாட்டின் உயர்மத்தியதரவர்க்கமும், ஆங்கில படித்த மத்தியதரவர்க்கமும் தமிழை "றமில்" என்றே உச்சரிக்கின்றது. இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகள் அனைத்துமே ஆங்கிலத்திலும் அதே உச்சரிப்பில் தான் உச்சரிக்கப்படுகின்றன. உதாரணமாக ஹிந்தி Hindi என்றும், மராத்தி maraathi என்றும், பஞ்சாபி panjabi  என்றே அழைக்கப்படுகின்றன. இதை "thamizh" என்று மாற்றுவது ஒன்றும் மலையை புரட்டும் காரியமல்ல. தமிழ்நாடு என்ற பெயர் மாற்றிய கட்டத்தில் இதை செய்திருக்கலாம். அண்ணாத்துரை இதை செய்யத் தவறினார். இதில் வேடிக்கை என்னவென்றால் இன்றும்  அரசின் உத்தரவுகள், ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருப்பதால் "றமில்நாடு" என்றே வழக்கில் இருக்கிறது. அண்ணாத்துரை செய்ய தவறிய மற்றொன்று தமிழ்நாட்டின் நகரங்களின் பெயர்கள் அனைத்தும் தமிழில் ஒன்றும், ஆங்கிலத்தில் மற்றொன்றுமாக வழங்கப்பட்டு வந்த நிலை. உதாரணமாக சென்னை மெட்ராஸ், (இதில் சென்னை தற்போது ஒரே பெயராக மாற்றம் செய்யப்பட்டு விட்டது)வேலூர் - வெல்லூர் , தூத்துக்குடி - டியூடிகுரின், ஓசூர் - ஹோசூர், தஞ்சாவூர் - தஞ்சூர், திருச்சி - டிரிச்சி, உதகமண்டலம் -ஊட்டி, கன்னியாகுமரி -கேப்கமரின்  என்பதாக வழங்கப்படுகின்ற நிலை. இதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றிய தருணத்தில் செய்திருந்தால் மிக புரட்சிகரமாக இருந்திருக்கும். தாங்கள் நடத்திய மொழிப்போராட்டங்கள் உயிர்ப்பான அர்த்தம் பெற்றிருக்கும். இவற்றை செய்யாமல் தமிழ் சீர்திருத்தம் என்ற மாயையை அவை ஏற்படுத்தின. இதில் விநோதம் என்னவென்றால் ''றமில்" நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வர்க்கங்கள் கூட வெல்லூர் என்று சொன்னால் தான் புரிந்து கொள்கின்றன. அவ்வாறே உச்சரிக்கின்றன. வேலூர் என்று உச்சரிப்பதை பேருந்து என்று உச்சரிப்பதை போன்ற மனோபாவமாக பார்க்கின்றன. மேலும் பெரிய கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு உதகமண்டலம் என்றால் தெரியாது. ஊட்டி என்றால் தான் தெரியும். ஒருவேளை அதையே தமிழ் பெயராக அறிவிக்கலாம். அரசனை புகழ்ந்து பாடி பரிசில் பெறும் புலவர்கள் கூட வெறும் அல்லக்கைகளாகவும், மொண்டுகூவிகளாகவும் மாறி போனது தமிழ்நாட்டின் பெரும் துயரம். அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால் இந்த மாற்றங்களை அமல்படுத்தி இருப்பார் என்பதாக சில அல்லக்கைகள் கூறலாம் என்பதை மீறியே அண்ணாதுரை மீதான என் விமர்சனம் இருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் அறிஞர் என்று மொண்டு கூவிகளாலும், அல்லக்கை ஊடகங்களாலும், கவிதை என்று எதையோ எழுதி கிறுக்கும் சொம்புகளாலும் அழைக்கப்படுகின்ற (இடதுசாரி அறிவுஜீவிகள் சிலரிடத்திலும் இந்த நோய் உண்டு)கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்ற காலத்தில் தான் தமிழ்நாட்டு அரசியல் களம் கறை படியத்தொடங்கியது என்பதை அவரின் சீர்திருத்த மாயையை நன்கு அறிந்த வரலாற்றாளர்கள் எவருமே மறுக்க மாட்டார்கள். வரலாறு சிலசமயங்களில் நம் உள்ளங்கையிலிருந்து நழுவி விடுகிறது. அதை நம் கைவிரல்களின் கட்டுக்குள் வைப்பதில் தான் வெற்றியே அடங்கியிருக்கிறது. சில தருணங்களில் வளைந்தும், நெளிந்தும் செல்வதுண்டு. கருணாநிதி விஷயத்தில் இது தான் நடந்தேறியிருக்கிறது. நவீன காலத்தில், பிந்தைய முதலாளித்துவ காலகட்ட உலகில் தமிழ்நாடும் அதன் ஒரு பகுதியே. அதன் எல்லா பாதிப்புகளும் இங்கும் உண்டு. இந்நிலையில் கணங்கள் தோறும் குவிந்து வரும் செய்திகள், தகவல்கள் வெகுஜன உளவியலை கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மின்சாரம் நின்று விட்டால் தகவல்கள் அழிந்து விடும் கணிப்பொறியின் முதன்மை நினைவகம் மாதிரி தமிழ் மனமும் செய்திகளையும், அது ஏற்படுத்தும் தாக்கங்களையும் உடனடியாக மறந்து விடுகின்றது. இன்னும் ஐந்து வருடம் கழித்து ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பற்றி கேட்டால் யாருக்கும் தெரியாது. தமிழ் சமூகத்தின் இந்த அதீத மறதியே கழகங்களை அரசியல் களத்தில் மாறி மாறி நிலைக்க வைக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களோடு கூட்டணி சேரும் இடதுசாரிகளையும் இந்த மறதி நோய் பீடித்திருப்பது தான். கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன அமெரிக்காவில் தற்போது மறதியை அடிப்படையாக வைத்து அல்ஸீமர் என்ற நோயை கண்டுபிடித்திருக்கிறார்கள். இது முக்கியமான விஷயங்களையும், சமீபத்தில் நடந்த விஷயத்தையும் மறந்து விடும் போக்கை அடிப்படையாக கொண்ட நோய். அமெரிக்காவை பீடித்திருக்கும் இந்நோய் விரைவில் தமிழ்நாட்டு இடதுசாரிகளையும் பீடிக்கலாம். அதற்கு சோசலிச அல்ஸீமர் என்று பெயர் கூட வைக்கலாம். 1969 ல் முதலமைச்சராக பதவியேற்ற கருணாநிதி செய்த முதல் வேலை தான் ஆட்சிக்கு வர காரணமாக இருந்த எம்.ஜி.ஆரின் முக்கியத்துவத்தை குறைக்கும் வேலையில் இறங்கியது தான். எம்.ஜி.ஆருக்கு இணையாக தன் மகன் மு.க. முத்துவை முன்னிறுத்தும் வேலையில் இறங்கினார்.(பின்னாளில் மு.க.முத்துவே இவரை விட்டு பிரிய நேர்ந்தது)கட்சித்தொண்டர்களை தூண்டி விட்டு அவருக்கு ரசிகர்மன்றங்கள் அமைக்கும் வேலையில் இறங்கினார். அது வெற்றி பெற முடியாமல் போனதால் கட்சியில் அவரில் முக்கியத்துவத்தை குறைக்கும் வேலையில் இறங்கினார். இதனால் இருவருக்குமிடையே உரசல்கள் அதிகமாயின. இந்த உரசல் பொதுக்குழுவில் எதிரொலித்தது. தன்னையும் , குடும்பத்தையும் வளப்படுத்துவதற்காக கருணாநிதி தொடங்கி வைத்த சுரண்டலும், சுருட்டலும் கட்சியை கூட விட்டுவைக்கவில்லை. கட்சிக்கு நன்கொடையாக வந்த பணங்கள், மற்றும் செலவு செய்த பணம் போன்றவற்றிற்கு முறையான கணக்குகள் பராமரிக்கப்படவில்லை. இந்த பிரச்சினையோடு ஏற்கனவே இருந்த உரசல்கள் சேர்ந்து கொண்டு 1972 பொதுக்குழுவில் எதிரொலித்தது. அப்போது பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் இதற்கு கணக்கு கேட்டார். விளைவாக கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அன்றைய சூழலில் கருணாநிதியின் நிர்ப்பந்தம் காரணமாக நெடுஞ்செழியன் இதற்கு ஒத்துக்கொண்டார்.(பின்னர் நெடுஞ்செழியனுக்கே கருணாநிதி துரோகம் செய்தார்)இதனால் தன்னை பின்தொடர்ந்த மிகப்பெரும் வினை முடிந்து விட்டது என்று கருணாநிதி நினைத்தார். ஆனால் சிறிது நாட்கள் கூட நீடிக்கவில்லை என்பதை அதே ஆண்டில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தல் நிரூபித்தது. அதில் எம்.ஜி.ஆரின் அதிமுக வெற்றிபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆரை பொறுத்தவரை நாடகங்கள், அதன் பின்னர் திரைப்படங்கள் என்ற பரிணாமத்தில் வளர்ந்தவர்.1936 ல் வெளிவந்த சதிலீலாவதி திரைப்படம் மூலம் திரைப்பட உலகிற்கு அறிமுகமான எம்.ஜி.ஆர் அதன் பின்னர் வெளிவந்த ராஜகுமாரி படத்தின் மூலம் பெரும் நடிகராக கவனம் பெற்றார். தமிழ் திரை ரசனை உலகம் ஏற்கனவே ஆகர்சிக்கும் மயக்க உணர்வை அளிக்கும் நடிப்பின் காரணமாக எதார்த்த, தீவிர நடிகரான சிவாஜிகணேசனை பின்தள்ளி விட்டு திரை உலகில் முன்னணி நடிகராக வந்தார். சமகாலத்தில் தமிழ் திரை உலகில் கமலஹாசனுக்கும், ரஜினிக்குமான வித்தியாசம் தான் அன்றைய எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி.திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் மூலமாக அண்ணாத்துரையுடன் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் தி.மு.க வில் இணைந்தார். அடிப்படையில் அவருக்கு பகுத்தறிவு கோட்பாடு மீதெல்லாம் அவ்வளவாக கரிசனம் இல்லை. அண்ணாத்துரை மீதான தொடர்பே  அவரை கரை வேட்டியாக அடையாளம் காண செய்தது. சுதந்திர போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் பகுத்தறிவு போராட்டங்கள் நடைபெற்றன. அன்றைய கட்டத்தில் தீவிர எழுத்தை விட ஆவேசமான மேடைப்பேச்சே திராவிடங்களுக்கு பிரதான புரட்சிகர ஊடகமாக இருந்தது. நல்ல குரல் வளத்தில் அதிக ஒலியுடன் அடுக்குமொழி, வார்த்தை ஜாலம், வர்ணிப்பு, சொல்விளையாட்டு போன்றவைகளுடன் மேடைகளில் அலறும் போது அதை கேட்பவர்கள் பூரித்து உணர்ச்சிவயப்பட்டனர். இதன் காரணமாக அக்கால பார்வையாளர்களுக்கு பேச்சாளரின் வாக்கே பிரதானமாக தென்பட்டது. இவை தொடர்ச்சியாக திராவிட கழகங்களுக்கு பலனளித்ததன் விளைவே தமிழ்நாட்டில் இன்று வரையிலான அவர்களின் ஆழமான வேர்பிடிப்பு. இன்றும் 0, 1 போன்று திமுக அல்லது அதிமுக என்று தமிழ் வாக்காளர்களின் தேர்ந்தெடுக்கும் கட்டாய மனநிலைக்கு மேற்கண்ட மேடைத்தந்திரங்களே காரணம் என்பதை திராவிடங்களின் ஐம்பதாண்டு கால வரலாற்றை பார்வையாளர்களாக கூர்ந்து கவனித்து வரும் எவருமே மறுக்க முடியாது. அதற்கு இரு வித செயல்தந்திரங்கள் தான். ஒன்று மேடை தந்திரம் மற்றொன்று திரைத்தந்திரம். தற்போது வரை அது தொடர்கிறது. இதன் தொடர்ச்சியில் கருணாநிதி 1969 ல் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு தான் அண்ணா கால தி.மு.க வின் ஜனநாயக அமைப்பு முறை சீர்குலைய தொடங்கியது. அதிகாரம் கையில் வந்தவுடன் ஆட்டம் போட ஆரம்பித்தார். அது ஜெயலலிதாவின் 1991-1996 மற்றும் 2001- 2004 கால ஆட்டத்தை ஒத்திருந்தது. குறிப்பான சம்பவம் ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். கருணாநிதியின் மூத்த மனைவி இறந்தவுடன் அவருக்கு தயாளு அம்மாளை இரண்டாவதாக திருமணம் செய்து வைப்பதில் கருணாநிதியின் அக்கால நண்பரான டி.கே .சுப்ரமணியம் பெரும் உதவி செய்தார். சிறந்த பத்திரிகையாளரான இவர் ஜவகரிஸ்ட் என்ற பத்திரிகையை அக்காலத்தில் நடத்தி வந்தார்.  இந்த பத்திரிகையில் 1969 ஆம் ஆண்டு கனிமொழி பிறப்பை பற்றி  கீழ்கண்ட பெட்டி செய்தியை வெளியிட்டார்." குறிப்பிட்ட தேதியில் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் இராஜாத்தி அம்மாள் என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. மருத்துவமனை பதிவேடுகளில் அந்த குழந்தையின் தந்தை பெயர் கருணாநிதி என்றிருக்கிறது. யார் அந்த கருணாநிதி? " என்ற கேள்விக்குறியோடு முடிகிறது அந்த செய்தி. இதை பார்த்த கருணாநிதி பொங்கி எழுந்தார். எனக்கு அப்படி  ஒரு குழந்தை பிறக்கவில்லை. இராஜாத்தி அம்மாள் யாரென்றே  எனக்கு தெரியாது என்றார். பின்னர் சுப்ரமணியத்தை நீதிமன்றத்திற்கு இழுத்து அவரை சில காலம் சிறையில் வைத்தார். இதில் அவர் வெறும் யார் அந்த கருணாநிதி? என்று மட்டுமே எழுதியிருந்தார். இருந்தும் திராவிட மடத்து ஆச்சாரியரான கருணாநிதியின் மடியில் கனம் இருந்ததால் எழுந்த பயம் காரணமாக நண்பராக இருந்தும் அந்த பத்திரிகையாளரை அன்று தண்டித்தார். அதன் மூலம் அவரின் திராவிட பற்றுணர்வும், நேர்மையும் அன்று கேள்விக்குரியதாக இருந்தது. அவர் நேர்மையாளராக இருந்தால் "ஆம். அந்த பெண் குழந்தை என்னுடைய குழந்தை தான். இதில் ஒளிவும் இல்லை. மறைவும் இல்லை" என்பதாக துணிந்து சொல்லியிருக்கலாம். மாறாக சராசரியான சாதிய சமூக மனோநிலையில் இருந்தார். அதன் காரணமாக தான் அதை பலகாலம் அவரால் மறைக்க வேண்டியதிருந்தது. அதன் பிந்தைய கட்டத்தில் சட்டமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பலான பதிலையே தந்தார். பலதடவை பதில் சொல்வதை தவிர்த்தார். இந்த விபரங்கள் எல்லாம் வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்டன.  சமீபத்தில் தான் வெளிவந்தது. இதை எல்லாம் மறைத்த மொண்டுகூவிகளும், அல்லக்கைகளும் மிக்க தந்திரமானவர்கள். காரணம் அவ்வாறு வெளிக்கொணர்ந்தால் தாங்கள் அவரை துதித்து, புகழ்ந்து பெறும் பரிசல்கள் நின்று விடும் என்ற எண்ணம் தான். தமிழ் வெகுஜன உளவியல் வெறும் வறட்டு ரசனையும், பிழைப்புவாதத்தையும் கொண்டதாக மாறி இருக்கும் நிலைக்கு இந்த மொண்டு கூவித்தனமே முக்கிய காரணம். இதில் தீவிர அறிவுஜீவிகள் என்பவர்கள் கூட பணம் மற்றும் பிற சலுகைகளுக்காக தங்களை முற்றிலும் சமரசப்படுத்திக்கொண்டது  மிகப்பெரும் துயரம்.&lt;br /&gt;அவர்களை பற்றியும் நாம் விமர்சிக்க வேண்டியதிருக்கிறது. சென்னை சங்கமத்தில் கவிதை வாசிப்பதையும், செம்மொழி மாநாட்டில் கட்டுரை வாசித்ததையும் ஏழாவது சொர்க்கத்திற்கு இணையாக நினைத்து  சுய மகிழ்ச்சி அடைந்தவர்கள் இங்கு  இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இடதுசாரிகளாக இருந்தது தான் ஆச்சரியமற்ற கொடூரம்.&lt;br /&gt;                    &lt;br /&gt;                   - தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-7637397790982173809?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/7637397790982173809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=7637397790982173809' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/7637397790982173809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/7637397790982173809'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2011/12/1969.html' title='கழகங்களும் திராவிட மடமும் - 1969 தொடங்கி'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-FEPw7Bm7E7k/Tv7aTq8P49I/AAAAAAAAASI/MxLOJmP9Rwc/s72-c/Justice_Party_1930s.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-2285826095393899853</id><published>2011-12-14T15:39:00.004+05:30</published><updated>2011-12-16T11:02:01.135+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம்பெயர் தமிழர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினிகாந்த்'/><title type='text'>புலம்பெயர் தமிழர்கள் பார்வையில் ரஜினிகாந்த்- வளைகுடாவை முன்வைத்து</title><content type='html'>&lt;strong&gt;(இந்தியாடுடே ரஜினி சிறப்பிதழுக்காக நான் எழுதிய கட்டுரை)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொழியின் செயல்பாடுகள் அதன் எல்லையை நகர்த்தி செல்லும் போது மனித மனத்தை பாதிக்கின்றன. அது தொடர்புறும் ஒன்றாக மாறுகின்றது. ஊடகங்கள் இவ்வாறு தான் மனங்களில் ஊடுருவுகின்றன. திரையும் அவ்வாறே. சினிமா என்பது காட்சியின் மொழியே.மேலும் சினிமா பற்றிய சிந்தனையாளர்கள் அதை தத்துவகோட்பாடாக கருதினர். சினிமா என்பதே தத்துவத்திற்காக உருவாக்கப்படுகிறது என்றார் ஸ்டேன்லி கேவல். மேலும் அதன் தோற்றம், எதார்த்தம் பற்றிய தத்துவ கோட்பாட்டை அது வித்தியாசமான முறையில் வெளிச்சமிடுகிறது. அது கதாபாத்திரங்களையும், நடிகர்களையும் கூட இந்த கோட்பாட்டில் உள்ளடக்குகிறது. இந்த இடத்தில் திரையின் காட்சி பிரதிபலிப்பும் அதனை உள்வாங்கும் பார்வையாளர்களும் முக்கியமானவர்களாகிறார்கள். இதனால் தான் இவ்வுலகம் என்பது புகைப்பட காட்சி பிரதி போன்றதே என்றார் பிரபல மேற்கத்திய எழுத்தாளர் டோரிஸ் லெஸ்ஸிங். இருபதாம் நூற்றாண்டு மொழியியலாளரான விட்கென்ஸ்டீன் அடிக்கடி ஹாலிவுட் திரைப்படங்கள் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.  அவருக்கு அது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் கடும் அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கும், தன் மொழியியல் கோட்பாட்டை பொருத்தி பார்ப்பதற்குமான தளமாக இருந்தது. இவ்வாறான வகையில் திரைப்படங்கள் அது உருவாகிய காலம் முதல் தற்போது வரை காட்சியை மீறிய பல வித தளங்களில் செயலாற்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-EIbnjImWXGM/Tuh2jD8hrbI/AAAAAAAAAR4/1L5UJoIlm9E/s1600/India-Today-Rajini-Spl-Issue.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 229px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-EIbnjImWXGM/Tuh2jD8hrbI/AAAAAAAAAR4/1L5UJoIlm9E/s320/India-Today-Rajini-Spl-Issue.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5685924874281921970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வெகுஜன உளவியலை அல்லது அரசியலை கட்டமைப்பதில் திரைப்படங்கள் காலங்காலமாக மிக்க பங்கு வகிக்கின்றன. தியாகராஜபாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் தொடங்கி தற்போதைய தனுஷ் வரை தமிழ் வரலாறு சினிமா தாங்கிய தனிப்பக்கங்களாகவும் இருக்கிறது. அது மட்டுமே முதன்மை பக்கமாகவும் மாறி போனது தமிழ் வரலாற்றின் துயரமே. திரை அரங்கில் எம்.ஜி.ஆரின் படத்தை பார்த்து கொண்டிருந்த ஒருவர் படத்தில் ஒரு சண்டை காட்சியில் எம்.ஜி.ஆரின் கத்தி கீழே விழுந்தவுடன் , தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை தூக்கி திரையை நோக்கி, இதோ பிடித்து கொள் என்று தூக்கி எறிந்தாராம். இது மாதிரியே தியாகராஜ பாகவதர் படத்திற்கும் ரசிகர்கள் குறித்த பல கதைகள் சொல்லப்படுவதுண்டு. திரைக்காட்சி வெளிக்கும் , நிஜ உலகிற்குமான இடைவெளியை திரையின் காட்சி பிம்பம் இல்லாமல் ஆக்க செய்வதன் விளைவே இது. இரண்டரை மணி நேரம் திரை அரங்கில் (தற்போதைய வீட்டு திரை அரங்கம் ஆனாலும்)படத்தை பார்க்கும் ரசிகர்கள் கனவுலகில் சஞ்சாரிக்கும் உணர்வை அடைகிறார்கள். ஒரு கட்டத்தில் இரு வழி உரையாடல் போன்ற உணர்வை அது அவர்களுக்கு அளிக்கிறது. விளைவு தங்களை அதன் கதாநாயகர்களின் விசிறிகளாகவும், ரசிகர்களாகவும் மாற்றுகிறது. இது கலைபடைப்பின் எல்லாவித வடிவங்களுக்கும் பொருந்தும். சினிமாவை பொறுத்தவரை மற்ற கலை படைப்புகளை விட சற்று முன்னால் நிற்கிறது. ரஜினிகாந்தை பொறுத்தவரை கர்நாடகத்தில் பிறந்து சினிமாவிற்காக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்தவர். சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயரை கொண்ட ரஜினிகாந்த் 1975 ல் பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் சிறிய வேடமொன்றில் அறிமுகமாகி படிப்படியாக பிரபலமானவர்.  அதற்கு அடுத்த ஆண்டில் வெளிவந்த பாரதிராஜாவின் 16 வயதினிலே என்ற படத்தில் பரட்டை வேடம் மூலம் கவனம் பெற்றார். அந்த படம் தான் தமிழின் இரு முன்னணி நடிகர்களான கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை முதன் முதலாக இணைத்த படம். கமலஹாசன் சப்பானியாக இருந்து ரஜினிகாந்திற்கு சவாலாக இருப்பார். அந்த படத்திலிருந்து தான் நாம் தமிழ் திரை ரசிக மனத்தின் உளவியலை ஆராய வேண்டும். நடிப்பை உள்ளார்ந்து எதார்த்தமாக நடிப்பதற்கும், வெறும் நடிப்பாக நடிப்பதற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. வெளியின் நான்காம் பரிமாணத்தை கண்டறிவதாக நிகழ்த்தப்படும் மேஜிக் போன்றதே இதுவும். சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகிய இருவரின் நடிப்பிற்கிடையேயான வித்தியாசத்தை நாம் இன்றையகட்டத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவருடன் ஒப்பிட முடியும். உலகம் முழுவதும் அனைத்து ரசிக மனத்திற்கு பொதுவான ஒன்றாக நாம் சினிமா மற்றும் இசையை குறிப்பிடலாம். மொபைல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் பேருந்து மற்றும் பிற வாகனங்களில் பயணிப்போர் காதுகளில் மைக்ரோ போன்களை வைத்து கொண்டு பாடல்கள் கேட்டு பயணிப்பது சகஜமும், தவிர்க்க இயலாததுமாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரை மனம் புலம் பெயர்ந்தாலும் கெட்டியாக ஒட்டிக்கொண்டு தொடர்கிறது. குறிப்பாக புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் மத்திய தர வாழ்க்கை முறையும், மனோபாவமும் நிலைகொண்டிருக்கும் வளைகுடா சூழலில் திரைப்படம் என்பது அவர்களின் பிழைப்பு தேடலின் ஒரு பகுதியாகி விட்டது. வளைகுடா நாடுகளில் பருவகாலங்களில் உதிர்ந்து விழும் பேரித்த பழங்களை பொறுக்க ஓடுவது மாதிரி பெரும்பாலானோர் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. தகுதி, திறமை என்பதை மீறி வாங்கும் சம்பளத்தை அடிப்படையாக வைத்தே ஒருவரின் அந்தஸ்து இங்கு தீர்மானிக்கப்படுகிறது. (தகுதியும், திறமையும் தானே வாங்கும் சம்பளத்தை தீர்மானிக்கும் என்ற விதி இங்கு நடைமுறையில் இல்லை). இந்த இடத்தில் தான் ரஜினிகாந்த் அவர்களுக்கு முக்கியமாக தென்படுகிறார். தமிழ்ச்சூழலின் எச்சம் அப்படியே பின்தொடர்கிறது. ஓடாய் உழைத்து தேயும் வாழ்க்கை, அன்றாடம்  நிறுவனங்கள் கொடுக்கும் கடுமையான பணிநெருக்கடிக்குள் சுழன்று வரும் சராசரி வளைகுடா வாழ் தமிழனுக்கு திரைப்படங்கள் தான் வலி நிவாரணி போன்று செயல்படுகின்றன. பெரும்பாலானவர்களின் ரசனையே இசையும், திரைப்படமும் தான். வாசிப்பு என்பது மிகக்குறைவே. இங்கு பிரம்மச்சாரி நண்பர்களுக்கு இடையேயான உரையாடலே அதிகமும் திரைப்படம் மற்றும் கேசட் பரிமாற்றம் பற்றியதாக தான் இருக்கும். திரையரங்குகளை விட வி.சிடிகளே பிரபலம். (இது திருட்டு வி.சி.டியா அல்லது அசல் வி.சி.டியா என்பதை தயாரிப்பாளர் தான் சொல்ல வேண்டும்.)சவூதி அரேபியாவை தவிர மற்ற எல்லா நாடுகளிலும் திரைஅரங்குகள் இருக்கின்றன. இண்டர்நெட் அறிமுகமாவதற்கு முன்பு வீடியோக்களே இங்கு அதிகமும் பயன்பாட்டில் இருந்தன. எல்லா வணிகவளாகங்களிலும் வீடியோ கடைகள் நிரம்பியிருந்தன. தெருக்களை கூட அவை ஆக்கிரமித்திருந்தன. 90 களின் இறுதிவரை ரஜினிகாந்த் தான் இங்குள்ள தமிழர்களின் மனத்தை ஆக்கிரமித்திருந்தார். குறிப்பாக ரஜினியின் அருணாசலம், படையப்பா,சந்திரமுகி போன்ற திரைப்படங்கள் இங்குள்ள தமிழ் ரசிக மனங்களை அதிகமும் ஆக்கிரமித்திருந்தன. திரைப்படத்தின் பஞ்ச் வசனங்களை பேசித் திரியும் சிறுவர்கள் மாதிரி சந்திரமுகியில்  லக லக லக என்று ரஜினி பேசுவது இங்குள்ளவர்கள் மத்தியில் வீதிகளில் நண்பர்களை கிண்டல் செய்யும் ஒன்றாக சில காலம் வழக்கில் இருந்தது. ஆக ரஜினி படத்தின் எல்லா பஞ்ச் டயலாக்குகளும் வளைகுடா தமிழர்களால் பாவனை செய்யப்படும் ஒன்றாக இருக்கின்றது. சிவாஜி , எந்திரன் ஆகிய திரைப்படங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் வசூலை அள்ளித்தந்தன. குறிப்பாக எந்திரன் திரை அரங்குகளுக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் எந்திரன் டிக்கெட் முன்பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கியது. அது பட வெளியீட்டிலிருந்து மூன்று வாரங்களுக்கானதாக இருந்தது. இதில் கேரள ரசிகர்களும் உள்ளடங்குகிறார்கள். சமீபகாலமாக அவர்கள் தமிழ்த்திரைப்படங்கள் மற்றும் பாடல்களை அதிகம் விரும்பி கேட்கிறார்கள். வளைகுடாவை அதிகம் நிரப்பி இருக்கும் அவர்கள் எல்லா தமிழ் திரைப்படம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் செல்கிறார்கள். இன்று குறைந்த பட்சம் தமிழ்திரைப்பட பாடல்களை ஒளிபரப்பாத மலையாள தொலைக்காட்சியே இல்லை என்று கூறலாம். இருந்தும் தமிழ், தமிழர் குறித்த கேரளத்தவர்களின் இழிவு பார்வையை இதிலிருந்து பிரித்து பார்க்க முடியவில்லை. இன்றும் மலையாள திரைப்படங்களில் பிச்சைக்கார கதாபாத்திரம் தமிழாக தான் இருக்கிறது. ஆக கேரளாவை சேர்ந்தவர்களையே வியக்க வைக்கும் வண்ணம் இருந்தது எந்திரனுக்கான வரவேற்பு. மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டி போன்ற பிரபலங்களுக்கு கூட இல்லாத பதிலுறவு இது. தமிழ்நாட்டில் எந்திரன் ஏற்படுத்திய பாதிப்பை விட வளைகுடா போன்ற புலம்பெயர்ந்த சூழலில் அது ஏற்படுத்திய பாதிப்பு முக்கியமானது. (எந்திரனின் நதிமூலம், ரிஷிமூலம் ஆகியவற்றை தாண்டி) மிகத்துல்லியமான காரண-காரிய முடிவுகளுக்குள் வர இயலாத ஒன்று.ரஜினிக்காக ரசிகர் மன்றங்கள் இங்கு இல்லாவிட்டாலும் ரஜினிக்காக பரிந்து பேசும், அவரின் திரைப்படங்களை அதிகம் பார்க்கும் கணிசமான தமிழ் ரசிகர்கள் இங்கு உள்ளனர். அவர்களுக்கு காலையிலிருந்து மாலை வரையான கடினமான உடலுழைப்பு என்பது இரவு நேரத்தில் ரஜினி படத்தை பிளேயரில் இட்டு பார்ப்பதில் தணிகிறது. ஒரு வகையில் இது பதிலீடாகவும் இருக்கிறது. இங்குள்ள திரை அரங்குகள் தமிழ்நாட்டில் ரஜினி படம் வெளியாகும் போது மகிழ்ச்சியடைகின்றன. காரணம் தியேட்டர்கள் நிரம்புவது அக்காலத்தில் தான். மற்ற காலங்களில் அவை தமிழ், மலையாளம், இந்தி என தங்களை சமநிலைப்படுத்திக் கொள்கின்றன. வி.சி.டிக்கள் அதிகமாக புழங்கும் புலம்பெயர் வளைகுடா சூழலில் ரஜினி படத்தின் வி.சி.டிக்கள் மட்டும் விற்பனை குறைந்து அந்த வருமானம் திரை அரங்குகளை நோக்கி திரும்புவதில் ஆச்சரியமேதுமில்லை. ஏற்கனவே நனவிலி நிலையிலும், ஆழ்மன நிலையிலும் ஊடுருவியுள்ள காட்சி குறியீடுகளின் விளைவுகளே அவை.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினிகாந்த் நடிப்பில் இடைவெளி விட்டாலும் தொடர்ந்து ஒரு தலைமுறையை தக்க வைக்க காரணம் அவரின் "நடிப்பிற்கான நடிப்பு" (Act for act)செயல்பாடே. வன்முறையும், முத்தக்காட்சிகளும், பாலியல் வசனங்களும், வரிகளை விட இசையின் சத்தமே அதிகமிருக்கும் பாடல்களும் தமிழில் காலங்காலமாக வரவேற்பும், ஊடுபாவலும் கொண்டிருக்கும் நிலையில் சமீப காலத்திய திரைப்படங்களின் போக்கிலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. சில மாறுபட்ட படங்களின் வரவு வரவேற்கத்தக்கதே. அதுவும் மரபான மனங்களை உடைத்து விட்டு வெற்றி பெற்றது தமிழ் சினிமாவின் வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு பெரிதும் உதவும் ஒன்றாகும். இதன் தொடர்ச்சியே மரபார்ந்த தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை மறு உருவாக்கம் செய்யும். ரஜினிகாந்த் இந்த வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட பக்கம் ஒன்றில் நிற்பார். திரைப்படங்கள் பார்ப்பதற்கு மட்டுமல்ல, வாழ வைக்கவும் செய்கின்றன என்று அகிரா குரோசவா சொன்னது இந்த சூழலுக்கு சரியாகவே பொருந்துகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-2285826095393899853?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/2285826095393899853/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=2285826095393899853' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/2285826095393899853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/2285826095393899853'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2011/12/blog-post.html' title='புலம்பெயர் தமிழர்கள் பார்வையில் ரஜினிகாந்த்- வளைகுடாவை முன்வைத்து'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-EIbnjImWXGM/Tuh2jD8hrbI/AAAAAAAAAR4/1L5UJoIlm9E/s72-c/India-Today-Rajini-Spl-Issue.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-4378028019252419282</id><published>2011-09-24T17:47:00.004+05:30</published><updated>2011-09-26T17:40:09.401+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரபு இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்துல்ரஹ்மான் அல் முனீப்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><title type='text'>இரவு பகல் என்ற இடைவெளியில் -  அரபு நாவலாசிரியர் அப்துல் ரஹ்மான் அல் முனீப் ஓர் அறிமுகம் மற்றும் நேர்காணல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-wc2lcVpG2Is/Tn3K4apstGI/AAAAAAAAARk/oP3K8f2U674/s1600/munif.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 154px; height: 209px;" src="http://1.bp.blogspot.com/-wc2lcVpG2Is/Tn3K4apstGI/AAAAAAAAARk/oP3K8f2U674/s320/munif.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5655899777622914146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாதி அல் யுயோன் . ஆரவாரமற்ற பாலைவனம் அது. பாலைவன மணல் வெடிப்புகளுக்கிடையே சின்னதான பச்சைத்துளிர்ப்புகள். பூமியானது வெடித்தும் வானம் அதன் மீது இறங்கியதான தோற்றத்துடனும் இருந்தது. அதனை பார்ப்பவர்கள் இந்த இடத்தின் மீது கண் வைக்க வேண்டியதிருக்கிறது. தண்ணீர் இதனிலிருந்து எப்படி வெளியாகிறது.?  இதன் சலனம் என்பது  என்ன? இயற்கை அதன்  அசலையும் நேர்த்தியையும் ஒரு சேர இங்கு அளித்திருக்கிறது.&lt;br /&gt;(முனீபின் Cities of Salt என்ற நாவலின் தொடக்க வரிகள் )&lt;br /&gt; பாலைவனங்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் மத்திய கிழக்கின் ஓரத்திலிருந்து அரபு இலக்கிய படைப்புகளை பற்றி மதிப்பிடும் எனக்கு அப்துல் ரஹ்மான் அல் முனீபின் படைப்புவெளி குறித்து அதிகம் விவரிக்க வேண்டியதாக இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டு அரபுலகம் அதன் தனித்த படைப்பாளுமையால் மேற்குலகின் கவனத்திற்கு ஆள்பட்டிருக்கிறது. தங்கள் சுய அடையாளங்களை இழந்ததன் தவிப்பும், அதன் ஊடுருவலும், ஏக்கமும் படைப்பாளிகளின் மொழிக்குள் வகைப்பட்டிருக்கிறது.  எட்வர்த் செய்த் சொன்னது போன்று இலக்கியம் சில நேரங்களில் விசனத்தின் மொழியாக இருக்கிறது.வாழ்க்கைப் பற்றிய அவ நம்பிக்கை அவர்களின் படைப்புக்கு தெளிவான உயிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதம் என்ற எல்லைக்குள் மட்டுமே குறுக்கப்பட்டு வந்த அரபு மொழி இன்று அதன் எல்லா  நேர்கோடுகளையும் உடைத்து விட்டது. அதன் படைப்பு வெளி எல்லா தரப்பினரின் கவனத்திற்கு ஆளாகியிருக்கிறது. எகிப்திய நாவலாசிரியர் நகிப் மஹ்பூஸுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டதற்கு பின் அரபு படைப்புகளின் பிற மொழி கடப்பு அதிகமானது. நகிப் மஹ்பூஸ் பற்றி தமிழில் இப்போது தான் பதிவுகள் வர ஆரம்பித்திருக்கின்றன.. இவரை அடுத்து அல்லது அதன் சம தளத்தில் அப்துல் ரஹ்மான் அல் முனிப் வருகிறார். லத்தீன் அமெரிக்க படைப்பாளிகளான  கப்ரேல் கார்சியா மார்க்யூஸ் மற்றும் ஆக்டோவியா பாஸ்  ஆகியோரின் இடத்தில் மதிப்பிடப்படும் அப்துல் ரஹ்மான் அல் முனீப்  ஓர் அகோன்னத கட்டத்தில் 1933 ல் ஜோர்டான் தலைநகரான அம்மானில் பிறந்தார். இவரின் தந்தை சவூதி அரேபியாவை சேர்ந்தவர். ஒட்டக வர்த்தகரான இவர் அரபுலகம் முழுவதும் தன் வணிக ஸ்தாபனங்களை விரிவுபடுத்தியிருந்தார். தாயார் ஈராக்கில் பிறந்தவர். தந்தையை பின் தொடர்ந்து அப்துல் ரஹ்மான் சவூதி அரேபிய குடியுரிமையை கொண்டிருந்தார். பின்னர் தன் படைப்புகள் காரணமாக அதை துறக்க வேண்டியதாயிற்று. பள்ளி படிப்பை ஜோர்டானில் முடித்த அவர் மேற்படிப்புக்காக ஈராக் சென்றார். அங்கு சட்டபடிப்பு படித்தார். இறுதியில் பெல்கிரேடு பல்கலைகழகத்தில் பெட்ரோலிய பொருளாதாரத்தில் ஆய்வு படிப்பை நிறைவு செய்தார்.இதன் பிறகு சிரியாவில் பெட்ரோலிய துறையில் பணிபுரிந்த முனீப் 1967 ல் நடந்த அரபு இஸ்ரேலிய போர் காரணமாக ஈராக்கிற்கு சென்றார். இந்த காலகட்டத்தில் சிரியாவில் பிரபலமாக இருந்த பாத் சோசலிச கட்சியில் இணைந்து அதன் தீவிர உறுப்பினராக செயல்பட்டார்.பின்னர்  ஈராக்கில் எண்ணெய் வள பொருளாதார நிபுணராகவும் அதன் பின்னர் பெட்ரோலிய ஏற்றுமதி கூட்டமைப்பிலும் (OPEC) சில காலம் பணிபுரிந்தார். இக்காலகட்டத்தில் நாடோடி பதூயீன்களும் எண்ணெய் பொருளாதாரமும் குறித்த இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. பிந்தைய கட்டத்தில் எண்ணெயும் வளர்ச்சியும் என்ற மாத இதழின் ஆசிரியரானார். ஈராக்கில் பாத் சோசலிச கட்சியோடு இணைந்து செயலாற்றினார்.சோசலிசம் குறித்த நுண்ணுணர்வு அப்போது தான் அவருக்கு ஏற்பட்டது. சோவியத் ரஷ்யாவின் தாக்கத்தோடு அது இணைந்திருந்தது.அதன் நிலைபாடுகளில் மனமுறிவு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறினார். அந்த கட்டம் தான் ஈராக் - ஈரான் போர் ஏற்பட்டது. அதற்கு சதாம் உசேனை கடுமையாக விமர்சித்தார்.1981 ல் பிரான்சுக்கு நகர்ந்தார். மேற்குலக நகர்வுக்கு பின்னர் தான் எழுத்தில் தீவிர கவனம் செலுத்த தொடங்கினார். பிரான்சு வாழ்க்கை அவருக்கு புதிய பரிமாணத்தை கொடுத்தது. பிரெஞ்சு இலக்கியத்தை ஆழ்ந்து கற்ற முனீப் அதன் அகவய பிரக்ஞையோடு அரபு எழுத்து வெளியில் உலவ தீர்மானித்தார். இதன் தொடர்ச்சியில் ஐந்தாண்டுகள் பிரான்சில் கழித்த முனீப் அதன் பிறகு சிரியா திரும்பினார். சிரியாவை தன் இருப்பிடமாக மாற்றிக் கொண்டார். இவரின் முதல் நாவல் மரங்களும் மர்சூக்கின் படுகொலையும் (Trees and assaisnation of Marzouq )  என்ற தலைப்பில் 1973 ல் வெளிவந்தது. அவரின் இளமைக்கால பாதிப்புகள் குறித்ததாக இருந்தது அந்த நாவல். இளமையின் உதிர்ப்புகள் வாழ்வின் பிந்தைய கட்டத்தில் எவ்வித பிரதிபலிப்பை செலுத்தும் என்பதான கதை வெளியை கொண்டது அது. அதன் பின்னர் அரபு பழங்குடியினரின் காதல் கதை (Pagan Love Story) என்ற நாவல் வெளிவந்தது. அரபு இனத்தின் பூர்வ குடியினரான பதூயீன்கள் பற்றிய வரைபடமாக அது இருந்தது. பதூயீன்களின் வாழ்க்கையமைப்பு பெட்ரோலிய நிலத்தோடு சம்பந்தப்பட்டது. அதனோடு இயைந்த &lt;br /&gt;விடுபடல்களிலிருந்து எழும் மன உணர்வுகளின் கூட்டுநிலையாக கதையமைப்பு தடமறிந்து செல்கிறது. இக்கட்டத்தில் முனீப் நவீன ஓவியங்கள் மீது கவனம் செலுத்தினார். ஈராக்கில் இருந்த போதே அவருக்கு பண்டைய மெசபடோமிய சிற்பங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஈராக்கின் ஓவியர்களாக இருந்த ஜவாத் சலிம் மற்றும்  சகிர்அலி செய்த் ஆகியோரின் ஓவியங்கள் முனீபின் படைப்பு வெளிக்குள் மிகுந்த பாதிப்பை செலுத்தின. அவரின் அநேக நாவல்கள் அரபு ஓவியர்களின் ஓவியத்தை உட்கொண்டிருக்கின்றன. நவீன ஒவியத்தில் ஆர்வம் உண்டான பிறகு முனிப் அதை அரபு உலகம் முழுவதுமானதாக வளர்த்தெடுக்க முடிவு செய்தார். இதற்காக பாலஸ்தீன அறிவு ஜீவியான ஜாபர் இப்ராஹிம் அல் ஜாப்ராவுடன் தொடர்பை ஏற்படுத்தினார். நவீன ஓவியங்களை பொறுத்தவரை முனீப் ஒரு விமர்சகராகவே இருந்தார் எனலாம். இருபதாம் நூற்றாண்டு அரபு ஓவியர்களான பதிஹ் அல் முதரிஸ், மர்பான் பாஸி, நாதிர் நாபா, நயிம் இஸ்மாயில், ஜாபர் அல்வான், அபு தாலிப் மற்றும் மஹ்மூத் முக்தர் ஆகியோரின் ஓவியங்களை பற்றி பல்வேறு இதழ்களில் விமர்சன கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவற்றை தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் நிறைவேறுவதற்கு முன் மரணம் அவரை முந்திக் கொண்டு விட்டது. ஓவியங்கள் மீதான அவரின் ஆர்வம் பற்றி  முனீப்பிடம் ஒரு தடவை கேட்கப்பட்டது. அதற்கு அவர் " முதலில் ஓவியங்களை விரும்பக்கூடியவன் என்ற முறையில் நான் அதன் இயற்கை தன்மையை மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டாவதாக ஓவியங்களை நேசித்த அரபு கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகளை கண்டறிந்து அவர்கள் தொடாத ஓவியங்களின் புள்ளிகளை, அதன் ஒளிவீச்சை தேர்ந்த விமர்சகராக உள்வாங்கி கொள்வது, மூன்றாவதாக அரபுலகில் ஓவியர்களிடையே ஏற்பட்டிருக்கும் பலகீனங்களை கண்டறிந்து அதை நாவல்கள் வழியாக சீரமைப்பது. மேற்கண்ட அம்சங்கள்  அவரின் ஒவியங்கள் மீதான பங்களிப்பிற்கு உதாரணமாக இருக்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;  முனீப் தன் படைப்பு உத்தியில் நவீனத்துவத்தை அதிகம் உள்வாங்கி கொண்டு &lt;br /&gt;இருக்கவில்லை. நவீனத்துவத்தின் காலச்சேர்வை அதிகம் கற்றவராக இருந்த முனீப் அவரின் &lt;br /&gt;சமகாலத்தவர் மாதிரி அதனோடு முழுமையாக ஒன்றி போகவில்லை. நவீனத்துவம் ஏற்படுத்திய ஒரு வித அயற்சியே அதற்கு காரணம். அவரின் சமகாலத்தவர்கள் அதோர்னோவின் எதிர் காவியம் என்ற கருதுகோளுக்குள் வந்து விழுந்தார்கள். அவர்கள் நாவல் அதன் சரியான மரபில் நிற்க வேண்டுமென்றால் அதன் எதார்த்தவாத தன்மையை கைவிட வேண்டுமென்று சொன்னர்கள். அப்போது தான் அது மீண்டும் உற்பத்தி செய்யமுடியாத ஒன்றாக இருக்கும் என்றார்கள். முனீப் இந்த முறையிலிருந்து சற்று விலகி ஒரு வித தாராள கதை வெளிக்குள் தன் வரிகளை வடிவமைத்து கொண்டார். இதுவே அரபுலகில் அவரின் குறிப்பிட்ட கால இடைவெளியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது. நகுப் மஹ்பூஸ் இம்மாதிரியான அனுபவத்தில் இருந்திருக்கிறார். ஒரு தடவை சொன்னார் " நான் Cairo Triology " யை எழுதும் போது சில தருணங்களில் நவீன மனநிலைக்கு வெளியில் இருந்திருக்கிறேன்". இம்மாதிரியான அனுபவங்களே அவரின் பெரும்பாலான படைப்புகளில் பரவிக்கிடக்கிறது. எதார்த்தத்துக்கும் மொழிக்குமான அழகியலை அவை கூட்டிணைவு செய்கின்றன. அவரின் எதார்த்த மொழி வாசகனிடத்தில் வெறுமனே கடந்து செல்லாமல் ஒரு வித ஊடுருவலை ஏற்படுத்தியது.அரபுலகில் முனீப் ஒரு படைப்பாக்க ஆளுமையாக மாற அவரின் நாவல்களே காரணம். வாழ்வின் அவிழ்க்க முடியாத புதிர்களை பற்றி ஆராய சிறந்த தளம் நாவலே என்று முனீப் அதிகம் நம்பினார்.முதல் நாவலுக்கு பிறகு 1982 ல் வெளிவந்த வரைபடமற்ற உலகம் (World without maps) என்ற அவரின் நாவல் அரபுலகில் மிகுந்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஜோர்டானில் பிறந்து  மத்திய கிழக்கின் பல்வேறு நகரங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருந்த முனீப் வீடற்ற நிலை என்பதன் பிரக்ஞையில் ஆழ்ந்திருந்தார். எழுத்தாளரும் நாடுகடத்தலும் என்ற கட்டுரையில் முனீப் நாடுகடத்தல் என்பது ஒருவனை சமூக குற்றவாளியாக , மனநிலை பிறழ்ந்தவர் இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது என்றார். அவரின் பெரும்பாலான நாவல்கள் புலம் பெயர்தலை குறித்ததாகும். ஜார்ஜ் லூக்காஸின் நாவல் பற்றிய கருதுகோளான "நாவல் என்பது சமூக மாற்றத்தை முன்னிறுத்தும் களம்" என்பதை முனீபின் நாவல் பிரதிபலித்தது. மேலும் இவரின் நாவல்களில் மேற்குலகத்தால் அதிகம் பேசப்பட்டது உப்பின் நகரங்கள் (Cities of Salt) என்ற நாவலாகும்.. நான்கு பகுதிகளை கொண்டிருக்கும் இந்நாவல் அரேபியாவின் பெயர் அறியப்படாத ஒரு பாலைவன கிராமத்தில் பெட்ரோலிய கண்டுபிடிப்பின் பிறகு அங்குள்ள நாடோடி பழங்குடியினர் விரட்டப்பட்ட கதையை முன்னிறுத்தியதாகும். வாதி அல் யுயோன் என்ற கற்பனா கிராமம் பாலைவன தாவரங்களாலும் சிறிய நீரூற்றுகளாலும் நிரம்பியிருக்கிறது. பூர்வ குடியினரான பதூயீன்கள் குடில் அமைத்து அதன் பல எல்லைப்பகுதிகளில் தங்கியிருக்கின்றனர். மிதப் அல் ஹதால் என்ற நபர் அவர்களின் தலைவராக இருக்கின்றார். இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் சவூதி அரேபியாவில் பிரிட்டன் உதவியுடன் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் அந்த பழங்குடியினர் வாதி அல் யுயோன் என்ற கிராமத்திலிருந்து விரட்டப்பட்டனர். எங்கு செல்வதென்ற உணர்வில்லாத நிலையில் கூட்டம் கூட்டமாக பல மைல்களுக்கு அப்பால் சென்று குடியேறுகின்றனர். வாதிஅல் யுயோன் சகல வசதிகளும் நிரம்பிய பூமியின் சொர்க்கமாக இருக்கிறது. பல வருடங்கள் கழித்து மிதப் அல் ஹதாலின் மகன் பவாஸ் அந்த கிராமத்திற்கு திரும்பி வருகிறான். தாங்கள் தங்கியிருந்தாக அறியப்படும் இடங்கள் எவ்வித சுவடுகளுமற்று எண்ணெய் குழாய்களின் தடயமாக மாறி இருப்பதை நேரில் காண்கிறான். நீரூற்றுக்களும் தடமழிந்து இருந்தன. வாதி அல் யுயோன் புதிய நகரத்திற்கான தோற்றம் குறித்ததாக இருந்தது. எதார்த்தவாத கதை சொல்லல் முறையில் இருந்தாலும் இதன் பிந்தைய பகுதி மாந்திரீக எதார்த்தவாத முறையில் இருக்கிறது. அடையாளங்களை இழத்தல் ஆழ்மன ரீதியில் ஏற்படுத்தும் பாதிப்புகள் இந்நாவலில் பவாஸின் ஏக்கத்தோடு இயைந்து நிற்கிறது. வாழ்வு அதன் அர்த்தத்தை இழந்து நிற்பதையும் இன்னொன்றிற்கான தேடல் முற்று பெறாமல் நிற்பதையும்  நாவல் பாலைவன கதைவெளிக்குள் வரைந்து கொள்கிறது. இந்நாவல் மூலம் முனீப் அரபுலக இளம் அறிவுஜீவிகளால் அதிகம் ஆகர்சிக்கப்பட்டார். அதே நேரத்தில் அரசுகளால் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.அரபுலகில் பெட்ரோல் பற்றிய முதல் நாவல் என எலியாஸ் கெளரியால் இது குறிப்பிடப்பட்டது. சவூதி அரேபிய அரசாங்கம் ராஜ்ய விரோத நாவல் என குறிப்பிட்டு சில காலம் இதை தடைசெய்தது. சுமார் ஐந்தாண்டுகளுக்கு பிறகு இத்தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்நாவலை பற்றி முனீப் ஒரு தடவை இவ்வாறு குறிப்பிட்டார். " எவ்வளவு தூரம் இந்நாவல் வட்டார சித்திரத்தை கொண்டிருக்கிறதோ அதே அளவு உலக சித்தரிப்பையும் கொண்டது. வேறு வார்த்தைகளில் சொன்னால் வட்டார காலநிலையோடு நெருங்கும் அந்நேரத்தில் உலகத்தோடும் நெருங்குகிறது. மக்களின் வாழ்நிலையோடு ஒன்றிய நிலையில் அவர்களின் தேடலாகவும் இருக்கிறது." இவரின் கடைசி நாவலான இருண்ட நிலம் (Land of Darkness)  ஈராக்கின் கதையாக பிரதிபலிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈராக்கின் ஆட்சியாளராக இருந்த சுல்தான் பாதுஷாவின் அதிகார ஒடுக்குமுறை குறித்ததான சித்திகரிப்பாக இருக்கிறது. அம்மக்களின் அரசை எதிர்த்த தின வாழ்வாதார போராட்டம் கதைவெளியை நுட்பமாக கட்டமைக்கிறது. இந்நாவல் இவருக்கு படைப்பு ரீதியாக மேலும் வலுசேர்த்தது. நாவல்கள் மூலம் அப்துல் ரஹ்மான் அரபு இலக்கிய வெளியின் உன்னத நிலையை வெளிக்கொண்டார் எனலாம். தீவிர எழுத்து செயல்பாடுகளில் ஈடுபட்ட அப்துல் ரஹ்மான் புற்று நோயால் சில காலம் பாதிக்கப்பட்டார். சிரியாவுக்கும், பெய்ரோட்டிற்கும் இடையே பயணம் மேற்கொண்டிருந்த முனீப் 2004 ஆம் ஆண்டு ஜனவரியில் மரணமடைந்தார். முனீப் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றை Vintage பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.அப்துல் ரஹ்மான் அல் முனீப்பின் நேர்காணல்கள் மிகக் குறைவே. அதற்கு காரணம் முனீப் பத்திரிகைகளின் கண்கள் படாமல் ஒதுங்கியதாகும். இதில் ஒரு நேர்காணல் அல் ஜதீத் என்ற ஆங்கில பத்திரிகையிலும் மற்றொன்று லெபனானிலிருந்து வெளிவரும் அந்நஹாரிலும் வெளியாகி இருந்தது.&lt;br /&gt;அல் ஜதீத்:- உங்கள் வாழ்க்கை குறிப்புகளை எடுத்துக்கொள்வோர் உங்களின் பொருளாதார படிப்பையும் அதன் பிறகான உங்களின் ஆய்வு பட்டத்தையும் எடுத்து கொள்வார்கள். எப்படி உங்களால் பெட்ரோலிய பொருளாதாரத்திலிருந்து நாவல்களுக்கு நகர முடிந்தது?&lt;br /&gt;அப்துல் ரஹ்மான் அல் முனீப்:-  ஒரு காலத்தில் என்னுடைய பெரிய விளையாட்டாக அரசியல் இருந்தது. அரசியல் செயல்பாடுகளை அனுபவ பூர்வமாக உணர தொடங்கிய பிறகு ஏற்படும் அனுபவம் குறைபாடு உடையதாகவும், போதாமையாகவும் எனக்கு உணரப்பட்டது. அதன் பிறகு நான் மற்றவர்களின் விசனங்களையும், வெளிப்பாடுகளையும் இணைப்பதற்கான வாய்ப்பாட்டை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினேன். அது வரலாற்று தலைமுறை சார்ந்ததாகவும் இருந்தது. என்னுடைய செயல்பாடாக இருந்த வாசிப்பானது எனக்கு நான் தேடி கொண்டிருந்த கருவியை அளித்தது. அரசியல் இயக்கம் என்பதை விட எனக்கு நாவல்கள் வழி அதிகம் வெளிப்பாட்டு முறையை ஏற்படுத்த முடிந்தது. பொருளாதாரத்தை பொறுத்த வரை குறிப்பாக பெட்ரோலை பொறுத்த வரை அதிகார சமூகங்கள் மீதான படிப்பினையை அளிக்கிறது.  இவ்வாறாக பொருளாதாரமும், அறிவியலும் படைப்பாளிகளுக்கு சமூகத்தைப் பற்றி புரிந்து கொள்ளும் வழிமுறையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த இடத்தில் தான் நாவலாசிரியன் முன்னுக்கு வருகிறான்.&lt;br /&gt;அல் ஜதீத்:- அரசியலை நீங்கள் ஏன் ஜனநாயகத்திற்கு எதிரானது என்கிறீர்கள்? நாவல் இலக்கிய சொல்லாடல்களை விட அதிகம் அரசியல் சொல்லாடல்களை தானே உற்பத்தி செய்கிறது.?&lt;br /&gt;அப்துல் ரஹ்மான் அல் முனீப்:- முதல் கேள்வியை பொறுத்த வரை  நம்முடைய தலைமுறையானது கடரும் தலைமுறை என்றழைக்க சாத்தியமானது.  நாம் மாற்றத்திற்கான மிகுந்த கனவுகளையும் , அபிலாசைகளையும் சுமந்து கொண்டு திரிகிறோம். அதே நேரத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பானது மாற்றத்திற்கான வாகனத்தை கொண்டு வருகின்றது.  நமக்கு வழிகளை விட கனவுகளே பெரிது. அரசியல் கட்சிகளின் எச்சங்கள் மாற்றத்திற்கான தூண்டலில் மிக பலவீனமாகவும், இயலாமை கொண்டவையாகவும் உள்ளன. அவைகளின் கருத்துக்களில் பழமை தன்மையும், வெறுமையும் ஒரு சேர கிடக்கின்றன. அவை சமூக இயக்கங்களுக்குள் இணைக்கப்படவில்லை. அவைகளிடம் அரசியல் செயல்திட்டங்களை விட வெறும் கோஷங்களே மிஞ்சி இருக்கின்றன. அவைகள் எதார்த்த சோதனையை &lt;br /&gt;எதிர்கொள்ளும் போது அவற்றின் பலகீனங்களும், தோல்விகளும் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விடுகின்றன. இரண்டாவது கேள்வியை பொறுத்தவரை நாவலாசிரியன் அரசியல் கட்சிக்கு வெளியே அரசியல் பார்வையோடு நகரக்கூடியவனாக இருக்கிறான். காலப்போக்கில் அவன் அதிகரிக்கும் அனுபவ வெளியால் சமூகத்தை வெறும் அரசியல் சொல்லாடல்களை விட உயர்ந்த மதிப்பீட்டிற்கு கொண்டு வருகிறான். இவ்வாறாக வாசிப்பு என்பது சமூகத்திற்கு மாற்றத்திற்கான உயர்ந்த உத்திகளை ஏற்படுத்தி கொடுக்கிறது. வரலாறு, பொருளாதாரம் மற்றும் சமூகவியலானது,  சமூகத்திற்கு தனித்தோ அல்லது கூட்டாகவோ அதன் கனவுகள் மற்றும் அபிலாசங்களின் வெளிப்பாட்டு முறையாக மாறுகிறது.&lt;br /&gt;அல்ஜதீத்:- உங்கள் நாவல்களை வாசிப்பவர்கள் சந்தேகமின்றி ஒரு விசனகரமான அறிவுஜீவியின் நிலையான பிம்பத்தை அதில் கண்டடைகிறார்கள். நாவலாசிரியர் என்ற முறையில் மூன்றாம் உலக அறிவு ஜீவிகளின் இன்றைய பங்களிப்பு என்ன என்பதாக கருதுகிறீர்கள்?&lt;br /&gt;அப்துல் ரஹ்மான் அல் முனீப்:- இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவுஜீவிகள் சமூகத்தின் மிக முக்கிய பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியும் , இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமும் அரபு உலகில் அறிவு ஜீவிகள் இயக்கத்தின் சுடர் காலமாக இருந்தது. அதன் பிறகான கட்டத்தில் அரசியல் இயக்கங்களும் பிற அமைப்புகளும் அவர்களின் குரலை வெளிப்படுத்த அறிவு ஜீவிகள் தங்களுக்கு அவசியம் என்பதை கண்டுபிடிக்க தொடங்கினார்கள். மற்றொரு கட்டத்தில் அவை அறிவுஜீவிகளை தங்கள் இயக்கத்து பிரசாரர்களாகவும், ஆலோசகர்களாகவும் மாற்றுகிறது. அந்த இயக்கங்கள் நலியும் போது அவை அவற்றின் அறிவுஜீவிகளின் தோல்வியை வெளிப்படுத்துகின்றன.அதே நேரத்தில் அறிவு ஜீவி தான் மட்டுமே அரசியல் இயக்கங்களுக்கு மாற்றாக சமூகத்தை பிரதிபலிக்க முடியும் என கருதுகிறான். என்னுடைய தொடக்க நாவல்களில் நான் அறிவுஜீவிகளின் தோல்வியையும், சறுக்கலையும் சித்தரித்திருக்கிறேன். பிந்தைய கட்டங்களில் அறிவுஜீவி என்பவன் முழுமையாக நாவலும், வாழ்க்கையும் இல்லை என குறிப்பிட்டிருக்கிறேன்.  வாழ்க்கை இதை விட வளமானது. அறிவு ஜீவியின் பங்களிப்பு இதன் முப்பரிமாண தளங்களில் இருந்த போதும் அதன் ஒரு பக்கம் இருள் கவ்வும் போது அவனால் வாழ்க்கையின் மற்ற பகுதிகளை அணுக முடியாது.  நடப்பு மூன்றாம் உலக அறிவுஜீவிகளை பொறுத்தவரை அவர்களின் பங்களிப்பானது சந்தேகமின்றி முக்கிய கேள்வியாகவும், கவனமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் இருக்கிறது. என்னை பொறுத்தவரை அறிவுஜீவி சமூகத்தின் அறிவு தோற்றத்திற்கான, மாற்றத்திற்கான முக்கிய பங்காளியாக இருக்கிறான். அவன் வெறுமனே தூண்டிலாக, பிரசாரகராக இல்லாமல் அவனின் கருத்தியல் தளத்தில் நின்று கொண்டு சமூகத்தை அணுக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால் அறிவுஜீவி என்பவன் அரசியல் இயக்கங்களின் பதிலியாக அல்லது பிரசார ஊடகமாக மாறக்கூடாது. மாறாக அவனின் நிலைபாட்டில் நின்று கொண்டு ஜனநாயக பூர்வமான  கருத்தாக்கங்களை. பன்முக தளங்களில் பதிவு செய்ய வேண்டும். இது தான் இன்றைய மூன்றாம் உலக அறிவு &lt;br /&gt;ஜீவிகளின் கடப்பாடு.&lt;br /&gt;அல் ஜதீத்:- உங்கள் நாவல்களில் நீங்கள் குறிப்பிடுவது "பாலத்தை கடந்து விடும் போது' கடந்து போன தோல்விகளும் அதன் வழிகளும். இது 1976 ல் , இருபது ஆண்டுகள் கடந்த பிறகும் அதே நிலைபாடு தானா?&lt;br /&gt;அப்துல் ரஹ்மான அல் முனீப்:-  நான் சொன்னது "வறட்சியான ஏழு வருடங்கள்" அது இந்நூற்றாண்டு வரையோ அல்லது அதன் பிறகோ தொடரலாம். இது சவூதி அரேபியா அல்லது பிற தேக்க நிலை சமூகங்களுக்கு அதிர்ச்சியை தரலாம். அடுத்த சகாப்தங்களில் அங்கு பஞ்சம் காரணமாக உள்நாட்டு கலகங்கள் ஏற்படலாம். அரசியல் முரண்பாடுகள் இன்னும் அதிகப்படலாம். ஏற்கனவே அடிப்படைவாதம் அங்கு உச்சநிலையை அடைந்துள்ளது. இதில் முக்கிய பிரச்சினை என்னவென்றால் இதற்கான மாற்று செயல்திட்டங்களோ அல்லது வடிவங்களோ இல்லை என்பது தான். நாம் அத்தகைய நிலையில் சிவில் சமூகத்தையும் , பன்முகப்பட்ட ஜனநாயக வடிவத்தையும் ஏற்படுத்த முனைய வேண்டும்.&lt;br /&gt;அல் ஜதீத்:- எழுதுபதுகளில் வெளிவந்த உங்கள் நாவலான The Eastern mediterranean ல் பல விஷயங்களை கையாள்கிறீர்கள். அதே விஷயங்கள் 90 ல் வெளிவந்த நாவலான "now here or the Eastern mediterranean one more time என்பதற்கும் அது திரும்புகிறது. ஏன் இந்த திருப்பம். புதிய நாவலில் அதை மறு பரிசோதனை செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?&lt;br /&gt;அப்துல் ரஹ்மான் அல் முனீப் :- Eastern mediterrranean யை  எழுதும் போது எனக்கு &lt;br /&gt;நானே சுய தணிக்கையாளராக இருந்தேன். அந்த தருணத்தில் வேறு நாவல் எதுவும் வெளிவராத நிலையில் அதில் எனக்கு சில விடுபடல்கள் இருந்தன. குறிப்பாக அரசியல் சிறைகள் பற்றியதானது அது. இரண்டாம் நாவலான Now here  அதனை ஓரளவு நிறைவு செய்தது. இன்னும் Cities Of Salt க்கு திரும்பி கொண்டிருக்கிறேன். மொத்த நிலையில் அரசியல், சமூக, மனித நிலை போன்ற பல விஷயங்கள் நாவலுக்குள் நிரம்பியிருக்கின்றன. இதன் மூலம் நாவலாசிரியன் சாரத்தை குவியப்படுத்தும் பல விஷயங்களை அதில் வரைந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;அல் ஜதீத்:- இன்றைய நம்முடைய எதார்த்த பிரச்சினை எண்ணெயில் தான் ஒளிந்திருக்கிறது என நீங்கள் நம்புகிறீர்களா?&lt;br /&gt;அப்துல் ரஹ்மான் அல் முனீப்:- நம்முடைய பிரச்சினை என்பது முத்தளத்திலானது. எண்ணெய், அரசியல் இஸ்லாம் மற்றும் சர்வாதிகாரம். இந்த அம்சங்கள் நவீனத்துவத்திற்கான பாதையை தேடிக்கொண்டிருக்கும் அரபு சமூகங்களுக்கு  குழப்பத்தையும், நிலைகுலைவையும் ஏற்படுத்துபவை. எண்ணெயானது அரசியல் இஸ்லாத்தோடு இணைந்து அதிக அதிகார குவியலை ஏற்படுத்துகிறது. ஆப்கானிஸ்தான் இதற்கான உதாரணம். அதே நேரத்தில் எண்ணெயானது சர்வாதிகார சமூகங்களுக்கு மேலும் பலத்தையும் , அதன் ஒடுக்குமுறைகளுக்கு மேற்தூண்டலையும் அளிக்கின்றது. இது பல கட்டங்களில் இணைந்து கொண்டு பிராந்தியம் முழுமைக்குமானதாக பரவுகிறது. அதே கட்டத்தில் மற்ற இயக்கங்களின் இயலாமை காரணமாக அவர்களால் இதை எதிர்கொள்ள முடியாமல் போகிறது.&lt;br /&gt;அல் ஜதீத்: உங்கள் நாவல்களில் அடிக்கடி வரும் சொல்லாடலான "எங்குமில்லை" என்பது இன்னும் சந்தேகமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இது எதை விவரிக்கிறது?&lt;br /&gt;அப்துல் ரஹ்மான் அல் முனீப் :- இடங்களின் சரியான விஷயம் என்பது ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கிடையேயான உறவு முறையை விவரிப்பதாகும். அது சார்பாகவும், விளிம்பாகவும், முக்கியமற்றும் இருக்கிறது. அரசியல் சிறைகளை பற்றி குறிப்பிட்டேன் என்றால் அது ஈராக்கிலோ அல்லது சவூதி அரேபியாவிலோ இருக்கிறது என்பதல்ல. இவைகள் அட்லாண்டிக் முதல் வளைகுடா வரை இருந்தாலும் அவற்றின் சூழலும், வழியும் தீர்மானகரமான சக்திகளாக இருக்கின்றன. ஏனென்றால் எல்லோரும் அந்த சூழலின் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். என்னுடைய சுய வாழ்வு மற்றும் இயக்க அனுபவங்களின் தாக்கம் சமூகம் பற்றிய பிரத்யேக வாசிப்பை ஏற்படுத்தி அவற்றை பற்றிய படைப்பு கருதுகோளுக்கு என்னை வரவழைத்தது. மேலும் இந்த சாரங்கள் என்னை ஓர் இடத்திற்கும் மற்ற இடத்திற்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதை கண்டுபிடிக்க வைத்தது.&lt;br /&gt;அல் ஜதீத்:- மேற்கண்ட எங்கள் கேள்வியின் நீட்சியில் லெபனான் பற்றி.. அதை எப்படி அதிகார சமூகத்திலிருந்து வித்தியாசப்படுத்தி பார்க்கிறீர்கள்&lt;br /&gt;அப்துல் ரஹ்மான் அல் முனீப்:-  லெபனான் உள்நாட்டு போரை பற்றி நாம் படிக்கும் போது 1975 லிருந்து 90 களின் முந்தைய பகுதி வரை நடந்த போரானது அந்த சமூகம் நவீனமயமாதலின் எதார்த்த அர்த்தத்தையும், அதன் கால உறவு முறையையும் நமக்கு அளிக்கிறது. அதன் அடுக்கு முறைக்கு வெளியே  புராதன மற்றும் பழைய சமூகங்களுக்குரிய மோசமான பின் தங்கிய நிலையையும், பிளவுகளையும் கொண்டு விளங்குகிறது. இந்த அர்த்தத்தில் ஒரு வேளை அதன் வடிவத்திலும், தோற்றத்திலும் ஓர் இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு வித்தியாசம் வரலாம். ஆனால் பதூயீன்களை பொறுத்தவரை எண்ணெய் வளமிக்க பாலைவனங்களோடு அவர்களின் வாழ்க்கை முறை சம்பந்தப்பட்டிருக்கிறது. அங்கிருந்து அது எல்லா அரபு நகரங்களுக்கும் இடம்பெயர்ந்திருக்கிறது. இந்த சக்திகளின் தீர்மான முறை வெறும் அரசியல் மட்டுமல்ல, கலாசாரம் மற்றும் வாழ்க்கை வழி முறை போன்றவற்றோடு இயைந்திருக்கிறது.&lt;br /&gt;அல் ஜதீத்:- உங்களின் அம்மான் (ஜோர்டானின் தலைநகரம்) பற்றிய புத்தகத்தில் நீங்கள் &lt;br /&gt;நகரம் பற்றிய சுய சரிதையை போலி செய்வதாக இருக்கிறது. ஆனால் இந்த கதை 1940 முதல் பாலஸ்தீன் புலப்பெயர்வு வரை நீள்கிறது. ஏன் இந்த சுய சரிதை? இது வரலாற்றிற்குள் விவாத தன்மையை ஏற்படுத்த கூடியதா? பாலஸ்தீனியர்களின் அம்மான் புலப்பெயர்வு பொருளாதார மற்றும் அதன் கட்டமைப்பின் பிறப்பிற்கு வழி ஏற்படுத்துகிறதா?&lt;br /&gt;அப்துல் ரஹ்மான் அல் முனீப்:- இது பன்முக பரிமாணங்களை கொண்ட கேள்வி. முதலில் &lt;br /&gt;நான் நவீன இலக்கியத்தில் நகரம் பற்றிய அதிக எழுத்துக்களை கண்டுபிடிக்க விரும்பவில்லை. நகர வாழ்க்கை பற்றிய பல பிரச்சினைகள் அது ஆவணமாக்கபடாத சூழலில் கொஞ்சமாக மறைய தொடங்கி கால ஓட்டத்தில் அழிந்து விடுகிறது. நகரம் பற்றிய என்னுடைய சுய சரிதையானது அநேக படைப்பாளிகளின் தூண்டலாக விளங்கும் நகரமும், இளமைக்காலமும் குறித்ததாகும்.&lt;br /&gt;அல் ஜதீத்:- சுய சரிதைகள் நாவல்களில் எந்த எல்லை வரை பங்களிக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?&lt;br /&gt;அப்துல் ரஹ்மான் அல் முனீப்:- இது இரண்டு வித்தியாசங்கள் மூலம் சாத்தியமாகிறது. ஒன்று நாவல் மற்றும் பிற எழுத்து முறை. நாவலில் இதன் பங்கு அல்லது தாக்கம் மிகக்குறைவே.  நாவலின் தன்னிலையில் இதன் குணாதிசயங்கள், வாழ்க்கை ஓட்டங்கள் வருகின்றன. ஒவ்வொரு ஆசிரியனும் அவன் எதை எழுதுகிறானோ அதன் சிறு பரப்பில் உள்ளாக இருக்கிறான். நாவல்களில் அறிவுஜீவீயின் குணாதிசயம் என்பது அவனின் வாழ்க்கை ஓட்டத்தை அர்த்தப்படுத்துவதாக இருக்க கூடாது. அதற்கு எதிர் நிலையில் சில குணாதிசயங்களை மட்டுமே ஆசிரியன் விமர்சிப்பதாக இருக்க வேண்டும்.  புனைவு எழுத்தின் எல்லையானது அதன் இயல்பான வேட்கைகளையும், கனவுகளையும் கொண்டது. இதில் சுய சரிதை என்பது நாவலுக்கு அடிப்படையான தடையாக இருக்கிறது. ஒரு தடவை நான் சொன்னேன். " ஆசிரியன் தன் நாவலை சுய சரிதையாக கருதி நகர்த்தி கொண்டு சென்றால் அவனால் எதையுமே அடைய முடியாது. இது வெறும் உணர்ச்சி பெருக்கங்களையே ஏற்படுத்தும்." என்னுடைய எழுத்துகள் இந்த எல்லையிலிருந்து வெளி நகர்ந்து தான் வந்திருக்கின்றன.&lt;br /&gt;அல் ஜதீத்: மர்வான் குசப் பாஸியை (சிரியாவின் ஓவியர்) பற்றிய உங்கள் எழுத்துக்கள்....&lt;br /&gt;அப்துல் ரஹ்மான் அல் முனீப்:-  நான் முதலில் நவீன ஓவியங்களை விரும்புபவன் என்ற முறையில் அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்கிறேன். ஓவியத்தின் ஆக பெரும் விரிவெல்லையானது இதுவாக தான் இருக்க முடியும். இலக்கிய படைப்பாளர்கள்  ஓவியங்களை காண்கிற போது ஒருவித நுண்வாசிப்பு அனுபவத்தை அடைகிறார்கள். நாவல் இவற்றை கடக்கும் புள்ளியாக இருக்கிறது. மர்வான் குசப் என்னை பொறுத்தவரை இதை தான்&lt;br /&gt;பிரதிபலித்தார். அரபுலகில் ஓவியங்களுக்கு இருக்கும் வரவேற்பின் எல்லையை தாண்டியே அவரின் பயணம் இருந்தது. ஒரு நாவலாசிரியனுக்கு நாவலோடு உறவு ஏற்படுவது மாதிரி &lt;br /&gt;ஓவியங்களோடும் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt; இவரின் மற்றொரு நேர்காணல் லெபனானிலிருந்து  வெளிவரும் அந்நஹார் என்ற அரபு வார இதழிலும் வெளிவந்தது. அதன் மொழிபெயர்ப்பின் ஒரு பகுதி&lt;br /&gt;அந்நஹார்:- நாவல்கள் என்பதன் களம் அரசியல் சொல்லாடல்களாக இருக்க முடியுமா? அதிகமான நாவல்களை எழுதியிருக்கும் நீங்கள் இந்த சிக்கலை எவ்வாறு அணுகிறீர்கள்.?&lt;br /&gt;அப்துல் ரஹ்மான் அல் முனீப்:- அரசியல் சொல்லாடல் என்பதை நான் வெறும் அனுபவ எல்லையின் வெளிப்பாடாக கருதுகிறேன். நாவல்கள் அந்த சொல்லாடல்களை தொடுவதும், &lt;br /&gt;விலகுவதுமான இடைவெளியை கடக்க வேண்டும். டால்ஸ்டாய், தஸ்தோவேஸ்கி ஆகியோரின் War and peace, Crime and punishment இதைத்தான் செய்தது. விரிந்த அரசியல் சிக்கல்களின் எல்லை வரைமானத்தை தாண்டுவது குறித்த பரிசோதனை முயற்சிகள் அதில் நிறையவே இருக்கின்றன. இன்னொன்று ஹெமிங்வேயின் For whom the bell tolls. பாசிசத்திற்கு எதிரான ஸ்பானிய மக்களின் போராட்டம் குறித்த பிரதிபலிப்பாக அது இருந்தது. அந்த கட்டத்தில் ஹெமிங்வேயின் பாசிசத்துக்கு எதிரான நிலைபாடு என்னை மிகவும் பாதித்த ஒன்று. இதன் தொடர்ச்சியில் அவரின் மற்றொரு நாவலான The old man and sea யும் இதே அனுபவத்தை தான் கொடுத்தது. கதை தளத்தின் வரை கோட்டில் இந்த சொல்லாடல்கள் தவிர்க்க இயலாத ஒன்று. இதை தான் நீங்கள் என் Cities of Salt லும் காண முடியும்.&lt;br /&gt;அந்நஹார்:- உங்களின் Cities of Salt நாவலை சவூதி அரேபிய அரசு, சிலகாலம் தடை செய்திருந்தது. இதற்கு நாவல்கள் வெளிப்படுத்தும் அரசியல் சொல்லாடல்கள் தான் காரணமா? சவூதி அரேபிய பின்புலத்தில் உள்ள நீங்கள் இதை எவ்வாறு அணுகிறீர்கள்.?&lt;br /&gt;அப்துல் ரஹ்மான் அல் முனீப்:- Cities of Salt நாவல் என்னை பொறுத்தவரை &lt;br /&gt;பாலைவனத்தின் நிரப்பப்படாத இடைவெளியின் மீது நிழல் மாதிரி விழுந்த ஒன்று. &lt;br /&gt;பதூயீன்கள் பாலைவன வாழ்முறையோடு இயைந்தவர்கள். இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் சவூதி அரேபியாவில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்த மண்ணோடு ஒட்டியிருந்த பதூயீன்கள் துரத்தப்பட்டனர். இடம்பெயரலுக்கும் துரத்தலுக்குமான இடைவெளியை நான் அதிகம் இனங்கண்டிருக்கிறேன். இது அரபுலகம் முழுமைக்குமே நடந்தேறியது. இதை குறிப்பதற்கு வாதி அல் யுயோன் என்பதிலிருந்து கதையை நகர்த்தினேன். சவூதியை பொறுத்தவரை கலை படைப்புகளுக்கும் அதற்குமான இடைவெளி மிக அதிகம். அரசியல் இஸ்லாம் - கலாசார இஸ்லாம் என்ற  வட்டத்திற்குள் போலித்தனமான, முரண்பாடுகளுடன் சுழன்று வரும் அதன் மீது எனக்கு எவ்வித பொருட்படுத்தலுமில்லை. நாவல் தடை செய்யப்பட்ட தருணத்தில் என் சவூதி பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. மத்திய கிழக்கு மற்றும்  ஐரோப்பாவிற்குமாக நகர்ந்து வரும் எனக்கு இந்த சிக்கலிலிருந்து எளிதாக விடுபட முடிந்தது.&lt;br /&gt;அந்நஹார்:- அரபு பின்னணியில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று உலகம் முழுமைக்குமான விமர்சகராக அறியப்பட்டவர் எட்வர்ட் செய்த். அவருடனான நேரடி அனுபவம் குறித்து...&lt;br /&gt;அப்துல் ரஹ்மான் அல் முனீப்:- எட்வர்ட் செய்த் எனக்கு முதலில் அறிமுகமானது நண்பர் எலியாஸ் கவுர் வழி தான். 1979 ல் டமாஸ்கஸில் (சிரியாவின் தலைநகரம்) நிகழ்ச்சியொன்றிற்காக வருகை தந்திருந்தார். நானும் அதில் கலந்து கொண்டேன். எலியாஸ் கவுர் என்னை அவரிடம் அறிமுகப்படுத்திய போது மிகுந்த முன்னார்வத்தோடு என்னிடம் உரையாட தொடங்கினார். முனீப் உங்கள் நாவல்களை நான் படித்திருக்கிறேன். இடப்பெயர்வு வாழ்வின் பிரக்ஞையை கொண்டவை அவை , உங்களின் Trees and assassaination of marzouq , Pagan love story போன்றவை நான் அதிக ஆர்வத்தோடு வாசித்த நாவல்கள். இதைப்பற்றி நியூயார்க்கில் நிறைய உரையாடல்கள் நடத்தியிருக்கிறேன். சொன்னபோது அவரின் முகத்தில் இழப்பு ஒன்று சரிகட்டப்பட்ட உணர்ச்சி பாவம் தெரிந்தது. அதன் பிறகு எங்களுக்கிடையே கடித பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த காலகட்டங்களில் அவரின் Orientalism குறித்து மேற்கு மற்றும் அரபுலகம் முழுவதும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. நானும் இதில் கலந்து கொண்டிருக்கிறேன். அவரின் அரபுலகம் மற்றும் பாலஸ்தீன் குறித்த ஆய்வுகள் எனக்கு பல தருணங்களில் தூண்டலாக இருந்திருக்கிறது. ஈராக் பற்றிய நிலைபாடுகளில் அவரோடு பல தருணங்களில் கருத்தொருமைக்கு வந்திருக்கிறேன். சதாமின் குவைத் &lt;br /&gt;ஆக்கிரமிப்பை கடுமையாக விமர்சித்தார். அதன் காரணமாக பாலஸ்தீன் தேசிய கவுன்சிலில் இருந்து வெளியேற நேர்ந்தது. யாசர் அரபாத்துடன் இது குறித்து நிறையவே விவாதித்தார். &lt;br /&gt;கிழக்கத்திய சமூகம் பற்றிய தேர்ந்த விமர்சகராக எட்வர்ட் செய்த் செய்த ஆய்வுகள் கால ஓட்டத்தில் பதிந்திருப்பவை.&lt;br /&gt;(மேற்கண்ட நேர்காணல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து வெளிவரும் அரபு தினசரியான அந்நஹார் பத்திரிகையின் வாராந்திர இணைப்பில் வெளிவந்தது. அரபுலகின் மற்றொரு நாவலாசிரியரான எலியாஸ் கவுர் இதன் ஆசிரியராக இருக்கிறார். அரபியிலிருந்து இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கொடுத்த  அரபு பல்கலைகழக பேராசிரியர் முனீர் ஹசன் மஹ்மூத் மிகுந்த நன்றிக்குரியவர்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-4378028019252419282?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/4378028019252419282/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=4378028019252419282' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/4378028019252419282'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/4378028019252419282'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2011/09/blog-post.html' title='இரவு பகல் என்ற இடைவெளியில் -  அரபு நாவலாசிரியர் அப்துல் ரஹ்மான் அல் முனீப் ஓர் அறிமுகம் மற்றும் நேர்காணல்'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-wc2lcVpG2Is/Tn3K4apstGI/AAAAAAAAARk/oP3K8f2U674/s72-c/munif.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-2343856709292416436</id><published>2011-06-20T23:17:00.000+05:30</published><updated>2011-06-20T23:22:28.826+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரபுலக புரட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடாபி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லிபியா'/><title type='text'>புரட்சியின் விளிம்பில் அரபுலகம் - டுனிஷியா தொடங்கி</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-svJnqBcMTM8/Tf-IwqRew_I/AAAAAAAAARc/OD3vNJD4SLo/s1600/220px-Egyptian_youth_at_the_Benghazi_rally.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 220px; height: 165px;" src="http://2.bp.blogspot.com/-svJnqBcMTM8/Tf-IwqRew_I/AAAAAAAAARc/OD3vNJD4SLo/s320/220px-Egyptian_youth_at_the_Benghazi_rally.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620361229544375282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரபுலகில் சமீபகாலமாக வெகுமக்கள் கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. டுனிசியா தொடங்கி கடல் அலையின் சுற்றுபரப்பு மாதிரி பக்கத்து நாடுகளும் கிளர்ந்து வருகின்றன. இதைப்பற்றி இந்திய ஆங்கில மற்றும் பிற ஊடகங்களும், தமிழ் தினசரி மற்றும் தொலைக்காட்சிகளும் தினச்செய்திகளை அளித்து வருகின்றன. உலகச்செய்திகள் என்ற அடிப்படையில் ஒரு பத்தியில் செய்தியை வெளியிடும் பத்திரிகையும் உண்டு. பருவகாலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் தமிழ் சிற்றிதழ்களில் அரபுலக புரட்சியை பற்றிய செய்தி துணுக்குகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் ஏராளமாக வெளிவந்து விட்டன. அவற்றில் பெரும்பாலானவை தொலைக்காட்சி செய்திகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. அரபுலகம் குறித்து அதிகம் அவதானித்து எழுதியவன் என்ற அடிப்படையில் நானும் அதற்குள் விழுந்து விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தேன். அதனால் தான் பல பத்திரிகைகளில் இருந்து அரபுலக புரட்சியை குறித்த கட்டுரைகள் என்னிடத்தில் கேட்கப்பட்ட போது மறுத்து வந்தேன். ஒரு தினசரியின் நிருபர் என்ற தகுதிநிலையை தாண்ட வேண்டும் என்பதே என் காத்திருப்புக்கு காரணம். எவ்வித நிகழ்வுகள் குறித்த எழுத்துக்கும் ஆழ்ந்த அவதானமும், தேடல் சார்ந்த மனமும் தேவை. அது குறித்த விரிந்த பார்வையும் அவசியமாகிறது. அப்பொழுது தான் துல்லியதன்மையும், எழுத்திற்கு முழுமையும் கிடைக்கும். ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் பல பத்திரிகைகள் இதற்கு மாறாக நடந்து கொண்டன. தமிழ் சிற்றிதழ்கள் மற்றும் இடைநிலை இதழ்கள் ஈழம் குறித்த கட்டுரைகளை தங்கள் பக்கங்களில் நிரப்பித் தள்ளின.அவை எல்லாமே ஹிட். பதிப்பகங்கள் ஈழம் குறித்த புத்தகங்களை வெளியிட்டன. அவை குறைந்தது ஆயிரம் பிரதிகளாவது விற்றிருக்கும். இதன் தொடர்ச்சியில் தமிழ் இடைநிலை இதழ் ஒன்று அச்சமயத்தில் தான் வெளியிட்ட கட்டுரைகளை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிடுவதற்கு பிரபல ஆங்கில பதிப்பகத்துடன் ஒப்பந்தமே செய்து கொண்டிருக்கிறது. ஈழப்போர் முடிந்த நிலையில் தற்போது அதைப்பற்றியே பேச்சே (ஒரு சில குரல்களை தவிர)எழவில்லை. ஒலிவாங்கிகளின் முன்பு நீட்டி முழக்கும் அரசியல்வாதிகள் கூட மறந்து விட்டார்கள். இப்போது அதைப்பற்றி எழுதினால் அதை வெளியிடுவதற்கு எந்த சிறுபத்திரிகையும் தயாரில்லை.ரேட்டிங் குறைந்து விட்டது என்பார்கள். இடைநிலை இதழ்களுக்கு யாராவது ஈழம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை அனுப்பினால் "உங்கள் கட்டுரை தேர்வாகவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தங்களின் ஆர்வத்திற்கு நன்றி" என்று தபால் அட்டை வீட்டுக்கு வரும்.அன்றாடம் நம் முன் செய்திகள் கொட்டிக்குவிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் எல்லாவித மக்கள் போராட்டங்களும், கிளர்ச்சிகளும் வரலாற்றின் முன் வெறும்செய்தி என்ற அந்தஸ்தை பெற்றிருப்பது பெரும் துயரமே. அதற்கு சிற்றிதழ்களும் பலியாகி இருப்பது மிகப்பெரும் சாபக்கேடு.&lt;br /&gt;&lt;br /&gt;அரபுலக புரட்சியின் வேர்களை இஸ்லாத்தின் வரலாற்று ரீதியிலான ஆட்சி அமைப்பு முறையில் இருந்தே நாம் அணுக வேண்டும். நபியின் காலத்தில் அரபுலகில் வலுவான,முறைப்படியான அரசமைப்பு எதுவும் இருக்கவில்லை. அது பதூயின் என்ற அரபு பழங்குடிகளையும், குரைஷ் என்ற உயர்குல குழுக்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. தன்னுடைய இறுதிகாலத்தில் நபி இதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் அது ஆட்சி நிர்வாகம் என்ற கட்டமைப்பை சரியாக உட்கொண்டிருக்கவில்லை. அது இந்தியாவின் கிராம பஞ்சாயத்து முறையின் திரிந்த வடிவமாக இருந்தது. அதன்பின் கி.பி 632 ல் இஸ்லாமிய வரலாற்றில் முதன்முதலாக கலிபாக்கள் உருவானார்கள். நபிக்கு பிறகு அபுபக்கர், உமர், உதுமான் மற்றும் அலி ஆகியோரின் தலைமையில் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்றது. இது அரேபிய தீபகற்பம் முதல் மொராக்கோ வரை நீண்டிருந்தது. வரலாற்றாசிரியர்கள் இதை ராஷிதுன் காலம் என்கிறார்கள். இஸ்லாமிய வரலாற்றில் பெரும் உள்நாட்டு மற்றும் அயல் போர்கள் இக்காலத்தில் தான் தொடங்கின. மதத்திற்கு தங்கள் சுயம் சார்ந்த விளக்கீட்டை கொண்ட பல இஸ்லாமிய குழுக்கள் இக்காலகட்டத்தில் தான் உருவாயின.அரபுலகைப்பற்றி ஆராய்ந்த ஆங்கில வரலாற்றாசிரியரான பிரட் டோனர் தன்னுடைய " The early Islamic Conquests " என்ற நூலில் அரபுலகின் தற்போதைய மன்னராட்சி முறைக்கு ராஷிதுன் கலிபாக்களின் காலத்திலேயே தொடக்கமிடப்பட்டு விட்டது என்கிறார். அப்போது சரியான தேர்ந்தெடுப்பு முறைகள் இல்லை. நிர்வாக கவுன்சில் முறையும் இல்லை. இவற்றின் தர்க்க ரீதியான தொடர்ச்சி தான் தற்போதைய அரபுலக ஆட்சி கட்டமைப்பு என்கிறார். இதை முற்றிலும் மறுப்பதற்கில்லை. காரணம் இஸ்லாமின் ஆரம்பகாலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்த உதுமானிய பேரரசு காலம் வரையிலும் அத்தகைய தாக்கத்தை காண முடியும். ராஷிதுன் காலத்திற்கு பிறகு உமய்யத்கள் ஆட்சிக்கு வந்தார்கள். இது கி.பி 661 ல் தொடங்கி கி.பி 750 வரை நீண்டது. பிறகு நபியின் வழித்தோன்றல்களான அப்பாஸிட்கள்  அவர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். இந்த யுகம் இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலம் என வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. இவர்களின் காலத்தில் தான் அரபுலகில் அறிவியல், கணிதம்,தத்துவம், இலக்கியம், கட்டிடக்கலை மற்றும் மருத்துவ துறைகளில் பெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அறிவியல் ஆய்வுக்காக ஈராக்கில் தனி ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. அந்த வகையில் இஸ்லாமை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர்கள் இவர்களே. அப்பாஸிட்களான இவர்களின் ஆட்சி கி.பி 1513 வரை நீண்டது. அதன்பிறகு இஸ்லாமிய நவீனயுக ஆட்சியாளர்களான துருக்கிய உதுமானிய பேரரசின் கீழ் அரபுலகம் வந்தது.இவர்களின் ஆட்சி 1922 ல் முதல் உலகப்போரை ஒட்டி முடிவுக்கு வந்தது. உலக வரலாற்றில் பேரரசு என்ற கோட்பாட்டிற்கு சரியான வடிவம் கொடுத்தவர்கள் இவர்கள். இதனடிப்படையில் துருக்கிய உதுமானிய பேரரசு, ஈரானிய சபாவித் பேரரசு, முகலாய பேரரசு இம்மூன்றும் வரலாற்று ரீதியாக உலகின் பெரும் பேரரசாக தன்னை நிலைநிறுத்தியவை. இதன் தொடர்ச்சியில் இருந்து தான் நாம் அரபுலகின் தற்போதைய கிளர்ச்சியை அணுக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த டிசம்பரில் டுனிஷியாவில் ஏற்பட்ட இப்புரட்சியானது தற்போது அரபுலகின் எல்லா இடங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது.தலைநகர் டுனிஸில் நடைபாதை வியபாரியான முகமது பயாஸி என்ற இளைஞன் ஒருவன் போலீஸால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தீக்குளித்து தற்கொலை செய்ததன் எதிரொலியே இதற்கான தொடக்கம். ஜனநாயக நாடுகளில் இம்மாதிரியான தீக்குளிப்பு மரணங்கள் வெறும் தற்கொலை என்ற வரையறுப்போடும் அது சார்ந்து எழும் கண்டனம் என்ற எதிர்வினையோடும்  அடங்கி விடும். ஆனால் அரபுலகில் இது ஒரு புரட்சிக்கான தொடக்கமாக   மாறி இருப்பது கீழைநாடுகள் புரட்சி பற்றிய புதிய அர்த்தப்பாட்டை உலகிற்கு வழங்கும் முயற்சியே.  இருபதாம் நூற்றான்டில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட அரபு நாடுகள் அப்போது மேற்கின் அரசியல் கோட்பாடுகளாக இருந்த மதசார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றில் மீது அவநம்பிக்கையை கொண்டிருந்தன. அதன் விளைவாக தங்களுக்கான ஆட்சியமைப்பை அவை இஸ்லாமிய வரலாறுகளிலிருந்தும், பேரரசுகளிடமிருந்தும் எடுத்துக்கொண்டன. கிளர்ச்சி எழுந்த காலகட்டத்தில் டுனிஷிய அதிபராக இருந்த பென் அலி சுமார் 25 ஆண்டுகளாக தொடர்ந்து அப்பொறுப்பை வகித்து வந்தார். சர்வாதிகார ஆட்சி முறையின் முக்கிய அம்சமே அது கருத்துரிமையை அனுமதிக்காது. எல்லா குரல்களுமே ஆட்சியாளரின் டம்மி குரலாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்ற பிரக்ஞை அந்நாட்டு மக்களிடம் எழாமல் பார்த்துக்கொள்ளும். இதனடிப்படையில் டுனிஷியாவில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், கல்வியறிவின்மை, பேச்சுரிமை இல்லாமை போன்றவை தொடர்ந்தன.அரசுக்கு எதிரான பேச்சுக்கள் மற்றும் எழுத்துகள் எல்லாம் ராஜதுரோகமாக பார்க்கப்படும். இந்நிலையில் அரபு இளைஞர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு என்னிடத்தில் சொன்னது ஞாபகத்தில் வருகிறது."உங்கள் நாட்டு அரசு மீது உங்களுக்கு உருவாகும் வெறுப்புணர்ச்சி என்பது ஜந்தாண்டுகள் மட்டுமே நீடிக்கும். அதன் பிறகு நீங்கள் அவர்களை மாற்ற முடியும். ஆனால் நாங்கள் காலம் முழுவதும் அதை உள்ளிருத்திக்கொள்ள வேண்டியது தான். எங்களுக்கு வேறு தேர்வுகள் இல்லை" ஆனால் ஜனநாயக அமைப்பு முறை கொண்ட இந்தியாவிலும் தற்போது கட்சி அரசியல் என்பது கிரிமினல்மயமாக்கப்பட்ட ஒன்றாகவும், பிழைப்புவாதமாகவும் மாறி இருக்கிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் இதையே நாம் திருப்பி திருப்பி நிகழ்த்துகிறோம். இந்நிலையில் டுனிஷிய முழுவதும் தொடங்கிய கிளர்ச்சி அந்நாட்டு அதிபரான பென் அலி பதவியை துறக்கும் நோக்கத்தை வென்றது. இது மல்லிகை புரட்சியாக வர்ணிக்கப்பட்டது. மல்லிகை என்பது அந்நாட்டு தேசிய மலர். டுனிஷிய கிளர்ச்சியை தொடர்ந்து அதன் தாக்கம் எகிப்திலும் ஏற்பட்டது. எகிப்து வரலாற்று அடிப்படையில் பண்டைய நாகரீகங்களின் தொடக்கம். அரபு மக்கள் தொகையில் பாதிக்கும் மேலான எண்ணிக்கையை கொண்டது எகிப்து. பரப்பிலும் பெரியது இதுவே.புகழ்பெற்ற பிரமிடுகளின் இருப்பிடம். கெய்ரோ, அஸ்வான், அஸ்யூத், அலெக்சாண்டிரியா, சினாய் போன்ற அதன் நகரங்கள் புகழ்பெற்றவை. உலகின் முக்கிய நதியான நைல் இங்கு தான் உருவாகி பாய்ந்தோடுகிறது. அதன் வனப்பு மனபிரதிபலிப்புக்குட்பட்டது. பிரெஞ்சு பேரரசரான நெப்போலியன் 1798 ஆம் ஆண்டு எகிப்தை கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு தேசியவாதத்திற்கான கரு விதைக்கப்படுகிறது. பின் தொடர்ந்த வருடங்களில் உதுமானிய பேரரசு துணையுடன் முஹம்மது அலி எகிப்தை நெப்போலியனிடமிருந்து மீட்டெடுத்தார். பிந்தைய கட்டத்தில் எகிப்து பிரிட்டனின் மறைமுக கட்டுப்பாட்டில் வந்தது.அதனை தொடர்ந்து முதல் உலகப்போருக்கு பின் நடந்த தேர்தலில் ஷாத் சஹ்லுல் அவரின் வப்த் கட்சி பெரும்பான்மை பெற்றது. ஆனால் அப்போது பிரிட்டன் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஷாத் சஹ்லுல் மற்றும் அவரது ஆதரவாளர்களை மால்டோவிற்கு நாடு கடத்தியது. இதனை தொடர்ந்து எகிப்து பெரும் அளவில் கிளர்ந்தது. இதுவே வரலாற்றில் முதல் நவீன அரபு புரட்சியாக வரையறுக்கப்படுகிறது.அதனை தொடர்ந்து 1923 ல் எகிப்தில் முறைப்படியான அரசியலமைப்புச்சட்டமும், நாடாளுமன்றமும் ஏற்படுத்தப்பட்டது.ஷாத் சஹ்லுல் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆதரவுடன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பிரிட்டன் ஆதரவுடன் நடந்த தொடர்ச்சியான உள்நாட்டு மோதல்களுக்கு பிறகு எகிப்து 1953 ல் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது. முஹம்மது நஹுப் எகிப்தின் முதல் அதிபரானர். இதனிடையே 1923 ல் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அறிஞரான ஹசனுல் பன்னா 1928 ல் இஸ்லாமிய சகோதரத்துவ (Islamic brotherhood)அமைப்பை ஏற்படுத்தினார். இது வஹ்ஹாபியம் என்ற தூய்மைவாத கோட்பாட்டால் அதிகமும் தாக்கமுற்றிருந்தது. பின்னர் மற்ற நாடுகளுக்கும் கிளைபரப்பியது. இது நஹுப்பிற்கு எதிராக களத்தில் இறங்கியது. பின்னர் நஹுப் எகிப்திய தேசிய இயக்கத்தலைவரான கமால் அப்துல் நாசரால் 1954 ல் பதவியிறக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் 1956 ல் கமால் அப்துல் நாசர் எகிப்திய அதிபராக பொறுப்பேற்றார். இவரின் ஆட்சிகாலம் எகிப்தின் மறுமலர்ச்சி யுகமாகும். கல்வித்துறையில் புகழ்பெற்ற நவீனத்துவ சிந்தனையாளரான தாஹா உசேன் அமைச்சராக இருந்து பெரும் சாதனைகளை நிகழ்த்தினார்.விவசாய புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. பல அணைகள் கட்டப்பட்டன. வட ஆப்ரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் பாலமாக இருந்த செயற்கை நீரோட்டமான சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்டது.  அதன் முன்னர் சூயஸ் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரிட்டன் அதை நாசருக்கு எதிரான நிலைகுலையும் குறியீடாக பார்த்தது.1956 ல் அங்கு பிரிட்டன் படைகளுக்கும் நாசரின் படைகளுக்கும் மோதல் ஏற்பட்டன.  அதன் பிறகு சோவியத்யூனியனின் தலையீட்டிற்கு பின் பிரிட்டானிய படைகள் அங்கிருந்து முழுமையாக வாபஸ் பெற்றன. 1956 ல் நடந்த இப்போர் வரலாற்றில் முதல் எண்ணெய் போராக வர்ணிக்கப்படுகிறது. இதன் பின்னர் 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் எகிப்தின் சினாய் மீது தாக்குதல் தொடுத்து அதனை கைப்பற்றியது. இதன் காரணமாக இஸ்ரேலுக்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்றது. முதன் முதலாக அரபு நாடுகள் இணைந்து போரிட்டது இந்த போரில் தான். ஆனால் அது தோல்வியில் தான் முடிவடைந்தது. நாசரின் மரணத்திற்கு பின் 1970 ல் அன்வர் சாதத் அதிபராக பொறுப்பேற்றார்.அவர் இஸ்ரேலிடம் இழந்த பகுதியை மீட்பதற்கு கடுமையாக போராடினார். பின்னர் சினாய் மலைப்பகுதி தொடர்பாக எகிப்து-இஸ்ரேல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அன்வர் சாதத் சோவியத் சார்பு நிலையிலிருந்து அமெரிக்க சார்பு நிலை எடுத்தார். நாசரின் காலத்திய கொள்கைகள் மற்றும் நிலைபாடுகள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து எகிப்தின் நூறாண்டுகளின் தனிமை முடிவுக்கு வந்தது. அன்வரின் மரணத்திற்கு பின்னர் 1981 ல் தற்போது பதவி விலகிய ஹுஸ்னி முபாரக் அதிகாரமேற்றார். அவரின் நிலைபாடும் அமெரிக்க சார்பாகவே இருந்தது. ஏற்கனவே நீர்த்து உறை கொண்டிருந்த வேலையின்மையும், வறுமையும் இம்மக்களை கிளர்ந்தெழ செய்தன. டுனிஷிய புரட்சி முடிவடைந்த சூழலில் தலைநகர் கெய்ரோவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். தொடர்ச்சியான பல போராட்டங்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி  கெய்ரோவில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு முபாரக் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். வரலாற்றடிப்படையில் சதுக்கங்கள் புரட்சியின் குறியீடாக இருந்திருக்கின்றன. உலகளாவிய நிலையில் சதுக்கங்களின் தோற்றம் என்பது நகரம் என்ற கட்டமைப்பின் வெளிப்பாடே. இது ஆறாயிரம் ஆண்டுகள் முந்தைய வரலாற்றைக்கொண்டது. நகர அமைப்பின் தோற்றத்தில் சதுக்கங்கள் முக்கிய வர்த்தக பரிமாற்ற ஸ்தலமாக இருந்திருக்கின்றன.அன்றைய கட்டத்தில் தகவல் தொடர்பு என்பது போக்குவரத்தாக இருந்த நிலையில் சதுக்கம் என்பது தகவல் தொடர்பு மையமாக இருந்தது.சுருக்கமாக குறிப்பிட்டால் நகர கட்டமைப்பின் உயிர்நாடியே இந்த சதுக்கங்கள் தான். மேலும் மனித வளர்ச்சியின் குறியீடாகவும் இருந்தன. இவ்வகையில் பொனிஷிய சதுக்கம், லண்டன் சதுக்கம், மாஸ்கோ பீட்டர்ஸ் சதுக்கம், சீனாவின் தியாமென் சதுக்கம் ஆகியவை முக்கியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கிளர்ச்சி நடைபெற்று வரும் லிபியா வட ஆப்ரிக்கா மற்றும் அரபு நாடுகளிலேயே மிக அதிக மனித வளர்ச்சி குறியீட்டை கொண்டது.(Human development index)இந்த குறியீடு தான் அதன் பெரும் பலம். மேலும் உலகின் எண்ணெய் தேக்கத்தில் லிபியா முக்கிய இடத்தை வகிக்கிறது.தற்போதைய கடாபி அரசுக்கு எதிராக அமெரிக்காவின் தலையீட்டிற்கு இந்த எண்ணெய் அரசியலே காரணம். எண்ணெய் என்பது அமெரிக்காவின் உயிர்நாடியாக இருப்பதே அதற்கு மற்றொரு காரணம்.நிலவியல் அடிப்படையில் லிபியா அதிகமான மலைகளையும், சமவெளியையும் கொண்டது.இஸ்லாமுக்கு முந்தைய கட்டத்தில் இது கிரேக்கர்களாலும், ரோமானியர்களாலும் ஆளப்பட்டது. இஸ்லாத்தின் தோற்றத்திற்கு பிறகு கி.பி 1551 வரை லிபியா அரபு மன்னர்களான உமய்யத்களாலும், அப்பாஸிட்களாலும் ஆளப்பட்டது. பின்னர் துருக்கிய உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. உதுமானிய பேரரசு லிபியாவை முதல் உலகப்போர் வரை ஆளுகை செலுத்தியது. பின்னர் 1911 ல் இத்தாலி அதை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. லிபியா என்ற பெயரே இத்தாலிய புவியியல் அறிஞர் ஒருவரால் தான் வழங்கப்பட்டது. இதனிடையே இதன் நிலப்பரப்பின் குறிப்பிட்ட பகுதிகளை பிரிட்டனும், பிரான்சும் தங்களுக்குள் கூறு போட்டுக்கொண்டன. மேற்கத்திய காலனியமயமாக்கலுக்கு எதிராக கீழை நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்ட போது லிபியர்களும் கிளர்ந்தார்கள். உமர் முக்தார் தலைமையிலான தேசிய இயக்கம் லிபியாவின் விடுதலைக்காக போராடியது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 1951 ல் லிபியா இத்தாலியிடமிருந்து விடுதலை பெற்றது. இந்நிலையில் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவது தொடர்பாக  அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டது. அதன் பிறகு இத்ரிஸ் தலைமையிலான ஆட்சி ஏற்பட்டது.இத்ரிஸ் லிபியாவை முன்னெடுத்து செல்லும் நிலையில் மீண்டும் உள்குழப்பங்கள் ஏற்பட்டன. அவரிடமிருந்து 1969 ல் 27 வயது ராணுவதளபதியான முஹம்மது கடாபி ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் கடாபி லிபியாவின் பெயரை சோசலிச அரபு குடியரசு லிபியா என்பதாக மாற்றினார். கடாபி தனக்கான கோட்பாட்டு தளத்தை நிறுவ முயற்சித்தாலும் அங்கு மேற்கத்திய ஆதரவோடு செயல்பட்டு வரும் எதிர் குழுக்களை சமாளிப்பது  கடாபிக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது.1973 ல் நிலவில் இருந்த சட்டத்தை மாற்றி விட்டு இஸ்லாமிய அடிப்படையை சட்டமாக அமல்படுத்தினார். தனக்கு எதிராக செயல்பட்ட குழுக்களின் பிரதிநிதிகளை எல்லாம் தன் இராணுவத்தை பயன்படுத்தி கொலை செய்தார். எகிப்து- இஸ்ரேல் உடன்பாட்டை கண்டித்த கடாபி அது அரபுலகிற்கு மிகப்பெரும் அவமானம் என்றார். பிந்தைய கட்டத்தில் எல்லை பிரச்சினைக்காக எகிப்துடன் நான்கு நாள் யுத்தத்தை நடத்தினார்.அரசினுடைய கொள்கை பரப்பிற்காக தனி தொலைக்காட்சி சேனலை நிறுவினார். ஆனாலும் கடாபியின் எதேச்சதிகார போக்கு, சமூக பொருளாதார பார்வையின் குறைபாடு காரணமாக ஆப்ரிக்க பிராந்தியத்தில் லிபியா இன்று வறுமையையும், ஸ்திரமற்ற தன்மையையும் உட்கொண்டிருக்கிறது. எண்ணெய் வளம் மிகுந்திருந்தும் வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை வகுக்க முடியாதது அதன் பெரும் சறுக்கலே.தற்போது அதன் மீது போர் தொடுத்து வரும் அமெரிக்க தலைமையிலான பன்னாட்டுப்படைகளின் நோக்கம் என்பதே வளைகுடா பிராந்தியத்திற்கு பிறகு ஆப்ரிக்க பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே. சதாமிற்கு பிறகு கடாபி அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக இருக்கிறார்.  ஒருவகையில் இது அமெரிக்காவின் புவி அரசியல் வெளிப்பாடே. லிபியாவின்  தற்போதைய உள்நாட்டுச்சூழல் என்பது பிழைப்புக்காக வளைகுடா நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் கேரளாவை சேர்ந்த மலையாளிகள் ஒட்டுமொத்தமாக கேரளாவிற்கு திரும்பினால் அதன் விளைவு எப்படி இருக்குமோ அது மாதிரியே.&lt;br /&gt;&lt;br /&gt;டுனிஷியாவில் தொடங்கி வளைகுடா நாடான பஹ்ரைன் வரை நீண்டிருக்கும் இக்கிளர்ச்சி இருபத்தோராம் நூற்றாண்டில் பதியமிடப்போகும் ஒன்று. பல்வேறு புரட்சிகளை சந்தித்த இருபதாம் நூற்றாண்டு உலகின் ஒழுங்கை வெகுவாக மாற்றியது. தகவல் தொழில்நுட்ப புரட்சியின் ஆழ்பிரதிபலிப்பு பிரதேச கிளர்ச்சியில் மக்களை ஒருங்கிணைக்கும் பெருங்கருவியாக மாறி இருக்கிறது. குறிப்பாக மேற்கத்தியர்களால் விளையாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட Facebook மற்றும் Twiiter ஆகிய சமூக வலைத்தளங்கள்  அரபு நாடுகளில் மக்களை திரட்டிய ஒருங்கிணையாக மாறியது ஆச்சரியமே. தகவல் தொழில்நுட்பத்தில் உலகிலேயே உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் இது சாத்தியமா என்பது சந்தேகமே.காரணம் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு குறைந்த பட்ச அடிப்படையான வாக்களிப்பது பற்றியவிழிப்புணர்வே ஏற்படவில்லை. இந்தியாவில் வாக்கு என்பது பண்டமாகி விட்ட இச்சூழலில் சமூக வலைத்தளங்கள் அதற்கு அந்நியமே.உலகில் ஒரே மொழியை பேசக்கூடிய வேறு கண்டங்களில் வாழும் மக்கள் தொகுதியை கொண்டவர்கள்  அரேபியர்கள். டயஸ்போராவாக பல்வேறு மேற்கத்திய நாடுகளில் பரந்து வாழ்கிறார்கள்.ஆனால் அவர்கள் தாங்கள் அரேபியர்கள் என்பதை விட குறிப்பிட்ட பிரதேசத்தை சார்ந்தவர்கள் என்பதில் தான் பெருமை கொள்கிறார்கள் என்கிறார் மார்க்சிய பொருளாதார நிபுணரான சமீர் அமீன். அரபு தேசியவாதம் மொழி என்பதைவிட பிரதேச நலன் சார்ந்து தான் முன்னிலைப்படுத்தப்பட்டது என்கிறார் சமீர். அரபு பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்லப்பார்வையாக இருந்த வளைகுடா நாடுகளிலும் இப்புரட்சி தொடர்கிறது. பஹ்ரைன், சவூதி, ஓமன் நாடுகளில் இது தொடங்கிய நிலையிலேயே அடக்கப்பட்டு விட்டது. பஹ்ரைன் மட்டும் அடக்குவற்கு மிகுந்த சிரமப்படுகிறது. எல்லாவித புரட்சிகளும் வரலாற்றை மாற்றி எழுதவும் , திருப்பி எழுதவுமே செய்ய வேண்டும். அரபுலகை பொறுத்தவரை இந்த சாத்தியபாட்டின் எல்லை வளைநெளிதலாகவே இருக்கிறது. அரபு நாட்டின் எதேச்சதிகார ஆட்சியமைப்பும், வாரிசு முறையும் அது வேர்கொண்ட அடிப்படையை மாற்ற முயன்றால் மட்டுமே நடப்பு புரட்சியின் இலக்கு நிறைவேறும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-2343856709292416436?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/2343856709292416436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=2343856709292416436' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/2343856709292416436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/2343856709292416436'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2011/06/blog-post.html' title='புரட்சியின் விளிம்பில் அரபுலகம் - டுனிஷியா தொடங்கி'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-svJnqBcMTM8/Tf-IwqRew_I/AAAAAAAAARc/OD3vNJD4SLo/s72-c/220px-Egyptian_youth_at_the_Benghazi_rally.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-3730203043833797440</id><published>2011-05-28T10:03:00.000+05:30</published><updated>2011-05-28T10:09:27.112+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹசரத் இனாயத் கான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூபிசம்'/><title type='text'>ஒலியலை மிதக்கும் வெளி- ஹசரத் இனாயத்கான் ஓர் அறிமுகம்</title><content type='html'>"ஒலியே வெளித்தோற்றத்தின் உயர்ந்த மூலம். யார் அதன் உள்ளறிவை பெறுகிறார்களோ அவர்கள் பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறிகிறார்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-QpKgnpt6W18/TeB7YRXoIjI/AAAAAAAAAQo/NMgYRBo2Hak/s1600/240px-Hazrat_Inayat_Khan_1916.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 229px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-QpKgnpt6W18/TeB7YRXoIjI/AAAAAAAAAQo/NMgYRBo2Hak/s320/240px-Hazrat_Inayat_Khan_1916.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5611620792613216818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இதய துடிப்பை அறிந்திருக்கிறீர்களா? அதன் அதிர்வை உணர்ந்திருக்கிறீர்களா? அந்த அதிர்வுகள் வெளிப்படுத்தும் லயம் என்பது என்ன?எல்லாமே பிரபஞ்சத்தின் ஒலி அதிர்வுகள் தான்.அந்த ஒலி அதிர்வுகள் தான் அதிர்வின் ஒழுங்கமைப்பு தான் இசை எனப்படுகிறது. இசையே பிரபஞ்ச இயக்கத்தின் மூலக்கூறு. அது தான் வாழ்வை பிரதிபலிக்கிறது. மகிழ்ச்சி, சோகம், துக்கம், துயரம் போன்றவை இசையின் ஏற்றத்தையும் அல்லது இறக்கத்தையும் குறிக்கும். அது வாழ்வின் முரண் அனுபவங்களின் குறியீடு.&lt;br /&gt;&lt;br /&gt;இசையை அல்லது பிரபஞ்ச மூலக்கூறை கருத்தியல் அடிப்படையாக கொண்ட சிஸ்தியா என்னும் சூபிச பிரிவை சார்ந்தவர்  ஹசரத் இனாயத் கான். விரிந்த மற்றும் ஆழமான இசைப்பின்னணியைக் கொண்டது இவர் குடும்பம். பாரசீக சூபிச கருத்தியலின் தாக்கமும் அவர்களிடம் இருந்தது. இத்தகைய பின்னணியில் 1882 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் பரோடாவில் பிறந்தார் இனாயத்கான். இவரின் தந்தை மஷெய்க ரஹ்மத்கான் பஞ்சாபை சேர்ந்தவர். தாயார் கதீஜா பீவி. இவருடைய தந்தைக்கு அன்றைய காலத்தில் இந்திய சுதந்திர போராட்டத்தில் முன்னணியில் இருந்த  வஹாபிய சீர்திருத்த இயக்கத்தின் மீது ஈடுபாடு இருந்தது. இஸ்லாமை மறு உயிர்ப்பு செய்யும் முயற்சியின் மீது ஆர்வம் இருந்தது.அதன் காரணமாக தன் குழந்தையை ஒழுங்கமைப்போடு வழி நடத்தினார். ஆனால் இவரின் பாட்டனார் மௌலாபக்ஷி இசைப்பின்னணியை கொண்டவர். அவரின் முயற்சி காரணமாக இனாயத்கான் இளமை காலத்தில் இந்துஸ்தானி இசையை கற்றார்.இளமை காலத்திலேயே இசை மீதான அவரின் துடிப்பு அதிகமாயிருந்தது. அவரின் தாய் வழி பரம்பரை பிராமண பின்னணியை சார்ந்தது. அதனால் அவருக்கு மற்ற மதங்களைப் பற்றி அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. இளமையில் அவரின் குழந்தை மனத்தில் இறையியல் சம்பந்தமான இயல்பான பல கேள்விகள் உருவாயின. இறைவன் எங்கே? வயது என்ன? மனிதர்கள் இறப்பிற்கு பின் என்னவாகிறார்கள்? ஏன் வழிபட வேண்டும்? இவைகள் அவருக்குள் ஒவ்வொன்றாக ஊடுருவி பாயத்தொடங்கின. விடை தேடி அலையும் மனமாக மாற தொடங்கியது. இளமை காலத்தில் ஒரு தடவை அவர் கிருஷ்ணனின் உருவபடத்தை பார்த்தார். " உன் கடவுள் படமாகவா? அவருக்கு நடனமாட தெரியுமா? பக்கத்து குழந்தையிடம் கேட்டார். "அவருக்கு நடனமாடவும், புல்லாங்குழல் வாசிக்கவும் தெரியும்" குழந்தை மறுபதில் அளித்தது. அப்படியென்றால் நான் உன் கடவுளை விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-5ZQU82bcQKo/TeB7krq2mvI/AAAAAAAAAQw/F2P6dRwK1L4/s1600/220px-Soefietempel_Katwijk.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 220px; height: 136px;" src="http://3.bp.blogspot.com/-5ZQU82bcQKo/TeB7krq2mvI/AAAAAAAAAQw/F2P6dRwK1L4/s320/220px-Soefietempel_Katwijk.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5611621005831609074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் பற்றிய கருத்தாக்கம் இனாயத் கானிடம் இசையின் அலைவியக்கத்திலிருந்து தொடங்கியது. அவர் சூபிகளை போன்று மனிதனில் இறை உருவத்தை கண்டார். "உன்னில் இறைவன்.நீயே இறைவன்" பெருங்கடலில் ஏற்படும் குமிழை போன்று மனிதனுக்கும் இறைவனுக்குமான நெருக்கம் அமைந்திருக்கிறது என்றார். கடலில் ஏற்படும் அலை மறுபடியும் திரும்பி செல்வது மாதிரி இறைக்கோட்பாடு அமைகிறது. இறைவன் மனித சுய/ இருப்பின் சாரமே.&lt;br /&gt;&lt;br /&gt;இசையை ஆழ்ந்து கற்ற அவர் அதன் பின்னணி சார்ந்த பல்வேறு கோட்பாடுகளுக்கு தொடக்கம் அளித்தார். 1902 ஆம் ஆண்டு பரோடாவில் கல்லூரி வேலையி சேர்ந்த அவர் மாணவர்களுக்கு இசையின் அவசியத்தை எடுத்துரைத்தார். மதங்களிடையேயான ஒருமை அவருடைய போதனையின் முக்கிய அம்சமாக இருந்தது. வெளியில் திரியும் பறவையின் சப்தம் ஆழமானது. அது மாதிரியே மரங்களின் நிசப்தமும் மனித அமைதியை குறியீடு செய்கின்றன. அவரின் உள்ளறிவு நிலை என்பது யோகிகளின் கோட்பாட்டை ஒத்தது. மூச்சின் சீரான கட்டுப்பாடு, புனித வார்த்தையை மீண்டும் உச்சரித்தல், ஆழ்ந்த மன ஒருமை, உணர்ச்சிகளை வெளித்தள்ளிய உடல் கட்டுப்பாடு மேற்கண்ட அனைத்தும் இணையும் போது இறையறிதல் நிலையை நாம் அடையலாம். சிஸ்தியா தரீகாவின் படி பரவச நிலையை அடையும் வழி இரவின் தனிமையில் இசைப்பதாகும். இனாயத்கான் இப்பிரபஞ்சத்தை பல தளங்களாக கண்டார்.1. உடல் தளம் 2.உளவியல் தளம் 3.உயிர் தளம் 4.ஆத்ம தளம்  உடல் தளம் பருப்பொருளாலானது. அதன் மீது மூளை என்னும் உளவியல் தளம் அமைந்திருக்கிறது. உயிர்தளம் அதன் உயர்ந்த கட்டமைப்பாகும். இவை மூன்றின் மீதும் இறுதியாக ஆத்ம தளம் அமைந்திருக்கிறது. இவை ஒவ்வொன்றும் தங்களுக்குள் ஊடுருவி கொள்கின்றன. மனித இருப்பானது அதன் உயர்ந்த மற்றும் தாழ்ந்த வடிவங்களை உள்ளடக்கி இருக்கிறது. மனிதன் இந்த பருப்பொருளின் கண்ணோட்டமாக இருப்பின் (Being)உயிர் வடிவில் மாறுகிறான். (ஹைடெக்கரின் இருப்பும் காலமும் என்ற கோட்பாடு இதனை ஒத்திருக்கிறது)காற்றானது அரூபமாக இருக்கிறது. புறத்தூண்டல்கள் மூலமாகவே அது வடிவமைடைகிறது. பிரபஞ்ச வெளியை நிரப்பியிருக்கும் இந்த காற்று சலனமற்ற நிலையில் அரூப ஒலியை உருவாக்கிறது. அரூப ஒலியை சூபிக்கள் சாதே சர்மத் என்கிறார்கள். சாதே சர்மத் என்னும் இந்த அரூப தளத்து ஒலியை தான் ஹீரா குகையில் இருந்த போது முஹம்மது நபி கேட்டார். இந்த ஒலியை "ஆகுக அனைத்தும் அவ்வாறே ஆயின" என்று குர் ஆன் குறிப்பிடுகிறது. ஸ்ரீகிருஷ்ணனின் புல்லாங்குழலும் இதே ஒலியைத்தான் குறிப்பிடுகிறது. குருமார்கள் தங்களுக்குள் அந்தர்முகமாக தேடி அடைந்தவற்றிற்கெல்லாம் மூலமாய் இருந்தது இந்த ஒலி தான். இந்த ஒலியின் திசையை அறிய முடிந்தவனாக இருப்பதால் சூபி முக்காலத்தையும் , வாழ்க்கை தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்திருக்கிறான். உடலின் பத்துவித குழல்கள் மூலமாக வெளிப்படுவதன் காரணமாக இந்த ஒலி பத்து வெவ்வேறு விதமான அம்சங்களில் உருக்கொள்கிறது. ஒலிகளிலேயே மிகப்புனிதமான ஒலி "ஹீ" என்பதாகும். சூபிக்கள் தங்கள் சுழல் தியானத்தின் போது இதைத்தான் உச்சரிக்கிறார்கள். இந்த ஒலி தான் அலை வடிவம் பெற்று இடியோசையாக, கடல் அலையின் சீற்றமாக, மணிகளின் கிண்கிணியாக, வண்டுகளின் ரீங்காரமாக, சிட்டுக்குருவிகளின் கீச்சொலியாக, வீணையின் நாதமாக, சங்கின் ஒலிநாதமாக வெவ்வேறு விதங்களில் ஒலிக்கிறது. இவையாவுமே ஒத்திசைவின் படி இயங்குகின்றன. இந்த ஒலியின் திசை வேகம் தான் பல்வேறுபட்ட இசை வடிவங்களாக நவீன காலத்தில் உருவெடுத்திருக்கின்றன. சூபிகளின் சிஸ்தியா தரீகாவின் விரிவான அடித்தளம் இது தான். ஹசரத் இனாயத் கான் தத்துவார்த்த பிரசாரத்திற்காக பிரிட்டன், பிரான்சு, பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து போன்ற பல நாடுகளுக்கும் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Cgezq7BkNVA/TeB7x8-EgOI/AAAAAAAAAQ4/u_I9Cb095GI/s1600/41EF9o8TUwL__SL500_AA300_.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-Cgezq7BkNVA/TeB7x8-EgOI/AAAAAAAAAQ4/u_I9Cb095GI/s320/41EF9o8TUwL__SL500_AA300_.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5611621233813913826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனாயத்கான் தன் இறுதிகாலத்தில் இந்தியமக்கள் எல்லோரிடையேயான இணக்கமான சூழ்நிலைக்கு முயற்சிகள் மேற்கொண்டார். லண்டனில் அவர் சந்தித்த முஸ்லிம் நண்பர்களிடத்தில் மனிதர்களுக்கிடையேயான இணக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். தன்னுடைய தியானமையத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை பங்குபெறச்செயதார். இதில் குஜராத் தலித்களும் கலந்து கொண்டனர். 1916 ல் பரோடாவில் நடந்த அகில இந்திய இசை மாநாட்டில் கலந்து கொண்டு இசைப்பற்றிய தன் ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்தினார். இசையும், கவிதையும் உள்வளர்ச்சிக்கான கருவிகள் என்றார். அதற்காக பல பாரசீக சூபி கவிதைகளை கையாண்டார். மனித உள் அனுபவம், மரணம் பற்றிய பயத்தை முடிவுக்கு கொண்டு வருகிறது. காரணம் மரணம் என்பது உடலை மட்டுமே முடிவுக்கு கொண்டு வரும் சாதனம் என்று அறிந்திருக்கிறான். அவனின் உள் இருப்பை அல்ல. தன் வாழ்வின் இறுதி நாட்களில் இனாயத் கான் இந்தியாவின் பல இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். பன்னிரெண்டு நாடுகளில் சூபி மையத்தை ஏற்படுத்தினார். 1926 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பிய அவர் அதற்கு அடுத்த ஆண்டில் மரணமடைந்தார். இவரின் தர்கா குஜராத் மாநிலம் பரோடாவில் அமைந்திருக்கிறது. குஜராத் கலவரத்தை ஒட்டி கலவரக்காரர்களால் இவரின் தர்கா தகர்க்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;(ஒரு சிறுபத்திரிகைக்காக சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை இது. வலைப்பதிவு வாசகர்களுக்காக இங்கு மீள்பதிப்பு செய்யப்படுகிறது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-3730203043833797440?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/3730203043833797440/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=3730203043833797440' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/3730203043833797440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/3730203043833797440'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2011/05/blog-post_27.html' title='ஒலியலை மிதக்கும் வெளி- ஹசரத் இனாயத்கான் ஓர் அறிமுகம்'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-QpKgnpt6W18/TeB7YRXoIjI/AAAAAAAAAQo/NMgYRBo2Hak/s72-c/240px-Hazrat_Inayat_Khan_1916.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-4195668611695820917</id><published>2011-05-05T16:19:00.000+05:30</published><updated>2011-05-05T16:44:13.527+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆம்பூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகூர் ரூமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகிய பெரியவன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீழைச்சிந்தனையாளர்கள்'/><title type='text'>வெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-eOzoba355Bw/TcKCijGjS7I/AAAAAAAAAQQ/rnKt_kQrju0/s1600/DSC00008.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-eOzoba355Bw/TcKCijGjS7I/AAAAAAAAAQQ/rnKt_kQrju0/s320/DSC00008.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5603184416452201394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                                                          &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சிற்றிதழ்களில் தற்போது புத்தக விமர்சனமும், புத்தக கவனங்களும் அருகி விட்ட நிலையே காணப்படுகிறது. எல்லாமே கோல்கேட்  மற்றும் ஹமாம் நலங்கு மாவு விளம்பரம் மாதிரி ஆகி விட்டது.மற்றொரு வகையில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முகங்களின் புத்தகங்களே கவனம் பெறுகின்றன. தற்போதைய இலக்கிய சூழல் இடைநிலை பத்திரிகைகள் மற்றும் வெகுஜன பத்திரிகைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் குப்பை மேடுகள் உருவாவதும் அதை கொண்டாடுவதும் தவிர்க்க முடியாததாகி விட்டன. எல்லாமே ஒரு விளையாட்டு தான் என்பது மாதிரி எல்லாமே புத்தகங்கள் தான் என்பதாக மாறிவிட்டன. இந்நிலையில் புத்தக வாசிப்பும், தேர்ந்தெடுப்பும், தேடலும் சலிக்கப்பட முடியாத சூழலாக உருமாறி விட்டன. இதன் தொடர்ச்சியில் புத்தகங்கள் மீதான விமர்சன கூட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை புத்தகத்தைப் பற்றிய அறிமுகத்தையும், மதிப்பீட்டையும் தேர்ந்த வாசகர்களுக்கு அளிக்கின்றன. தமிழ்ச்சூழலில் இம்மாதிரியான கூட்டங்கள் அபூர்வம் என்றாலும் ஆங்காங்கே இருக்கும் ஆர்வலர்களின் முயற்சியால் மிகுந்த சிரமத்தோடு கூட்டங்கள் நடக்கத் தான் செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-KeHqoJyfvzU/TcKC3WGDX9I/AAAAAAAAAQY/EoEXvOWyHqo/s1600/DSC00012.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-KeHqoJyfvzU/TcKC3WGDX9I/AAAAAAAAAQY/EoEXvOWyHqo/s320/DSC00012.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5603184773737701330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-QLarMGXG0co/TcKDLPpE-rI/AAAAAAAAAQg/bDVSh1nADoo/s1600/DSC00010.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-QLarMGXG0co/TcKDLPpE-rI/AAAAAAAAAQg/bDVSh1nADoo/s320/DSC00010.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5603185115602942642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இமைகள் இலக்கிய வட்டம் சார்பாக வேலூர் மாவட்டமான ஆம்பூரில் அதன் இயல்பான வெப்ப கொதிப்பை மீறி மழை நனைத்துச் சென்ற  தணுமையான மாலைவேளையில்  "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்"  என்ற என் சமீபத்திய புத்தகத்திற்கான விமர்சன கூட்டம் அங்குள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் நடந்தது. எழுத்தாளர் நாகூர் ரூமி தொடக்க உரையாற்றினார்.அவரின் பேச்சில் இயல்பான நளித்தனம், அவலங்கள் குறித்த கிண்டல் இவை அதிகம் இருந்தது. மேலும் தமிழுக்கு இது முக்கியமான வரவு என்றும், ஓரியண்டலிசம், பின்காலனியம் குறித்து அறிய விரும்புபவர்கள் இதை அவசியம் படிக்க வேண்டும் என்றார். விமர்சன உரையாற்றிய அழகியபெரியவன் புலம்பெயர்தல் குறித்து இந்நூலிலிருந்து அதிக விவரங்களை சேகரிக்க முடிந்தது என்றார். உலக வரலாற்றில் பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத துயரம், அவர்களின் மனக்கொதிப்பு, வலிகள் இவற்றை விரிவாக எடுத்துரைத்தார். அதற்கான பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளின் சூழல் குறித்த உதாரணங்களை தன் பேச்சில் அடுக்கினார். மேலும் இப்புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கீழைச்சிந்தனையாளர்களின் கருத்தியல் நிலைபாடுகள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்தார். குறிப்பாக கீழ்திசை நாடுகளின் சிந்தனைகள் எவ்வாறு வரலாற்றில் தொடர்ந்து உரையாடுகின்றன என்பதை குறித்த கருத்தையும் முன்வைத்தார்.மேலும் பெண்களை ஒடுக்குவதிலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவதிலும் எல்லா மதங்களுமே ஒரே நேர்கோட்டில் நிற்கின்றன என்ற கருத்தையும் முன்வைத்தார். இந்தியாவில் தலித் ஒடுக்கப்படுவதை இப்புத்தகத்தின் நிலைப்பாட்டிலிருந்து நீட்சியாக பேசினார்.இந்தியாவில் ஒடுக்கும் சமூகம், ஒடுக்கப்படும் சமூகம் இவற்றிற்கிடையேயான முரணின் தாக்கம் வீரியமடைந்து வருவதைப் பற்றியும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்த என் உரையில் விமர்சனங்கள் குறித்த பதிலை முன்வைத்தேன். மேலும் கீழைச்சிந்தனையாளர்கள் குறித்த என் அறிமுகத்தையும் அதனோடு இணைத்துக்கொண்டேன். தொடர்ந்து கவிதை வாசிப்பு நடந்தது. தொடக்க நிலையான,மாறுபட்ட ரசனை உடையவர்கள், புதியவர்கள் என பல்வேறுபட்ட நபர்கள் தங்கள் கவிதைகளை வாசித்தார்கள்.  புத்தகம் பற்றிய சரியான புரிதலோடும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடும் பார்வையாளர்கள் கலைந்து சென்றார்கள்.மொத்த அனுபவமுமே என் ஆம்பூர் பயணத்தை குறித்து கொள்ளும் ஒன்றாக மாற்றியது. இதற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்த கவிஞர் யாழன் ஆதி பாராட்டுக்குரியவர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-4195668611695820917?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/4195668611695820917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=4195668611695820917' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/4195668611695820917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/4195668611695820917'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2011/05/blog-post.html' title='வெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-eOzoba355Bw/TcKCijGjS7I/AAAAAAAAAQQ/rnKt_kQrju0/s72-c/DSC00008.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-4410228028099217441</id><published>2011-04-20T20:18:00.000+05:30</published><updated>2011-04-20T20:37:42.303+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகூர் ரூமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகிய பெரியவன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எச்.பீர்முஹம்மது'/><title type='text'>வேனில் தமிழ் விழா</title><content type='html'>இமைகள் இலக்கிய மற்றும் திரைப்பட இயக்கம் நடத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;வேனில் தமிழ் விழா&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: 23-04-2011 சனிக்கிழமை மாலை 5 மணி&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர், வேலூர் மாவட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை: ஆர். கஜேந்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;வரவேற்புரை: வெற்றிக்கொண்டான்&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கவுரை: நாகூர் ரூமி&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக விமர்சனம்:  எச்.பீர்முஹம்மத்தின் "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்"&lt;br /&gt;&lt;br /&gt;விமர்சன உரை: அழகிய பெரியவன்&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்புரை : எச்.பீர்முஹம்மது&lt;br /&gt;&lt;br /&gt;"19 டி.எம் சாரோனிலிருந்து" நூல் குறித்து கட்டுரை வாசித்தல்:  ந.க. விஜயராஜன்&lt;br /&gt; கவிதை வாசிப்பு &lt;br /&gt;ஒருங்கிணைப்பு : கவிஞர் பகலவன்&lt;br /&gt;&lt;br /&gt;பங்கேற்கும் கவிஞர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ.வெங்கடேசன், தே.கருணா, சு.மு. அகமது, க.இரவி, ஜோதிபாசு, தேவ இளங்கோ, ஞானவேல், தில்லை, வ.பிரேம்குமார் மற்றும் பலர்&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பு : தா.முத்துராமன், கி.பாபு&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வருக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-4410228028099217441?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/4410228028099217441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=4410228028099217441' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/4410228028099217441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/4410228028099217441'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2011/04/blog-post.html' title='வேனில் தமிழ் விழா'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-8068692215588556442</id><published>2011-02-28T12:24:00.000+05:30</published><updated>2011-02-28T12:34:09.811+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாலமன் அரசர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குர்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சலாதீன்'/><title type='text'>சலாதீனின் கல்லறையிலிருந்து- குர்து இனத்தவரின் தோற்றமும் பரிணாமமும்</title><content type='html'>கிழக்கில் அமைந்திருந்த, அமைந்திருக்கிற கலாசாரங்கள், தேசியங்கள் இவற்றின் வரலாறுகள், வாழ்க்கை முறைகள், வழக்கங்கள் இவற்றின் எதார்த்தமானது மேற்கில் சொல்லப்பட்டதை விடவும் மிகப்பெரியதாக இருக்கிறது.&lt;br /&gt;          &lt;br /&gt;                                              -எட்வர்ட் செய்த்&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய கிழக்கின் பெரிய இனங்களான துருக்கியர்கள், அராபியர்கள், பாரசீகர்கள் போன்றே குர்துக்களும் அதன் வரிசையில் வரக்கூடியவர்கள். இவர்களின்  வாழிடங்கள் ஈராக்கின் வடபகுதியிலும், ஈரானின் வட மேற்கு பகுதியிலும் சிரியா மற்றும் துருக்கியின் குறிப்பிட்ட திசைகளிலும் இருக்கின்றன. எவ்வித வேர்களற்றநிலையிலும் அவர்களின் வாழ்க்கை முறை நகர்ந்து கொண்டிருக்கிறது. குர்துக்களின் வரலாறு அதன் இயக்கப்போக்கில் பல பரிணாமங்களை கொண்டிருக்கிறது. குர்த்துகள் கி.மு ஆறாயிரம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கர்டூச்சி இனக்குழுவின்  தொடர்ச்சியில் வந்தவர்கள். பிந்தைய வரலாற்றாய்வுகள் அவர்கள் கிரேக்க இனத்திற்கு முந்தையவர்கள் என்பதாக குறிப்பிடுகிறது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் கஸைன்கள், மன்னை மற்றும் முஸ்கு போன்ற இனக்குழுக்கள் அசிரிய பகுதியில் வாழ்ந்தன.இவர்களுக்கான வாழ்க்கை முறைகள் இனக்குழுக்களுக்கான கலாசார ஒருமை கூறுகளை கொண்டிருந்தன. இவர்களின் பின் தொடரல் குர்துக்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. மேலும் சாலமன் அரசன் ரோமிலிருந்து பெண்களை கொண்டு வருவதற்கு தன் படைகளுக்கு கட்டளையிட்டதாகவும் அதன்படி அவர்கள் ரோமாபுரி சென்று ஆயிரம் பெண்களை கொண்டு வந்த தருணத்தில் சாலமன் அரசர் இறந்து விட்டதாகவும் பின்னர் அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு அதன் இனப்பெருக்கமே குர்துக்கள் எனவும் ஒரு தொன்மம் நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அசிரிய ஆவணங்களில் குர்து என்ற பெயர் கி.மு ஆயிரம் ஆண்டிலிருந்து காணப்படுகிறது. அசிரியர்கள் இவர்களை குர்தி என்பதாக பெயரிட்டனர். சிரியா மற்றும் ஆசிய மைனரின் மலைப்பகுதிகளில் இவர்கள் வாழ்ந்தனர்.  பிற்காலத்தில் இவர்களில் ஒரு பகுதியினர் ஆப்கானின் பலுசிஸ்தான் பகுதியில் குடியேறினர். இவர்கள் மீண்டும் அந்த பகுதிக்கு திரும்பவில்லை. இவர்களின் பரிணாமமே பலூச்சிகள். பலூச்சி மொழிக்கும் குர்து மொழிக்குமான உறவு என்பது இந்த வரலாற்றின் நேரிடையாக இருக்கிறது. பார்சி மன்னன் சைரஸ் குர்துக்களை ஒடுக்கினார். இந்த ஒடுக்கு முறையை குர்துக்கள் எதிர்கொண்டனர். மேலும் அகேமிய, சசானிய, பார்த்தாணிய அரசுகளின் அடக்குமுறைக்கும் ஆளாயினர். சசானிய அரசர் முதலாம் அர்தாசிருக்கும் குர்து அரசருக்கும் இடையே நடந்த போர் பற்றிய வரலாறு Books of the deeds of ardashir son of Babak என்ற நூலில் காணப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான குர்துக்களை முதலாம் அர்தாசிர் கொன்று குவித்தார். அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் கொல்லப்பட்டனர். பாரசீக கவிஞரான பிர்தவ்ஸியும் இந்த சம்பவம் பற்றி தன்னுடைய சஹ்னாமாவில் குறிப்பிடுகிறார். பிந்தைய காலகட்டத்தில் சசானியர்களால் குர்துக்கள் அதிக எண்ணிக்கையில் நாடு கடத்தப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கலிபாக்களின் ஆட்சி காலம் குர்துக்களின் நகர்வில் இன்னொரு பரிணாமம். அர்மேனியாவின் சஹாதிகள், அசர்பைஜாவின்  ராவான்டிஸ்கள், அனடோலியாவின் ஹஸன்வாயட்கள் போன்றவர்கள் அக்காலகட்டத்தின் குர்து வம்ச அரசுகள். மேலும் அக்காலத்தின் குர்து வம்ச விஞ்ஞானியான அல்-தினாவரி அறிவியலில் குறிப்பிடதக்க பங்களிப்புகளை செய்தார். குர்து இனத்தை பற்றிய வரலாற்றை விரிவாக வெளிக்கொணர்ந்தார். கி.பி 837ல் குர்து வம்சத்தின் ரோசிக் வேன் ஏரிக்கரையில் அக்லாத் என்ற நகரத்தை நிறுவினார். இதன் பின்தொடர்ச்சியை கொண்டு குர்து வம்சம் மத்திய கிழக்கில் தங்களுக்கென குர்திஸ்தான் பகுதியை நிறுவியது. கி.பி பதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில் செலூசிய துருக்கியர்கள் ஈரானை கைப்பற்றியதுடன் பாக்தாத் நகரையும் கைப்பற்றினர். பின்னர் குர்திஸ்தான் பகுதியை தங்களுடன் இணைத்துக்கொண்டனர். யாத்ரீகரான மார்கோ போலோ மொஸல் பகுதியில் குர்துக்களை சந்தித்தார். அவர்களுடைய வாழ்க்கை முறைபாடுகளை பற்றி தன்னுடைய நூல்களில் பதிவு செய்திருக்கிறார். இத்தாலிய குர்திஸ்டான மெர்ரே கலட்டி மார்கோ போலோவின் நூல்களை குர்து மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிமூன்றாம் நூற்றாண்டு குர்துக்களின் துயரமாக இருந்தது. மங்கோலியர்களால் குர்துக்கள் பெரும் கொடூரங்களுக்கு ஆளானார்கள். பதினான்காம் நூற்றாண்டில் தைமூர் குர்துக்களின் நிலப்பகுதியில் பெரும் பகுதியை நாசப்படுத்தினார். இதன் முடிவில் குர்துக்கள் பெரும் இடப்பெயர்வுக்கு உள்ளாக நேர்ந்தது. மங்கோலிய காலத்திற்கு பிறகு இவர்கள் விமோசனமாக அர்தலான், பதினான், பல்திஸ் மற்றும் சோரன் ஆகிய பகுதிகளில் சுதந்திர அரசுகளை நிறுவினர். இந்த நான்கு அரசுகளை பற்றிய குறிப்புகள் ஷரபுதீன் பில்ஸி எழுதிய ஷரப்நாமாவில் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சபாவித் வம்சம் குர்துக்களை மேலும் ஒடுக்கியது. நூற்றுக்கணக்கான குர்துக்கள் அர்மேனிய, அசிரியா, அசர்பைஜான் ஆகிய பகுதிகளிலிருந்து விரட்டப்பட்டு பாரசீகத்தில் தஞ்சம் புக செய்யப்பட்டனர். அவர்களுக்கான தேசிய இனத்தகுதி சிதைக்கப்பட்டது. இதன் நீட்சி இன்னொரு செயல்பாட்டை நோக்கி அவர்களை நகர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;இடைக்கால மத்திய கிழக்கு என்பது குர்துக்களின் பொற்காலமாகும். குர்து படைத்தலைவரான சலாதீன் அய்யூப்  மத்திய கிழக்கில் சிலுவை போராளிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை அவர்களிடமிருந்து மீட்டு அவர்களை ஜெருசலத்திற்குள் நுழையாமல் பார்த்துக் கொண்டார். எகிப்தை தலைமையிடமாக கொண்டு அவர் நடத்திய ஆட்சியமைப்பானது மேற்கத்திய வரலாற்றாசிரியர்களால் இன்றும் குறிக்கப்படுகிறது. அவரின் எல்லையானது அன்டோலியாவிலிருந்து இராக் வரை விரிந்திருந்தது.மேற்கத்திய வரலாற்றாசியர்களான லெஸ்ஸிங் மற்றும் வால்டர் ஸ்காட் ஆகியோர் இவரை நபியின் அடுத்த ஆளுமையாக குறிக்கின்றனர்.பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிபகுதியில் துருக்கிய உதுமானிய அரசுக்கும் குர்துக்களுக்கும் அதிகார பகிர்வு குறித்த உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி குர்து படைத்தலைவரான ஹகிம் இத்ரிஸ் உதுமானிய அரசோடு சேர்ந்து ஈரானின் சபாவித் வம்ச அரசுக்கு எதிராக போரிட்டார். இதன் விளைவாக பாரசீக பகுதி முழுமையும் கைப்பற்றப்பட்டு துருக்கி - ஈரானின் எல்லை வடிவமைப்புக்கு அது உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈராக் குர்துகளின் பெரும் நிலமாகும். ஈராக்கின் வடபகுதியில் தனித்துவமாக வாழ்கிறார்கள். முதல் உலகப்போருக்கு பின் அவர்களின் தேசிய இன உணர்வு வலுப்பெற்றது. தாங்கள் நேரடியான/ மறைமுகமான காலனிய சூழலுக்குள் உட்படுகிறோம்  என்பதை அப்போது தான் பிரக்ஞையுற்றார்கள். காலனிகளில் வன்முறையானது அடிமைப்படுத்தப்பட்ட மனிதர்களை எட்ட நிற்க வைப்பதை மட்டுமே தன் நோக்கமாக கருதுகிறது. அது அவர்களை மனித தன்மையற்றவர்களாக்க முனைகிறது. அவர்களது மரபுகள் மற்றும் மொழியை அழித்து தன்னுடைய மொழி மற்றும் கலாசாரத்தை நுழைக்க அது முயலும். இதை குர்துக்கள் பகுதியாக உணர்ந்து வைத்திருந்தார்கள்.1961 மற்றும் 1975 காலகட்டத்தில் ஈரானின் இராணுவ துணையை வைத்து ஈராக் அரசுக்கு எதிராக போரிட்டனர். இருந்தும் அது குறுகிய காலத்தோடு முடங்கி போனது.  சதாம் அதிகாரத்துக்கு வந்த எழுபதுகள் காலகட்டத்தில் குர்து பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமானது. அவர்களின் சுதந்திரமான உரிமைகள் நுண்மையான முறையில் பறிக்கப்பட்டன. அப்பகுதியில் அரபு மொழியின் ஆதிக்கம் திணிக்கப்பட்டது. வாழ்க்கையை சுயமாக தீர்மானித்து கொள்ள முடியாத மனிதர்களாக அவர்கள் மாறிப்போனார்கள். ஒரு சுயம் சார் சமூக தேடலுக்கான அவசியம் அவர்களுக்குள் ஏற்பட்டது. இதன் நீட்சி தான் தனி குர்திஸ்தான் அமைய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை. இது ஈராக் பிரிட்டிஷ் காலனியிடமிருந்து பிரிந்து தனி அரசாக பிரகடனப்படுத்திய இருபதுகள் &lt;br /&gt;காலகட்டத்திலிருந்தே தொடங்கியது.இதன் விளைவாக அன்றைய ஐ.நா சபை (League of nations) ஈராக் மீது இரு நிபந்தனைகளை விதித்தது. ஒன்று பிரிட்டனின் ஆட்சி அங்கு மேலும் இருபத்தைந்தாண்டுகள் நீடிக்க வேண்டும். இரண்டாவது ஈராக் குர்துக்களின் தனித்தன்மையையும், அவர்களின் மொழியையும் அங்கீகரிக்க வேண்டும். இதற்கான பொறுப்பை பிரிட்டன் ஏற்றுக்கொண்டது. ஆனால் பிரிட்டன் குறுகிய காலத்திற்குள் பின்வாங்க தொடங்கியது.  இந்நிலையில் 1926ல் ஈராக்கில் குர்து மொழியை ஆட்சி மொழியாக அங்கீகரிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. இது சில காலத்திற்கு தொடர்ந்தது. ஆனால் பின்தொடர்ந்த காலகட்டங்களில் நிலைமை எதிர்மாறானது. ஆட்சி மொழி எழுத்தளவில் முடங்கி போனது. தொடர்ச்சியாக பல ஆயுத போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் 1974ல் ஆட்சி மொழி சட்டம் மீண்டும் இயற்றப்பட்டது. மேலும் கல்வியில் குர்து மொழி அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அது சரியான நடைமுறைக்கு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஈராக்கிய பாத் அரசானது குர்துக்களை கடுமையாக நடத்த தொடங்கியது. குர்து பகுதிகளை அரபு மையமாக்க கருதி அவர்களின் சுயாட்சி பகுதியின் எல்லையை சுருக்கி கொண்டது. அவைகள் ஒருங்கிணைந்த அரபு பிராந்தியத்திற்குள் வர வேண்டும் என்று கருதியது. 1971ல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குர்துக்களை ஈரானுக்கு நாடு கடத்த தொடங்கியது. இரு ஆண்டுகளுக்குப் பின் குர்துக்கள் அதிகமாக வசிக்கும் ஈராக்கின் கிராமமான கிர்கிக்கிலிருந்து ஈராக்கின் இராணுவம் அவர்களை வெளியேற்றியது. 1971க்கும்1973 க்கும் இடைப்பட்ட காலத்தில் ராணுவம் குர்து தலைவரான முஸ்தபா பர்சானியை கொல்ல முயற்சித்தது. 1975ல் சதாம் உசேனுடனான உடன்பாட்டிற்கு பின் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குர்துக்கள் சந்தேக நடவடிக்கையின் பேரில் கைது செய்யப்பட்டனர். ஈரானுடனான ஈராக்கின் போர் குர்துக்களை பக்கவாட்டில் ஒடுக்க தொடங்கியது. ஈரானுடன் போர் நெருங்கி வந்த சூழலில் ஈராக் குர்துக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தருணம் இது தான் என்று கருதியது. 1987 ல் ஷேக் வசன் கிராமத்தில் உள்ள எல்லா குர்துக்களும் இராக் அரசின் விஷ வாயுவால் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த வருடத்தில் ஈராக் ஹலப்ஜா நகரத்தில் குர்து பகுதியில் வெடித்த குண்டால் பெரும்பான்மையான குர்துக்கள் இறந்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 1985க்கு பிறகு ஈராக் அரசானது குர்துக்களை தொகை இறக்கம் செய்தது. அவர்களின் கிராமங்கள் காலி செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டன. 1987க்கு பிறகு அநேக குர்து கிராமங்கள் மட்டமாக்கப்பட்டன. புலம் பெயர்தலுக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டனர். அரசின் இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகள் குர்துக்களை இயக்கம் சார்ந்த திரட்சிக்கு உட்படுத்தியது. 1974 ல் பல்கலைகழக மாணவரான ஷேக் அப்துல்லா ஒசலான் குர்து தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தார். இது சுதந்திர குர்துஸ்தானுக்காக போராட தொடங்கியது. இது துருக்கியின் கிழக்கு பகுதியில் இருந்து தன் போர் நடவடிக்கைகளை தொடங்கியது. இந்நிலையில் 1999 ல் ஒசலான் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து இவர்களின்  போராட்டம் தீவிரமடைந்தது. குர்துக்களின்  இந்த சுய நிர்ணய போராட்டம் வடமேற்கு ஈரானிலும் நீண்டது. இரண்டாம் உலக போருக்கு பிந்தைய காலத்தில் குர்துக்கள் வடமேற்கு ஈரானின் மஹாபத் பகுதியில் சோவியத் யூனியனின் துணையுடன் சுதந்திர அரசை நிறுவினர். இது 1947 ல் சோவியத் படையின் பின் வாங்கலோடு உடைந்தது. குர்துக்கள் இந்த தோல்வி இரு ஒடுக்குமுறை அரசுகளுக்கான பலமானது. உலகம் முழுவதும் தேசிய இனபோராட்டங்கள் தீவிரமடைந்து வரும் இக்காலத்தில் மத்திய கிழக்கில் அவர்களின் போராட்டமானது ஆற்று நீரின் ஒட்டமாக சலனமடைந்து வருகிறது. குர்திஸ்தான் உரிமைக்காக ஈராக், ஈரான் துருக்கி மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் அந்த நீரோட்டம் விரிவடைகிறது. இருபதாம்  நூற்றாண்டில் நடுப்பகுதி வரை காலனியம் வேர்கொண்ட சூழலில் ஒரு நூறாண்டு தாண்டியும் அதன் எச்சம் தொடர்ந்து வருவது நாகரீக மோதலின் இன்னொரு தொடர்ச்சியாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-8068692215588556442?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/8068692215588556442/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=8068692215588556442' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/8068692215588556442'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/8068692215588556442'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2011/02/blog-post_27.html' title='சலாதீனின் கல்லறையிலிருந்து- குர்து இனத்தவரின் தோற்றமும் பரிணாமமும்'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-5781893468808235887</id><published>2011-02-11T11:02:00.000+05:30</published><updated>2011-02-21T11:05:24.369+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடையாளம் பதிப்பகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்'/><title type='text'>பின் துரத்துதலின் அரசியல்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-Ahs3GkKtmVg/TWH48h0DKtI/AAAAAAAAAQI/yIvlu0iiGdg/s1600/Photo1086.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/-Ahs3GkKtmVg/TWH48h0DKtI/AAAAAAAAAQI/yIvlu0iiGdg/s320/Photo1086.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5576011532413905618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்" என்ற என் புத்தகத்தின் வெளியீட்டு விழா &lt;br /&gt;05-02-2011 அன்று நாகர்கோவிலில்  நடைபெற்றது.அரங்கத்திற்கு  ஒத்த பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். எல்லோருமே கடைசி வரை நிகழ்வுகளை அவதானித்தார்கள் என்பது மனநிறைவளித்தது.கூட்டத்திற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட எழுத்தாளர் பொன்னீலன் மற்றும் பேராசிரியர் முத்துமோகன் ஆகியோர் கடைசி நேர சிக்கலில் விழுந்து விட்டார்கள். "நாம் நாம்" அமைப்பினர் அவர்கள் வரக்கூடாது என்று சாலையின் குறுக்கே பெரிய மரத்தடிகளை போட்டது தான்  இதற்கு காரணம்.   இவர்களில் பொன்னீலன் வயதான காரணத்தினால் குறுக்கு தடிக்குள்  தான் விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இதை அதற்கான தகுதிப்பாடோடு நாம் தவிர்த்து விடலாம். ஆனால் முத்துமோகன் இதில் தடுக்கி விழுந்து காயம் பட்டது தான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக உள்ளது. சிறந்த பேராசிரியர், கூர்மையான சிந்தனையாளர், எல்லாவித கோட்பாட்டு மோஸ்தர்களையும் தெளிவான பார்வையில் வைக்கக்கூடியவர். அந்த வாசிப்பு அனுபவத்தை எளிமையாக ஸ்பரிசிப்பவர். தமிழ்ச்சூழலில் அ.மார்க்ஸ், தமிழவன் ஆகியோரின் சம வரிசையில் வருபவர். ஒரு கட்டத்தில் தமிழவன் கூட இவரை பார்த்து சின்னதாக நடுங்கியதுண்டு. இப்படியான குணாதிசயத்தை கொண்டவர் என் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருவதாக  ஒத்துக்கொண்டு கடைசி நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்று சொல்லி இயக்கத்தார் போட்ட மரத்தடியில் கால்தடுக்கி விழுந்து தன் காலிலும், கையிலும் பலத்த காயத்தை வரவழைத்துக்கொண்டார்.சாலைகளில் திடீர் மறியல் போராட்டம் நடப்பது மாதிரி தான் இதுவும். இவர்கள் இருவரும் என் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என நாம் நாம் இயக்கத்தார் மிரட்டியதன் மூலம் எனக்கு தேவையான முக்கியத்துவத்தை தந்து விட்டார்களோ என்று கருத தோன்றுகிறது. இந்த விஷயத்தை நான் நேர்மறையான மனோபாவத்தோடு தான் அணுகுகிறேன். தமிழ்நாட்டில் வேறு யாருக்காவது இம்மாதிரியான அனுபவம் (சில தவிர்ப்புகளை நீக்கி விட்டு பார்த்தால்)ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. நான் இதில் "நாம் நாம்" என்று குறிப்பிட்டிருப்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதந்திர இலக்கிய அமைப்பான (சில நேரங்களில் இதில் முதல் எழுத்து ஜம்ப் ஆகி விடும்) தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-1icGYGZdmwM/TVjJ20tuQ3I/AAAAAAAAAP4/tCFiohNjB7s/s1600/Photo1085.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/-1icGYGZdmwM/TVjJ20tuQ3I/AAAAAAAAAP4/tCFiohNjB7s/s320/Photo1085.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5573426482571527026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்சூழலில் நான் உட்பட பலரின் எழுத்து வாழ்க்கை இப்படியான இயக்க பரப்பில் தான் தொடக்கம் பெற்றது. நான், ஜமாலன், அ.மார்க்ஸ், தமிழவன், கோவை ஞானி, பா.கல்யாணி, இராஜேந்திர சோழன், கௌதமசித்தார்த்தன், பெருமாள் முருகன்,சுப்ரபாரதிமணியன், என்.டி.ராஜ்குமார்,விடியல் சிவா போன்ற எல்லோருமே இது மாதிரியான இயக்கங்களின் தொடக்கத்தோடு வந்தவர்கள் தான். இதில் தமிழவன் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தில் இருந்தவர். அவர் அதிலிருந்து வெளிவந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை அவர்கள் அவரை ஒத்துக்கொள்வதோ, பொருட்படுத்துவதோ கிடையாது.அவரும் அதை பொருட்படுத்துவது கிடையாது. இதே மாதிரி தான் மற்றவர்களின் நிலையும். ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை தமிழில் அவர்களுக்கு தெரிந்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,தொ.மு.சி ரகுநாதன் ஆகிய இருவர் மட்டுமே.பின்னர் தான் பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி ஆகியோர் இணைந்து கொண்டார்கள். உலகளாவிய நிலையில் கார்க்கி மட்டுமே இடதுசாரி இயக்க வட்டாரங்களுக்கு பரிச்சயமானவர். இம்மாதிரியான இயக்கங்களின் ஒட்டுமொத்த வாசிப்பனுபவமே இதற்குள் தான் சுழன்று கொண்டிருந்தது. இதில் வினவு புகழ் ம.க.இ.க மட்டும் சற்று வித்தியாசம். தங்கள் இயக்கத்தவர்கள் எந்தெந்த நூல்களை மட்டுமே படிக்க வேண்டும் என்ற விபரப்பட்டியலை அவர்களின் கையில் திணித்து விடுவார்கள். அதன் பின்னர் வாசிப்பு என்பது உறுப்பினர்களின் தேர்ந்தெடுப்பை பொறுத்து அமையும்.எல்லாவித இயக்கங்களும் அதன் நிலையில் தனித்த இயங்குமுறையை கொண்டவை. தங்கள் இயக்கத்தில் புதிதாக வரும் இளைஞர்களின் குறிகளை யாரும் சப்பக்கூடாது என்று தீர்மானம் போட்ட காமெடியான இயக்கமும் உண்டு. இதில் கலை,இலக்கியத்தை அடிப்படையாக வைத்து இயங்கும் இயக்கங்கள் சற்று மாறுபட்டவை. தமிழ்நாட்டில் கழகங்கள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கான இலக்கிய பிரிவை வைத்திருக்கின்றன.இதில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவை சி.பி.ஐ மற்றும் சி.பி.எம்மிற்கு சொந்தமானவை. இதில் த.மு.எ.ச சமீபகாலம் வரை அதிகமும் கட்சியோடு  ஒட்டி தான் இருந்தது. தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றபிறகு தான் அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.(புத்ததேவ் பட்டாச்சார்யாவின் தாக்கமாக இருக்கலாம்.) அவரின் தலைமை அதில் நிறைய இளைஞர்களை ஆகர்சித்திருக்கிறது. அறுபது மற்றும் எழுபதுகள் மாதிரியான வேகமான ஈர்ப்பு தற்போது இல்லாவிட்டாலும் இளைஞர்களின் ஆகர்சம் என்பது இன்றைய கட்டத்தில் சி.பி.எம் யை நோக்கியே இருக்கிறது.அதன் கவர்ச்சிகரமான தலைமையும், இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்த பதிலூட்டமுமே இதற்கு காரணம். இருந்தபோதும் தகுந்த வேகம் இல்லை என்று கடந்த அகில இந்திய மாநாட்டில் அவர்கள் குறைபட்டுக்கொண்டார்கள். ஆனால் சி.பி.ஐ தமிழ்நாட்டு அளவிலும், இந்திய அளவிலும் இந்த குறைபாட்டில் சிக்க காரணம் சி.பி.எம் போன்ற அணுகுமுறையோ, பார்வையோ அதற்குள் இல்லாமல் இருப்பது தான். இன்றளவிலும் சி.பி.ஐயும் அதன் துணை அமைப்புகளும் இதனைப்பற்றி உணராமல் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இதன் இலக்கிய பிரிவை பொறுத்தவரை அதன் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகமும் நிரப்புபவர்கள் அரசு ஊழியர்களே. இவர்கள் திரிபு வாதத்தையே தங்கள் வாழ்நாள் கலாசாரமாக கொண்டவர்கள். கொஞ்சம் இலக்கிய செயல்பாடு, கொஞ்சம் கட்சி செயல்பாடு, கொஞ்சம் தங்களின் சங்க செயல்பாடு இப்படியாக இவர்களின் வேலைத்திட்டம் இருக்கும். இம்மூன்றும் சார்ந்த நிகழ்வுகள், அதன் செயல்திட்டங்கள் ஆகியவை சார்ந்து இவர்களின் ஒட்டுமொத்த பணிக்காலமும் அமையும்.இப்படியான போக்கில் பத்து, இருபது வருடங்கள் என்பவை ஐந்து நிமிடம் போன்று மிகச்சாதாரணமாக இவர்களின் வாழ்வில் கடந்து விடும்.இந்த சிக்கலுக்குள் விழுந்து விடுவதால் சமகால உலகின் போக்கு குறித்த எவ்வித அவதானமோ, பார்வையோ இவர்களிடத்தில் இருப்பது கிடையாது. (ஊதியக்குழு காலகட்டத்தை அவதானிப்பது தவிர)இதன் தர்க்க ரீதியான தொடர்ச்சி தான் ஆறாம் ஊதியக்குழுவில் " இன்று தனியார் துறையில் கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. ஆகவே அவர்களுக்கு இணையான சம்பளம் எங்களுக்கும் வேண்டும்" என்ற மிக அவலமான வாதம் முன் வைக்கப்பட்ட காரணம். தனியார் துறையின் பணிச்சூழல் குறித்த போதிய அறிவு அவர்களுக்கு இருந்தும் தங்கள் நலனுக்கான திட்டமிட்ட மாயையை அரசு சார்ந்த அமைப்பில் ஏற்படுத்தினார்கள். அவ்வாறு தாங்கள் முன் வைத்ததை சாதித்தும் விட்டார்கள். இன்று தனியார் துறை குறித்த அதீத மோகத்தில் பொதுப்புத்தி கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. கைநிறைய என்பது அங்கு பணிபுரியும் படித்த மத்தியதர வர்க்க இளைஞனின் இடுப்பெலும்பு ஒடிந்த நிலையின் பிரதிபலிப்பு தான். அதுவும் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்தே இது பெரும்பாலும் பேசப்படுகிறது. இன்றைய காலகட்டத்திலும் சென்னை போன்ற பெருநகரங்களில் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில்  மாதச்சம்பளம் ரூபாய் 5000 க்கு குறைவாக வேலைபார்க்கும் நிறைய மத்தியதர வர்க்க இளைஞர்களை நாம் பார்க்க முடியும்.இப்படியான தனியார்துறையை குறித்து இவர்கள் கண்டு கொள்வதே கிடையாது. இவர்களின் வாதப்படி கைநிறைய என்பது இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் மட்டும் தான். ஆனால் அங்குள்ள பணிச்சூழல் என்பது கரும்பை விட அதிகமாக பிழிந்தெடுக்கப்படும் நிலையே. மேலும் இன்று எந்த தனியார் துறையிலும் 58 வயது வரையான வேலை என்பதே கிடையாது. அதிகபட்சம் பதினைந்து வருடங்களை தாண்டினால் அது பெரும் சாதனை தான். மேலும்  பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மூன்று மாத கால பிரசவ விடுமுறையும் கிடையாது. நேராக வேலையை ராஜினாமா செய்து விட வேண்டியது தான்.ஒரு தனியார் துறை பணியாளன் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அலுவலகம் சென்ற பிறகு தான் தன்னுடைய அன்றைய பணி உத்தரவாதத்தை உறுதி செய்கிறான். காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அலுவலகத்திற்கு சென்ற உடன் தங்கள் பணிநீக்க உத்தரவை பெற்ற இளைஞர்கள் ஏராளம். தகவல் தொழில்நுட்பத்துறையில் இது மிகச்சாதாரணம். அங்கு நாளைக்கு வேலை என்பதே கிடையாது. பெரும்பாலான பன்னாட்டு கம்பெனிகளில் "Today is your last working day" (இன்று உனக்கு கடைசி வேலை நாள்) என்ற வாக்கியம் மிக பிரபலமானது. அரசு ஊழியர்களின் ஊதிய கோஷம் எழுந்த சில மாதங்களிலேயே உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு விட்டது. அதன் காரணமாக தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலை இழந்தார்கள். இவர்களில்  தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. இப்படியான துயரமான, அவலமான சூழல் தற்போது தனியார் துறையில் நிலவி வருகையில் இந்த கோஷம் மூலம் இந்திய, தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கான குழியை தாங்களே தோண்டிக்கொண்டார்கள். (சமீபத்தில் தாங்கள் வறுமையில் வாடுவதாக  பாராளுமன்றத்தில் காட்டுக்கூச்சல் எழுப்பி தங்களுக்கு மிக உயர்ந்த சம்பளம் வேண்டும் என்று கேட்டு அவ்வாறே தங்கள் பைகளை நிரப்பிக்கொண்ட எம்.பிக்களின் மனோபாவமும் இந்த அரசு ஊழியர்களின் மனோபாவமும் ஒன்று தான்.)  இந்த பிரச்சினையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தந்திர மௌனத்தையே கடைபிடித்தன. மௌனம் கலைப்பதன் மூலம் தங்களின் தொழிற்சங்க பலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பது தான் அதற்கு காரணம். தற்போதைய இந்திய சமூகம் தன் வறுமையோடு மத்திய தரவர்க்கத்தையே அதிகமும் உட்கொண்டிருக்கிறது. இந்த மத்திய தரவர்க்கத்தை அதிகமும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இந்திய அளவில் அரசு ஊழியர்களே. அவர்களின் வாங்கு திறனே சந்தை பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்தாம் ஊதியக்குழு காலகட்டத்திற்கு பிந்தைய இந்தியாவில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. பொதுத்துறை ஊழியர்களை தவிர மற்ற அரசு நிர்வாக ஊழியர்கள் (ஆசிரியர்கள் உட்பட) எல்லாம் இன்று காகிதத் தங்கமாக (paper Gold)மாறி விட்டார்கள்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய இயக்கமும் இதற்கு விதிவிலக்கானதல்ல. நான் மேற்சொன்ன அம்சங்களின் மனோபாவத்தை உள்ளடக்கியது தான். இதனால் தான் அதில் புதிய தலைமுறை இளைஞர்கள் யாரும் நிலைக்க முடியவில்லை.(சென்னை போன்ற பெருநகரங்களிலும் இதே நிலை தான்) அதில் ஒவ்வாமை காரணமாக மன முறிவு ஏற்பட்டு வெளியேறும் இளைஞர்களை "நீ முகவரியற்று நாசமாக போவாய்" என்ற இவர்களின் சபிப்பு  பலரை பாதித்திருக்கிறது.(ஒரு சிலரை தவிர)இவர்களால் சொந்த வாழ்க்கை வீணடிக்கப்பட்டு, நாசமாகி போன இளைஞர்கள் ஏராளம். (ஒரு வேளை பாதிக்கப்பட்டவர்களை வைத்தே அவர்கள் இதை மறுக்கக்கூடும். அதற்கான வலுவை பெற்றிருக்கிறார்கள்) அவர்கள் வாழ்வில் பொருளாதார ரீதியாகவோ, படைப்பு ரீதியாகவோ எவ்வித வளர்ச்சியையும் காண முடியாது. இதில் இணையும் பதின்பருவ இளைஞர்களின் உணர்ச்சிகளையும், பலவீனங்களையும் இந்த அரசு ஊழியர்கள் சரியாக புரிந்து கொள்வதே இதற்கு காரணம். அந்த இளைஞர்களின் அங்க அசைவுகள், நெழிவு சுழிவுகள், குடும்ப பின்னணி, அறிவெல்லை போன்ற அனைத்து அம்சங்களையும் சரியாக உள்வாங்கி கொள்கிறார்கள். இதன் தொடர்ச்சியில் அவர்கள் அணிந்திருக்கும் உள்ளாடையின் நிறம் என்ன என்பது கூட சரியாக தெரிந்து விடும். பதின்பருவ இளைஞர் ஒருவர் கட்டுரை வாசித்தால் அதன் முதல் வரியை வைத்தே இது எந்த புத்தகத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது என்பதை சரியாக சொல்லி விடுவார்கள். இந்த உள்வாங்கும் திறன் புத்தகத்தை அடிப்படையாக வைத்து அல்ல, மாறாக இளைஞர்களின் மீதான அவர்களின் மதிப்பீட்டை அடிப்படையாக வைத்து தான். மேற்கண்ட அம்சங்கள் அனைத்தும் இலட்சிய கனவுகளை சுமந்திருக்கும் இளைஞர்களின் மீது நனவிலி நிலையில் படிந்திருப்பதால் இவர்களின் சாபம் எளிதாக அவர்களை கொன்று விடுகிறது. இதன் தாக்கத்தில் எதார்த்த வாழ்க்கை பற்றிய எவ்வித பிரக்ஞையும் அற்று தோற்றுப்போன இளைஞர்கள் இந்த இயக்கத்தில் நிறைய இருக்கிறார்கள். அதுவும் குமரி மாவட்ட வட்டாரங்களில் நிறையவே உண்டு.இவர்கள் அந்த இளைஞர்களை எளிதில் கை கழுவி விடுவார்கள்.அவ்வாறு ஒருவர் என்னிடத்தில் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் இந்திய ஆயுட் காப்பீட்டு கழக எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற சமயம் அது. அடுத்து நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று விட்டால் அங்கு வேலையில் சேர்ந்து விடலாம்.இளமைக்காலத்திற்குரிய அசட்டுத்தனத்தோடு அப்போது நாம் நாம் அமைப்பில் இணைந்திருந்த அவர் நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது குறித்து அவர்களிடம் கேட்டார். அதற்கு வழக்கமான "எங்களுக்கு தெரியாது" என்ற பதிலே அவர்களிடமிருந்து கிடைத்தது.இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் இவ்வாறு கேட்ட சமயத்தில் ஆயுட் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் பக்கத்தில்  மௌனமாக உட்கார்ந்திருந்தார். இளைஞர்களின் மீதான இவர்களின் அணுகுமுறையும் "நாங்கள் எல்லாம் சுனாமியில் சும்மிங் போடக்கூடியவர்கள்" என்ற ஆடுகளம் படத்தின் வசனமும் ஒன்று தான். தள்ளாடி கொண்டிருக்கும் இளைஞர்களை தக்கவைக்க இவர்கள் ஊட்டும் போதைக்கு அளவேயில்லை. திரைப்பட பாடலாசிரியர்களான அறிவுமதி மற்றும் கவிதாபாரதி போன்றவர்களை எங்கள் அமைப்பை சார்ந்தவர்கள் என்பார்கள். நானறிந்த வரையில் அவர்கள் எங்குமே "நாங்கள் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தை சார்ந்தவர்கள்" என்று சொன்னதே இல்லை. இதை அறிவுமதியின் நண்பர்களே என்னிடத்தில் சொன்னார்கள். "தமிழ்நாட்டு பல்கலைகழகங்கள் எல்லாம் எங்கள் கையில் இருக்கின்றன" என்பார்கள்.  ஏதாவது ஒரு பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஒருவரை தங்கள் கூட்டத்திற்கு அழைப்பார்கள். அவர் வந்து கலந்து கொண்டால் உடனே உறுப்பினராகி விடுவர். இளைஞர்களை மயக்க  இது போன்று இவர்கள் பயன்படுத்தும் உத்திகளை நிறையவே பட்டியலிட முடியும். தங்களின் கை கால்களை பரதநாட்டியம் போன்று ஆட்டிக்கொண்டே பின்நவீனத்துவம்,பின்காலனியம், பெண்ணியம் போன்றவற்றை பேசுவார்கள். இதில் மிகவும் காமெடி என்னவென்றால் ஒரு சராசரி ஆணை விட ஆணாதிக்க மனோபாவம் நிறைந்தவர்கள் இங்கு பெண்ணியம் பேசியது தான்.ஸ்பெக்ட்ரம் போன்றே எண்களுக்கு உச்சபட்ச இலக்கத்தை கண்டறிந்து  வரதட்சணை வாங்கியவர்களும் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். தடுக்கி விழும்போதும், குளிக்க செல்லும் போதும் பின்நவீனத்துவம், பின்காலனியம் பேசிய இளைஞர்களை இவர்கள் கட்டுடைத்த வரலாறும் உண்டு.(இல்லை. நாங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம் என்று அந்த இளைஞர்கள் மறுக்கக்கூடும்)தங்களின் இலக்கிய ரசனை மற்றும் வாசிப்பு சார்ந்து எழுத்தாளர்களை "உள்முகாம், வெளிமுகாம்" என்று வகைப்படுத்துவார்கள். உள்முகாம் என்றால் தங்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள். வெளிமுகாம் என்றால் சிறுபத்திரிகை சார்ந்து இயங்கக்கூடிவர்கள்.  ஒருகாலத்தில் தங்களுக்கு பிடித்த எழுத்தாளர் "ஜானகிராமன்" என்று இயக்க உறுப்பினர்  ஒருவர் சொன்னால் போதும்.  உடனே ஒன்று அவரை இயக்கத்தை விட்டு நீக்கி விடுவார்கள் அல்லது ஓரங்கட்டி விடுவார்கள்.இவர்களின் மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் நிறப்பிரிகை மற்றும் காலச்சுவடு இதழ்களை வகுப்பறைகளில் மாணவர்கள் மஞ்சள் புத்தகத்தை மறைத்து வைத்து படிப்பது மாதிரி படிப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இன்று நிலைமை மாறி விட்டது. சோவியத் தகர்வுக்கு பின்னரான தேக்கநிலை காரணமாக தங்களுக்கான அங்கீகாரத்தையும், முன்னிலையையும் தேடுவதற்கு வெளிமுகாம் சார்ந்த எழுத்தாளர்கள், இதழ்கள் மற்றும் பதிப்பகங்களே இவர்களுக்கு வேண்டியதிருக்கிறது.1991 க்கு முன் இவர்கள் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை. மாஸ்கோவில் மழைபெய்தால் தி.நகரில் குடைபிடிப்பார்கள். அந்த குடைகள் காற்றில் பறந்து விரிந்து எல்லா பகுதிகளையும் உள்ளடக்கும். வலி உணர்ந்த வாழ்க்கையின் நெடியோடு தான் இதனை நான் எழுதுகிறேன். அவர்களின் துரத்தலே என்னை இவ்வளவு விரிவாக எழுதத்தூண்டியது. கருத்துசுதந்திரம் எங்களிடத்தில் மட்டுமே இருக்கிறது என்ற இவர்களின் வாதத்தை அது மட்டுப்படுத்தப்பட்ட அனுபவ பார்வைக்குள் மட்டும் தான் என்பதை அரசியல் செயல்தந்திரம் என்ற பெயரில் இவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டை வைத்தே புரிந்து கொள்ள முடியும். அந்த நிலைபாடு மீதான உள்ளிருந்து எழும் விமர்சன குரல் ஒடுக்கப்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு சிப்களை தங்கள் மூளைகளில் மாற்றி மாற்றி பொருத்தி வைப்பார்கள். அதில் ஒன்று கருப்பு சிவப்பு நிறத்திலானது.இன்னொன்று கருப்பு-சிவப்பு-வெள்ளை நிறத்திலானது. கட்சி இது சார்ந்து எடுக்கும் நிலைபாடுகளுக்கு தகுந்தபடி அந்த சிப்களின் பொருத்தப்பாடு இருக்கும். இதனடிப்படையில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைப்பற்றி இந்த அமைப்பை சேர்ந்த  இலக்கியவாதி ஒருவர் என்னிடத்தில் விமர்சித்தார். அதற்கு எதிராக பல்வேறு இசங்களை துணைக்கு வரவழைத்தார். அது முடிந்து சரியாக இரு மாதத்தில் அவர் தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டார். சமீபத்தில் தானே என்னிடத்தில் வேலைநிறுத்தத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தீர்கள். இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? என்றேன். அதற்கு அவர் பின்நவீனத்துவத்தை துணைக்கு அழைத்தார். அப்போது தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி இருந்தது. அதன் பிரதிபலிப்பு தான் இது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.  இரு வடிவங்களிலான சிப்கள் இப்படி தான் இவர்களின் மூளைகளை ஆக்கிரமிக்கின்றன. இவ்வாறு சிப்களால் மாறி மாறி நிரப்படும் செல்போன்களே இவர்களின் மூளைகள். இது பற்றிய எவ்விதமான உரையாடல்களுக்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நாம் இயக்கம் சார்ந்த அரசு ஊழியர்களின் இம்மாதிரியான சாபத்திலிருந்து மிக சிரமப்பட்டு தப்பித்தவர்கள் ஒரு சிலரே. இதில் நான் மற்றும் கவிஞர் என்.டி ராஜ்குமார் ஆகியோர் மட்டுமே தற்போது உயிர்ப்புடன் இருக்கிறோம். இதில் என்.டி.ராஜ்குமார் இவர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு  துரத்தப்பட்டார். கவிதை உலகில் அந்த துரத்தலின் வேகத்திற்கு ஈடுகொடுத்து தப்பித்தவர் அவர். அதன் தொடர்ச்சியாக அவர் தமிழ் இலக்கிய உலகில்  தனக்கான  இடத்தை  வலுவாக வரைந்து கொண்டார். என் தேடல் சார்ந்த வாசிப்பிற்கும், அதன்  வெளிப்பாடான சிந்தனைக்கும் இடையே வளையங்களை பொருத்தப் பார்த்தார்கள். அந்த வளையங்கள்  என் அங்க அசைவுகள் மற்றும் பலவீனங்கள் வழியாக அவர்களிடத்தில் ஊடுருவி வந்தன. இதன் தொடர்ச்சியில் ஒருவிதமான வெறுமை, போதாமை, ஒவ்வாமை  காரணமாக பத்தாண்டுகளுக்கு முன்னரே அதிலிருந்து வெளிவந்து விட்டேன். அதன் பிறகு தான் என் வாசிப்பு, எழுத்து அதிகமும் கூர்மைப்பட்டு தெளிந்தது. வாசிப்பில் விரிந்த தேடலை நிகழ்த்த முடிந்தது. திருப்திகரமான மனோநிலையில் இருந்தேன். இப்போதும் இருக்கிறேன். அதன் தொடர்ச்சியான வெளிப்பாடு தான் தற்போது வெளிவந்திருக்கும் கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்ற என் புத்தகம். கீழைத்தேய சிந்தனையாளர்கள் பத்துபேர்கள் குறித்த அறிமுகம், அவர்களின் கருத்தியல் தளம், நேர்காணல் இவற்றை உள்ளடக்கிய ஒன்றாக வெளிவந்திருக்கிறது.இவர்கள் ஒரு சிலரிடத்தில் நானே நேரடியாக நேர்கண்டிருக்கிறேன். மேலும் இந்த வரிசையில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவருமே தமிழுக்கு புதியவர்கள். மிகுந்த சிரமத்திற்கிடையே அடையாளம் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது. அதன் வடிவமைப்பை குறித்து பலரும் சிலாகித்தார்கள். சாதிக் அவரின் பதிப்பு நுட்பத்தோடு இதனை வெளியிட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. மனச்சிக்கலின் விளைவாக புத்தகத்தை குறித்த அவதூறுகள் பதிப்பாளருக்கு நேரடியாகச் சென்றன. அதனை பொருட்படுத்தாமல் அவர் வெளிக்கொண்டு வந்தது அதன் நேர்த்திக்கு காரணமாக அமைந்தது. என் புத்தகம் வெளிவராது. அவர்களின் ஒரே சொல்லாடலான "எதோ எழுதிக்கொண்டிருக்கிறான்" என்றே கருதினார்கள். அந்த எதிர்பார்ப்பு மீறப்பட்டதை நெகிழ்ந்துணர்கிறேன்.வாசிப்பிற்கும், சிந்தனைக்கும்,   விமர்சன கோட்பாட்டு எழுத்து செயல்பாட்டிற்குமான பல்வேறு சாத்தியப்பாடுகள் எனக்கு தற்போது உருவாகி இருக்கின்றது. அதனை உள்வாங்கி நான் எனக்கான தூரத்தை கடந்து கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னீலன், முத்துமோகன் ஆகியோரின் கடைசி நேர தவிர்ப்பின் இடங்களை குமாரசெல்வா, ஜே.ஆர்.வி எட்வர்ட் ஆகியோர் நிரப்பினார்கள். அந்த நிரப்பல் வெகுவாக சிலாகிப்பதாக இருந்தது. குறிப்பாக குமாரசெல்வா இந்த புத்தகத்தை அதிகம் உள்வாங்கி பேசியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தன்னுடைய உரையில் அவர் எட்வர்ட் செய்த் குறித்த மதிப்பீட்டை தெளிவாக முன்வைத்தார். பாலஸ்தீன் விடுதலை போராட்டத்தில் அவரின் பங்களிப்பு, பல்வேறு பிரச்சினைகளில் அவர் மேற்கத்திய அறிவுஜீவிகளுடன் நடத்திய உரையாடல், ஐரோப்பிய மையவாதம்  கீழைக்கோட்பாட்டாளர்களின் அதற்கான எதிர்வினை ஆகியவை குறித்து விரிவாக பேசினார். இதே மாதிரியே ஜே.ஆர்.வி எட்வர்ட் இன் உரையும் அமைந்தது. அவர் கீழைச்சிந்தனைகள் என்ற வகைபாடு சரியானது தானா என்ற கேள்வியையும் இதில் முன்வைத்தார். விழாவுக்கு தலைமையேற்ற மொழிப்போர் தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா தமிழ்ச்சூழலில் இம்மாதிரியான புத்தகம் அதிகம் தேவைப்படுகிறது என்றார். குறிப்பாக எவ்வித அறிவார்ந்த தேடலுமற்ற இஸ்லாமிய தளத்திற்கு இது அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார். புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட என்.டி.ராஜ்குமார் என்னுடனான அவரின் இளமைக்கால உறவுகளை விரிவாக எடுத்துரைத்து, புத்தகத்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் வடிவமைப்பு பற்றியும் குறிப்பிட்டு பேசினார். தமிழ்ச்சூழலுக்கு இது அவசியம் என்ற என் உள்ளுணர்வு சரியானது தான் என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை வாசகனிடத்தில் நான்  விட்டு விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு: அடையாளம் பதிப்பகம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சிமாவட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;விலை: ரூ 170&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-5781893468808235887?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/5781893468808235887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=5781893468808235887' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/5781893468808235887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/5781893468808235887'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2011/02/blog-post.html' title='பின் துரத்துதலின் அரசியல்'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Ahs3GkKtmVg/TWH48h0DKtI/AAAAAAAAAQI/yIvlu0iiGdg/s72-c/Photo1086.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-6292616685318838055</id><published>2011-01-31T20:38:00.000+05:30</published><updated>2011-02-04T20:27:40.861+05:30</updated><title type='text'>புத்தக வெளியீட்டு விழா</title><content type='html'>2011 ன் துவக்கத்தில் கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்ற புதிய புத்தகத்தோடு உங்களை சந்திக்க வருகின்றேன். புத்தகத்தோடு வாசகர்களிடம் உரையாடுவதில் என் மனநிலை அபரிதமான உணர்வை அடைகின்றது. இதில் கீழைத்தேய கோட்பாட்டாளர்கள் பத்துபேர் பற்றிய அறிமுகங்கள், அவர்களின் கோட்பாடுகள் மற்றும் நேர்காணலை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. அடையாளம் பதிப்பகம் அதற்குரிய  பிரேத்யேக வடிவமைப்பு கொள்கையோடு மிக நேர்த்தியாக வெளியிட்டதில் எனக்கு பூரண திருப்தியே. தற்கால சூழலில் தமிழில் புத்தகத்தின் வடிவமைப்பு அதிகமும் கவனிக்கப்படுகிறது. சில சமயங்களில்  நல்ல புத்தகங்கள் கூட வடிவமைப்பு சிக்கலுக்கு உள்ளாகி விடுகின்றன. அதிலிருந்து  இது தப்பித்ததில் எனக்கு மகிழ்ச்சியே. இதற்கான முறைப்படியான வெளியீட்டு விழா வரும் 5 ம் தேதி நாகர்கோவிலில் வைத்து நடைபெறுகின்றது. என் வலைப்பதிவை பின்தொடரும் வாசகர்கள் கலந்து கொண்டால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qC82IoQv3x0/TUd_cSihxcI/AAAAAAAAAPs/tLi2ZIwUNFQ/s1600/IMG_7155.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 204px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_qC82IoQv3x0/TUd_cSihxcI/AAAAAAAAAPs/tLi2ZIwUNFQ/s320/IMG_7155.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5568559588256630210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலைகள் இலக்கிய இயக்கம் நடத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;எச்.பீர்முஹம்மதின் "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்"  (அடையாளம் பதிப்பகம்)&lt;br /&gt;&lt;br /&gt;நூல் வெளியீடு&lt;br /&gt;&lt;br /&gt;இடம்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கட்டிடம் (TEMA house)செட்டிக்குளம் ஜங்ஷன், நாகர்கோவில்&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: 05-02-2011 சனிக்கிழமை மாலை 5 மணி&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை: கொடிக்கால் ஷேக் அப்துல்லா&lt;br /&gt;&lt;br /&gt;நூல் வெளியீடு: கவிஞர் சுகுமாரன் &lt;br /&gt;&lt;br /&gt;முதல்பிரதியை பெற்றுக்கொள்பவர்: கவிஞர் என்.டி. ராஜ்குமார்&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துரையாளர்கள்: பேராசிரியர் ஜே.ஆர்.வி எட்வர்ட்,&lt;br /&gt;         &lt;br /&gt;   குமாரசெல்வா&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்புரை :      எச்.பீர்முஹம்மது&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் : ஹசன் மைதீன் (இலைகள் இலக்கிய இயக்கம்)&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு 9894079722,  8973331660.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-6292616685318838055?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/6292616685318838055/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=6292616685318838055' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/6292616685318838055'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/6292616685318838055'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2011/01/blog-post_31.html' title='புத்தக வெளியீட்டு விழா'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_qC82IoQv3x0/TUd_cSihxcI/AAAAAAAAAPs/tLi2ZIwUNFQ/s72-c/IMG_7155.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-8265697390422872959</id><published>2011-01-11T14:37:00.000+05:30</published><updated>2011-01-11T14:43:28.170+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீழைச்சிந்தனையாளர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடையாளம் பதிப்பகம்'/><title type='text'>புத்தகம் வெளிவந்து விட்டது</title><content type='html'>வலைப்பக்கத்தில் பதிவுகள் இட்டு நீண்ட நாட்களாகி விட்டது. புதிய பதிவை எதிர்பார்த்திருக்கும் வாசகர்களுக்கு இது ஏமாற்றமான ஒன்றாக இருக்கலாம். குடும்பவாழ்க்கையின் ஆரம்பம்,வளைகுடா வாழ்க்கையில் நேரம் உருவாக்கும் மனச்சிக்கல்கள் என்னை அப்படியே முடக்கி போட்டு  விட்டது. இதனை தாண்டுவது குறித்த செயலூக்கத்தில் இருக்கிறேன். சில நேரங்களில் இடைவெளி தான் புதிய விசயத்திற்கான வீரியத்தை அதிகரிக்கும். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து என் வலைப்பதிவில் வாசகர்கள் புதிய பதிவை எதிர்பார்க்கலாம். மரபார்ந்த பதிவுகளிலிருந்து வேறுபட்ட இன்னும் புதிய பதிவுகளோடு உங்களிடம் உரையாட இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழைத்தேய சிந்தனை மரபை குறிப்பாக மத்திய கிழக்கு சிந்தனையின் தொடர்ச்சியை அறிமுகப்படுத்தும் கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்ற என் நூல் அடையாளம் பதிப்பகம் சார்பாக வெளிவந்திருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் சென்னை புத்தக கண்காட்சியில் அடையாளம், கீழைக்காற்று மற்றும் பரிசல் அரங்கங்களில் வாங்க கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பக முகவரி&lt;br /&gt;Adaiyaalam,Publishing Group&lt;br /&gt;1205/1 Karupur Salai&lt;br /&gt;Puthanatham - 621 310&lt;br /&gt;Trichy Dist, Tamilnadu, India&lt;br /&gt;Tel: +91 4332 273444, Fax: +91 4334 27055&lt;br /&gt;email: info@adaiyaalam.net&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-8265697390422872959?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/8265697390422872959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=8265697390422872959' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/8265697390422872959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/8265697390422872959'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2011/01/blog-post.html' title='புத்தகம் வெளிவந்து விட்டது'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-6969151204129793641</id><published>2010-07-29T22:20:00.002+05:30</published><updated>2010-07-29T23:20:33.437+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாசர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீழைச்சிந்தனையாளர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடையாளம்'/><title type='text'>என் இந்திய பயணம்- புதிய புத்தக வெளியீடு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_qC82IoQv3x0/TFG6iCO-vdI/AAAAAAAAAPQ/dCxVJCAsx4I/s1600/IMG_4133.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5499381713874107858" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/_qC82IoQv3x0/TFG6iCO-vdI/AAAAAAAAAPQ/dCxVJCAsx4I/s320/IMG_4133.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த எட்டு ஆண்டுகளாக வளைகுடாவின் ஒரு மூலையில் பிழைப்பிற்காக வாழ்ந்து வரும் நான் மனித வாழ்வின் முக்கிய கட்டமான திருமண நிகழ்விற்காக இந்தியா செல்ல நேர்ந்தது. முன்கூட்டிய திட்டமிட்ட பயணம். ஒரு வழியாக நான் புறப்பட்ட விமானம் மார்ச் 23 ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையத்திற்கு அதிகாலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தது. பிறந்த மண்ணை தொட்ட பூரிப்பில் மனம் மற்றும் உடல் இரண்டுமே நெகிழ்ந்தது. இது இயல்பான ஒன்றே. விமானநிலைய வழக்கமான சடங்குகளுக்கு பின்னர் காரி புறப்பட்டு என் சொந்த மாவட்டமான கன்னியாகுமரியை வந்தடைந்தேன். வளைகுடாவில் இருந்து எழுதியவற்றை அருகாமையிலிருந்து வாசித்த உணர்வு நிலையை அடைந்தேன். அது தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரில் இருந்து உணர்ந்த அனுவத்திற்கு இணையாது. தமிழின் இலக்கிய ஆளுமைகள் மற்றும் நண்பர்கள் பலருக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன். அதில் பெரும்பாலானோர் வந்திருந்தனர். இருந்தும் நான் எதிர்பார்த்தவர்கள் வராதது ஏமாற்றமளித்தது. தமிழில் இப்படி முன் தகவல் இல்லாமல் வராமல் இருப்பது ஒரு புதிய முறையியலாக உருவெடுத்திருக்கிறது. ஒரு சூழலில் அரசியல்வாதிகளை அதிகம் நம்பலாம் போலிருக்கிறது. இது எவ்விதமான நிகழ்விற்கும் பொருந்தும்.திருமணத்திற்கு பிந்தைய கட்டத்தில் இது நாள் வரையிலும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் நண்பர்கள் பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பா.வெங்கடேசன், லீனா மணிமேகலை, தாராகணேசன்,கௌதமசித்தார்த்தன், நடிகர் நாசர், நக்கீரன் தலைமை துணை ஆசிரியர் கோ.வி.லெனின் முக்கியமானவர்கள். தழிழவன், பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், இன்பா சுப்ரமணியன், பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகர், அடையாளம் மு.சாதிக் ஆகியோரிடத்தில் தொலைபேச மட்டுமே முடிந்தது. விடுமுறை நாட்கள் சுருங்கி கொண்டிருக்கும் வேளையில் இவர்கள் எல்லோரையும் சந்திப்பது இயலாத காரியம். திசைகள் பலவாக இருப்பது இதன் காரணமே. வளைகுடா வாழ்க்கையின் கடந்த எட்டாண்டுகளாக நான் எழுதியவற்றை அடையாளம் பதிப்பகம் "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்" என்ற பெயரில் புத்தகமாக கொண்டு வருகிறது. அடையாளத்திற்கே உரிய பதிப்பு மற்றும் தர நேர்த்தியோடு இது வெளிவருகிறது. இந்நூல் அறிமுகப்படுத்தும் கீழைச்சிந்தனையாளர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் தமிழுக்கு புதியவர்கள். இவர்களைப் பற்றிய அறிமுகங்கள், அவர்களின் கோட்பாடுகள் மற்றும் நேர்காணல்கள் இதில் உள்ளடங்கி இருக்கிறது. என்னளவில் என் தொடர்ந்த உழைப்பு மற்றும் செயலூக்கத்திற்கான விளைவாக இதனை கருதுகிறேன்.தமிழின் சில காலகட்டங்களில் தேய்மானம் அடைந்து வரும் தத்துவ, கோட்பாடு, மற்றும் விமர்சன உலகிற்கு இந்நூல் புதிய பாய்ச்சல் எனலாம். இது என் முதல் புத்தகம் கூட. வாழ்க்கை சார்ந்த கடமைகள் காரணமாக என்னால் கடந்த ஆறுமாதமாக என் வலைப்பதிவில் புதிய பதிவுகள் எதையும் இட முடியவில்லை. அதன் பிறகான பதிவு இது. புத்தகத்திற்காக நான் எழுதிய அறிமுக குறிப்பை இதில் இணைத்திருக்கிறேன். வலைப்பதிவு உலகில் என்னை தொடர்ந்து ஆதரித்து வரும் வாசக நண்பர்கள் இதிலிருந்து அதனை மீளாக்கம் செய்ய வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடப்பு உலகில் மனித வாழ்க்கை நிலையற்று தப்பியலையும் விலங்காக நகர்ந்து வருகிறது. இரையை தேடும் பறவையும் இந்த புள்ளியில் தான் இணைகிறது. பறவைகள் இப்பிரபஞ்சத்தின் எல்லா வெளிகளையும் தொடுபவை. அவற்றுக்கு நிரந்தர இருப்பிடம் என்பது அபூர்வமே. நாளை பற்றிய கனவுகளற்று உணவு தேட்டமே அவற்றின் பிரதான செயல்பாடு. இந்த இடத்தில் நாளை என்பதில் தான் மனிதன் பறவையிடமிருந்து வித்தியாசப்படுகிறான். இன்று என்பதில் அவன் இருப்பு தொடங்கி காலம் முன்னோக்கி நகர்தல்- பின்னோக்கி நகர்தல் என்ற இருத்தல் செயல்பாட்டில் அவனின் இயக்கம் இருக்கிறது. நடப்பு உலகில் பல்வேறு காரணங்களுக்காக மனிதனின் இடப்பெயர்வு அவசியமான ஒன்றாக மாறி விட்டது. இருப்பிடம் தாண்டிய, பிரதேசம் தாண்டிய, மொழி தாண்டிய, கலாசாரம் தாண்டிய, மனித உறவுகளை தாண்டிய ஒரு கடந்து போதலாக இடப்பெயர்வு இன்று மாறி விட்டது. உலக வரலாற்றில் அதிகமாக இந்த தாண்டலுக்கு உள்ளானவர்கள் மூன்றாம் உலக நாடுகள் அல்லது வளரும் நாடுகளை சார்ந்த நிர்கதியான மனிதர்களே. இருபதாம் நூற்றாண்டை இந்த புலப்பெயர்வின் அதிகாரபூர்வ காலகட்டம் எனலாம். உலக நாகரீகங்களின் காலகட்டத்திலிருந்து இது தொடங்கினாலும் வெகுவான, மிக அவலமான , துயரமான இடப்பெயர்வு (Displacement) என்பதில் இருந்து தான் இருபதாம் நூற்றாண்டு இடப்பெயர்வின் அர்த்தத்தை அடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று அடிப்படையில் புவிக்கூறுபாடு என்பதற்கும், மனித இடப்பெயர்வுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. தேசியம், நாகரீகம் (Nation, civilization)போன்ற கருத்தாக்கங்கள் தொன்று தொட்ட மனித இடப்பெயர்வின் விளைவுகளே என்கிறார் இத்தாலிய தத்துவவாதியான விக்கோ. இதில் தேசியம் நடப்பு உலகில் மிகுந்த குவியமடைந்து வருகிறது. கொசாவோ தொடங்கி இலங்கை வரை இதன் பிரக்ஞை விரிந்து பரவுகிறது. உலக வரலாற்றில் மனிதர்கள் இசங்களை விட தங்கள் தேசத்திற்கான போராட்டத்திற்காகவே அதிகமும் உயிரிழந்திருக்கிறார்கள். மனித வரலாற்று வளர்ச்சி போக்கை கூர்ந்து அவதானித்தவர்கள் இதை புரிந்து கொள்ள முடியும். இதனை இன்னொரு அர்த்தத்தில் நாம் விவரித்தால் இப்பிரபஞ்சம் புவிஅரசியல்- கலாசார ரீதியாக மேற்கு- கிழக்கு என்ற இரு பெரும் பிரிவினைக்கு உட்பட்டிருக்கிறது. மேற்கு என்பதில் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற கண்டங்கள் உள்ளடங்குகின்றன. கிழக்கில் ஆசியா, ஆப்ரிக்கா போன்ற பெரும் கண்டங்கள் வருகின்றன. இதில் மேற்கு என்பதற்கு ஐரோப்பா என்பதாகவே அதிகமும் இன்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. அது புவியியல்,கலாசார,அரசியல்,மத மற்றும் அற ரீதியாக கூறுகளின் தொகுப்பாகும்.&lt;br /&gt;மேற்கின் அரசியல் வரலாற்று கூறு என்பது நீண்ட கால ஆதிக்கம், அதிகாரம், வன்முறை, கலாசார பறிப்பு இவற்றோடு இயைந்திருக்கிறது. இன்றைய கட்டத்தில் மேற்காக பிரிட்டனும், அமெரிக்காவும் தான் உலக அரங்கில் முன்னிலை பெறுகின்றது. இதை குறித்து பிரிட்டன் எழுத்தாளர் ஆஸ்கர் ஒயில்ட் பின்வருமாறு குறிப்பிட்டார்." இரு தேசங்கள் ஒரு பொதுவான மொழியால் பிரிக்கப்பட்டுள்ளன. கீழை நாடுகளை பொறுத்தவரை மத்திய கிழக்கு, மற்றும் தெற்கு, கிழக்காசிய நாடுகளே குவியம் பெறுகின்றன. ஓரியண்ட் என்ற சொல்லாடல் மேற்கின் அகராதிப்படி கீழை நாடுகளை குறிப்பதாகும். அமெரிக்க மற்றும் பிரிட்டன் வழக்கில் அது இன்றும் நகைப்புக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. லத்தீன் மொழியில் ஓரியண்ஸ் என்பதற்கு சூரியன் உதிக்கும் பிரதேசமாகும். மரபார்ந்த முறையில் மேற்கு ஐரோப்பிய வழக்கில் ஓரியண்ட் என்பதற்கு தற்போது மத்தியகிழக்கு என்றழைக்கப்படும் பிராந்தியம் என்பதே அர்த்தமாகும். அதாவது அண்டை கிழக்கு நாடுகளை குறிப்பது. இதன் தொடர்ச்சியில் ஓரியண்ட் என்பது அந்நாடுகளின் மக்கள் மற்றும் கலாசாரங்களை குறிப்பதாகும். பிரெஞ்சு வழக்கில் ஓரியண்ட் என்பது கிழக்கத்திய விவகாரம் சார்ந்த , உதுமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பிந்தைய அந்நாடுகளின் அரசியல் மற்றும் இராஜ்ஜிய ரீதியான விவகாரங்களின் தொகுப்பாகும். ஓரியண்ட் சொல்லாடலை பொறுத்தவரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகட்டத்தில் ஐரோப்பாவில் பரவலாக வழக்கில் இருந்தது. மேலும் இது பிரிட்டனின் காலனியம் மற்றும் யூத எதிர்ப்பு மனோபாவம் ஆகியவற்றின் பின்தொடரலாகவும் இருந்தது. இதனிடையில் ஓரியண்ட் என்பது கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய செமிடிக் மதங்களின் கலாசார, பிராந்திய, கருத்தியல் நிலைபாடுகளின் பிரிவினை சார்ந்த கூறாகவும் இருக்கிறது. நாம் இன்று மேற்கு என்று புரிந்து கொள்கிற பிராந்தியமானது வரலாற்று ரீதியாக 600 ஆண்டுகள் பழமையானது. இது அன்று கிறிஸ்தவ பிரதேசமாகவே அறியப்பட்டது. இது கத்தோலிக்க மற்றும் புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் ஆகியவற்றின் கூட்டிணைவே. இதில் வைதீக மற்றும் பைசாண்டிய கிறிஸ்தவங்கள் உள்ளடங்காது. காரணம் அவை மத்தியகிழக்கு பிராந்தியத்திற்கு உட்பட்டவை. மேற்கத்திய கிறிஸ்தவத்திற்கும் இதற்கும் பொதுவான மரபு இருந்தாலும் அவை அடிப்படையில் வித்தியாசப்பட்டவை. மேற்கத்திய கிறிஸ்தவம் என்பது ரோமாபுரியை குவியப்படுத்தும் ஒன்றே. எட்டாம் நூற்றாண்டு பிராங்க் மன்னரான சார்லிமாக்னே அன்றைய போப் மூன்றாம் லியோவால் கி.பி 800 ல் ரோமின் பேரரசனாக முடிசூடப்பட்டார். இதனைத்தொடர்ந்து மத்திய கிழக்கு இஸ்லாமிய உலகம் மற்றும் மேற்கத்திய கிறிஸ்தவம் இவற்றிற்கிடையேயான அரசியல், மற்றும் கலாசார மோதல் தொடக்கம் பெற்றது. 18 மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் அந்தலூசிய பகுதிகளை ஆண்ட துருக்கிய உதுமானிய பேரரசு அன்றைய ரோம கிறிஸ்தவ அரசுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் தோன்றியது.கிறிஸ்தவத்தை பொறுத்தவரை அதன் அரசியல் பலம் பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் படிப்படியாக குறையத்தொடங்கியது. 1648 ல் மேற்கின் ஒவ்வொரு அரசுகளும் அவரவருக்குரிய சொந்த மதங்களை பிரகடனப்படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் மேற்கத்திய கிறிஸ்தவத்தின் உயிர் நாடியான ரோம பேரரசு சரிவடைந்து புதிய இறையாண்மை மிக்க அரசுகள் ஏற்பட்டன. இந்த காலகட்டம் தான் ஐரோப்பிய வரலாற்றில் மறுமலர்ச்சி யுகம். இப்போது மதசார்பின்மை கருத்தியல் அதற்குள்ளிருந்து எழுந்து ஐரோப்பா முழுவதும் பரவுகிறது. ஜனநாயகம் பற்றிய கருத்தாக்கம் விரிவடைந்து அதனை உள்வாங்கிய அரசுகள் பிறக்கின்றன. இதன் தொடர்ச்சியில் லௌகீகத்தின் ஒரு பகுதியாக நவீன ஐரோப்பா உருவானது. இது ஐரோப்பாவின் அடுத்த கட்டத்தை நோக்கிய வளர்ச்சி.கீழை நாடுகளின் வரலாற்றில் பயண வரலாற்றாளர்கள் முக்கிய இடத்தை அடைகின்றனர். மார்க்கோபோலொ, மார்சல் பிரஸ்ட், மாக்கியவெல்லி, பாஹியான் போன்றோர் குறிப்பிடதகுந்தவர்கள். பல ஐரோப்பியர்கள் கீழை நாடுகளுக்கு கடல்வழி பாதை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அது ஒரு வகையில் அவர்களின் திசை அரசியலாகவும் இருந்தது. மார்சல் பிரஸ்ட் உண்மையான கடல் வழி கண்டுபிடிப்பு என்பது நிலத்தை தேடுவதல்ல. மாறாக புதிய கண்கள் வழியாக அவற்றை பார்ப்பதுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரியண்டலிசத்தை பொறுத்தவரை கிழக்கத்திய கலாசாரத்தின் கூறுகள் பற்றிய வரைபடமாகவும், கண்ணோட்டமாகவும் இருக்கிறது. வரலாற்று அடிப்படையில் ஓரியண்டலிசம் 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு சிந்தனையாளர்கள் மற்றும் பயணக்குறிப்பாளர்கள் ஆகியோரின் ஆக்கங்களால் நிரம்பியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஓரியண்ட் என்பது மத்தியகிழக்கில் இருந்து நகர்ந்து தூர கிழக்கு நாடுகளை குறிப்பதாக மாறியது. குறிப்பாக ஜப்பான் மற்றும் சீனா போன்றவற்றை குறிப்பதானது. அதாவது கிழக்காசியா, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்காசியா ஆகிய புவி அரசியல் பிரதேசங்களை குறித்தது. தற்போதைய ஆங்கில அகராதிப்படி ஓரியண்ட் என்ற சொல்லுக்கு கிழக்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் சார்ந்த புவி அரசியல், மற்றும் கலாசார வகைப்பாடுகள் என்று அர்த்தம். மேலும் அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த ஓரியண்ட் என்ற சொல்லாடல் தவிர்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக கீழைநாடுகள் ஆசியா என்றே குறிக்கப்படுகின்றன. கிழக்கின் கலாசாரத்தை, அதன் தொன்ம நுட்பங்களை , வரலாற்று பாரம்பரியத்தை பல ஐரோப்பிய சிந்தனையாளர்கள் அவதானித்திருக்கிறார்கள். மான்டெஸ்க், வில்லியம் பெக்ஃபோர்ட், தாமஸ் மூர், ஜான் வாப்ஃபங், ரால்ப் எமர்சன், தாமஸ் டி குன்ஸி, விக்டர் குகோ, ரிச்சர்ட் பிரான்ஸிஸ் பர்டன் போன்றோர்கள் இந்த வகைப்பாட்டிற்குள் வருகிறார்கள். இவர்களில் மாண்டெஸ்கின் ஓரியண்ட் சமூகம் குறித்த The persian letters முக்கியமான படைப்பாகும். அதில் மாண்டெஸ்க் பாரசீகம் மற்றும் மத்திய ஆசியா குறித்து விரிவாக ஆராய்கிறார். இது அரசுகளுக்கிடையேயான உரையாடலாக கடித வடிவில் இடம்பெறுகிறது. மேலும் மார்க்ஸ் தன் கடைசி கட்டத்தில் கீழை சமூகங்களை குறித்து தான் படிக்க இருப்பதாக குறிப்பிட்டார். அதாவது கீழை மதங்களான இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் குறித்து தான் அதிகம் படிக்க ஆர்வமாக இருப்பதாக கடிதம் ஒன்றில் ஏங்கல்ஸிடம் குறிப்பிட்டார். இதன் மூலம் வரலாற்றில் மேற்கு மற்றும் கிழக்கு அதன் மறு பிரதியாக்கத்தில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகியவற்றின் மோதலாகவே இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரியண்டலிச சிந்தனையாளர்கள் குறித்த இத்தொகுப்பின் ஆக்கம் என்பது என் பொருளாதார புலப்பெயர் வாழ்க்கையின் ஆறு ஆண்டுகள் உழைப்பின் வெளிப்பாடு. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இஸ்லாமிய சமூகத்தின் இயல்பான சமூக பொருளாதார நிர்பந்தங்களுக்கு ஆளானவனாக வளைகுடா நாடு ஒன்றில் வேலைக்காக சென்றேன். அப்போது வெறுமையும், தவிப்பும், அந்நியத்தன்மையான மனமும் நிரம்பியவனாக மாறினேன். வாசிப்பு அனுபவமும், தேடலும், எழுத்தும் எனக்குள் ஏற்கனவே ஆழமாக பதிந்திருந்தது. வளைகுடா வாழ்க்கை இதை தொடர்ந்து தக்கவைப்பதற்கான தளமாக தொடக்கத்தில் இருக்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் குடிபெயர்ந்து தமிழில் எழுதி கொண்டிருப்பவர்கள் போல் வளைகுடாவில் இருந்து கொண்டு எழுதுபவர்கள் மிகக்குறைவு. காரணம் அந்த வாழ்க்கை ஏற்படுத்தும் வெறுமையும், எழுத்திற்கான உளவியல் சுதந்திரமும், சிந்தனை சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலை தான்.நான் இதனோடு அதிகமும் போராடவேண்டியதிருந்தது. இந்தியாவின் பல மாநிலங்களை சார்ந்த வளைகுடா வாழ் மனிதர்கள் எல்லோருக்குமே இதே நிலை தான்.இந்நிலையில் ஏற்கனவே நான் திண்ணை.காமில் தொடர்ந்து எழுதி கொண்டிருந்த கட்டத்தில் யமுனா ராஜேந்திரன் அறிமுகமானார். நாங்கள் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து இணையம் வழியாக உரையாடிக்கொண்டதுண்டு.அதற்கு முன்பே பாவண்ணனின் தொடர்பு இருந்தது. பாவண்ணன் புலம்பெயர்ந்தாலும் இழப்புகளை எதிர்கொண்டு அதனை தாண்ட வேண்டும் என்று என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். இயந்திரமயமான வாழ்க்கை மற்றும் அதனுடனான என் உறவாடல் இவற்றுக்கிடையேயான தூரத்தை தாண்டுவது மிகவும் கடினமாக இருந்தது. இப்படியான சூழலில் வளைகுடா புலப்பெயர்வுக்கு பின் என் முதற் கட்டுரை பாலைவன மூளைகளும், பேரீத்த மரங்களும் என்ற தலைப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் புதிய காற்று மாத இதழில் வெளிவந்தது. அரபு இனத்தவரை பற்றிய ஐரோப்பிய மதிப்பீடு மற்றும் அரபுகளின் தினசரி வாழ்க்கை முறையியல் ஆகியவற்றை பற்றியதாக அது இருந்தது. அதற்கான எதிர்வினைகளும் அந்த கட்டத்தில் வெளிவந்தன. அப்போதிருந்த தகவல் தொடர்பின் இடைவெளி காரணமாக என்னால் அதை எதிர்கொள்ள முடியாமல் போனது. இதனை தொடர்ந்த காலத்தில் பிரான்சை சேர்ந்த நண்பர் ஒருவர் அறிமுகமானார். தேர்ந்த தத்துவவாசிப்பும், ஆழமான தேடலும் அனுபவமும் கொண்டவர். அவருடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல விஷயங்கள் குறித்து விரிவான உரையாடல் நடத்தினேன். அதில் ஒன்று "பாரசீக வளைகுடாவுக்கு அப்பால்" என்ற தலைப்பில் புதிய கோடங்கி இதழில் தொடராக வெளிவந்தது. மத்திய கிழக்கு, மேற்குலகம், பின் நவீனத்துவம் மற்றும் இலக்கிய வெளி குறித்ததாக அது அமைந்தது. இவருடனான உரையாடல்களுக்கு பின் என் புலம்பெயர் எழுத்தின் திசை உறுதியானதாக, துண்டிக்கப்படமுடியாததாக மாறியது. மத்தியகிழக்கு பற்றிய இம்மாதிரியான எழுத்தின் தேவை தமிழ்ச்சூழலில் நிறையவே இருக்கிறது என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன். மலையாளத்தில் ஏற்கனவே இது நடந்து முடிந்திருக்கிறது. அங்கு ஏன் நடந்தது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான். இந்த கவனப்படலோடு தேர்ந்தெடுத்த வாசிப்பும், சிந்தனையும் என்னை இன்னொரு திசைக்கு நகர்த்தியது. என் எழுத்தியல் பயணத்தில் பெரும் திருப்பமாக நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள அரபு பல்கலைகழக ஆங்கில பேராசிரியரான முனீர் ஹசன் மஹ்மூத் என்பவரின் தொடர்பு கிடைத்தது. முனீர் ஹசன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர். சிரியாவை சேர்ந்தவர். தேர்ந்த படிப்பாளி. நிறைய மொழிபெயர்ப்பு வேலைகளை செய்து வருபவர். சர்வதேச அளவில் அறிவுஜீவிகளுடன் தொடர்பு கொண்டவர். அனங்கக சிந்தனையாளர். மத்திய கிழக்கு குறித்து அவரிடம் விரிவான படிப்பு இருக்கிறது. என் தேவைகளை நிறைவேற்றுவதன் தொடக்க புள்ளியாக இவர் மாறினார். இவர் வழியாக உலகளாவிய மார்க்சிய சிந்தனையாளர்களான தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. என் வாசிப்பிலும், சிந்தனை வெளியிலும், எழுத்திலும் இந்நிகழ்வு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அறிவு ஜீவிகளை புத்தகத்திலிருந்து நேரடியாக ஆகர்சிக்கும் தன்மை உணர்வு பூர்வமான அனுபவ வெளியை ஏற்படுத்தக்கூடியது. வளைகுடா வாழ்க்கை என் ஆங்கில அறிவை வலுவாக்கியதால் இது சாத்தியமானது. இவர்களை நேர்காணல் செய்தேன். விரிவானதொரு உரையாடலாக அது இருந்தது. இவை புதிய காற்று மற்றும் உயிர்மை இதழ்களில் வெளிவந்தன. தமிழ் உலகில் அது புதிய அனுபவமாகவும் உரையாடலை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. இன்னும் பல அறிவுஜீவிகளோடு உரையாடும் சந்தர்ப்பத்தை அது வழங்கியது. சமீபத்தில் அரபு பல்கலையில் வைத்து நோம் சாம்ஸ்கியுடன் உரையாடியது மிகப்பெரும் அறிவார்ந்த அனுபவத்தை கொடுத்தது. முனீர் ஹசன் மஹ்மூதிடமிருந்து மற்றொன்று மார்க்சிய, பின் நவீனத்துவ அறிவு ஜீவிகளின் கருத்தியல் பிறழ்வு பற்றியது. ஐரோப்பிய மற்றும் பிற காலனிய செயல்பாடுகளில் மார்க்சிய நிலைபாட்டை எடுத்தவர்கள் இஸ்ரேல் விவகாரத்தில் மாறுபட்டு நின்றார்கள். எரிக்ஹாப்ஸ்வம், ஐஸையா பெர்லின், சிலொவோய் ஸிசக், சார்த்தர் போன்றோர் இவ்வகைப்பாட்டிற்குள் வரக்கூடியவர்கள். பூக்கோவும் இதில் மாறுபட்டு நின்றார் என்பதை தெரிந்து கொண்ட போது முன்னர் என் ஆதர்சனமாக இருந்த அவர் மீதான என் நம்பிக்கை குறைய தொடங்கியது. இது தொடர்பான நிறைய தரவுகளை தேடி படிக்க ஆரம்பித்தேன். விமர்சன கோட்பாடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவன் என்ற முறையில் பாலஸ்தீன் விவகாரம் என்னை வெகுவாக கலைத்துப் போட்டது. அந்த சூழலில் இருந்து நேரடியாக அந்த மக்களை காணவும், அவர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அவர்களின் விடுதலை போராட்டம் அடிப்படைவாத குழுக்களின் கையில் வந்தது மிகவும் துரதிஷ்டமான, ஏமாற்றமான நிகழ்வு. இது குறித்த பதிவுகள் இந்நூலின் கட்டுரைகளில் இருக்கின்றன. எட்வர்ட் செய்த் இதை குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் ஒன்றை மொழிபெயர்த்து இதில் இணைத்திருக்கிறேன். அதாவது சார்த்தரும் அரபுலகமும் பற்றி எட்வர்ட் செய்த் எழுதியது. சார்த்தருடனான தன் அனுபவங்களை அதில் எட்வர்ட் செய்த் பதிவு செய்திருக்கிறார்.தமிழில் இதை வெளிக்கொணர வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை மொழிபெயர்த்து வெளியிட்டேன். மேலும் ஓரியண்டலிச அறிவுஜீவிகளை அறிமுகப்படுத்தும் இத்தொகுப்பில் மொத்தம் பத்து அறிவு ஜீவிகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. எட்வர்ட் செய்த், தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர், மாக்சிம் ரோடின்சன், இஹாப் ஹசன், ஹிசாம் சரபி, இக்பால் அஹ்மத், மன்சூர் ஹிக்மத், தாஹா உசேன் ஆகியோரை பற்றிய விரிவான அறிமுகமும், அவர்களின் கோட்பாடுகள் குறித்த பார்வையும், நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது. இதில் தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர் ஆகியோருடனான நேர்காணல்கள் நான் நேரடியாக நடத்தியவை. இத்தொகுப்பிற்கு அடிக்கோடு வரைபவை. குறிப்பாக தாரிக் அலியுடன் நான் நடத்திய நேர்காணல் இத்தொகுப்பை அதிகமும் குவியப்படுத்துகிறது. நுட்பமான கேள்விகள் , ஆழமும், விரிவும் இயைந்த அதற்கான பதில்கள் ஆகியவற்றை இந்நேர்காணல் உள்ளடக்கி இருக்கிறது. மேலும் சில அறிவுஜீவிகளின் முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்த்து இதில் இணைத்திருக்கிறேன். அதில் தாரிக் அலி இஸ்லாத்தின் தோற்றம் குறித்து எழுதிய முக்கியமான கட்டுரை ஒன்று இதில் இணைக்கப்பட்டிருக்கிறது. இது இத்தொகுப்பிற்கு இன்னும் வலுவூட்டும் முயற்சியாகும். கலாசாரம் குறிப்பிட்ட இடைவெளியில் அரசியல், சமூகத்தோடு இணைந்திருக்கிறது என்பார் எட்வர்ட் செய்த். இதனை உள்வாங்கி முன்னதின் அறிதல் முறையோடு ஓரியண்டலிச அறிவுஜீவிகளின் அறிமுகம் குறித்த இத்தொகுப்பை கொண்டு வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் ஆரம்ப கால இலக்கிய மற்றும் தத்துவ தேடல் இடதுசாரி இலக்கிய அமைப்பு ஒன்றின் மூலமாக தான் இருந்தது. இளமை காலத்திற்குரிய அசட்டுத்தனம் மற்றும் இலட்சிய கனவுகளை பெரும் பாரமாக வைத்துக் கொண்டு ஐந்தாண்டுகள் அதில் கழித்தேன். அந்த காலங்கள் எனக்கு போதாமையும், வெறுமையும் கொண்டதாக அதே நேரத்தில் மின்னலில் இருந்து கிழிக்கப்படும் கோடாகவும் இருந்தன. அதன் தொடக்க கட்டங்களில் தான் நண்பர்கள் ஹாமீம் முஸ்தபா மற்றும் ஹெச்.ஜி. ரசூல் ஆகியோர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். தமிழில் மார்க்சிய பின்னணியோடு எழுத வந்தவர்களில் பெரும்பாலானோரின் தொடக்க காலம் என்பது இயக்கங்கள் வழி தான் இருந்தது. அவை அனுபவங்களின் கூட்டிணைவாக இருக்கும். செடியொன்றின் உதிர்ந்த கருகாத இலையாக பின்னர் அதிலிருந்து வெளியேறி சுதந்திரமாக இயங்க ஆரம்பித்தேன். ஒரு வேளை நான் புறப்பட்ட புள்ளியும் அதுவாக இருக்கலாம். இயக்க ரீதியான செயல்பாட்டு கால கட்டத்தில் தமிழவன், பேராசிரியர் முத்துமோகன் ஆகியோர் அறிமுகமாயினர். இவர்களில் தமிழவன் என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்தார். அவர் என் கிராமத்துக்காரர் என்பதை பின்னர் தான் அறிந்து கொண்டேன். முத்துமோகனுடன் சில தருணங்களில் தத்துவார்த்த உரையாடல் நடத்தியதுண்டு. என் ஆரம்ப கால கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் வெளிவந்தன. அதன் வழியாக பி.கே சிவக்குமார், அ.முத்துலிங்கம், யமுனா ராஜேந்திரன், பாவண்ணன், சுகுமாரன், ஜமாலன், நாகர்ஜுனன் போன்றோர் அறிமுகமாயினர். இவர்களுடனான என் நட்பு தொடர்ந்த வேளையில் வளைகுடா நகர்வின் சிறிதுகால தொய்வு என்னை மேற்கொண்டு உறவை தொடர முடியாதவனாக மாற்றியது. இணைய எழுத்துகளுக்குள்ள தொடர்ச்சியின்மையும் இதற்கு ஒரு காரணம்.அவர்கள் எல்லோருமே இத்தொகுப்பு வெளிவரும் வேளையில் தவிர்க்க முடியாதவர்கள். குறிப்பாக பாவண்ணன், சுகுமாரன், யமுனா ராஜேந்திரன், ஜமாலன் ஆகியோருக்கு நான் மிக்க நன்றிக்குரியவன். காரணம் என் புலம்பெயர் வாழ்க்கையில் நான் எழுதிய விஷயங்களை அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொண்டவர்கள். ஆரம்ப காலம் முதல் என்னுடன் உரையாடி வரும் நண்பர் என்.டி ராஜ்குமார் முக்கியமானவர். எழுதிய விஷயங்கள் தொகுப்பாக வெளிவர வேண்டும் என்று என்னை வேகப்படுத்தியவர் அவர். மேலும் நண்பர்கள் கியூபர்ட் சதீஷ்(பஹ்ரைன்) இலங்கை கவிஞர் ரிஷான் ஷெரிப் (கத்தார்) , ஹபீப் (ஷார்ஜா), லஷ்மி (உயிர்நிழல், பிரான்சு), கலையரசன் (நெதர்லாந்து) என் செயல்பாட்டை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் என் பால்யகால நண்பர்கள் பிரேம் தாஸ், பிரேம்குமார் (நியூயார்க்), கவிஞர் ஸ்டாலின் பெலிக்ஸ் (டி.சி.எஸ் சென்னை)எபனேசர் (சி.டி.எஸ் குழுமம் சென்னை)சுபாஷ் (டெல்லி பல்கலைகழகம்) ஆகியோர் இந்த ஆக்கத்தோடு அதிகமும் தொடர்புடையவர்கள். இவர்களில் எபனேசர் மற்றும் ஸ்டாலின் பெலிக்ஸ் என் புத்தக புரவலர்கள். மிகுந்த நன்றி வெளிப்பாட்டோடு அவர்களை இங்கு குறிப்பிடுகிறேன். மேலும் கவிஞர்கள் லீனா மணிமேகலை, குட்டிரேவதி, இன்பா சுப்ரமணியன் ஆகியோரும் நன்றிக்குரியவர்கள். மேலும் கல்ப் மாத்யமம் இதழின் நிருபர் மோகன், மலையாள நாவலாசிரியர் றி.டி. ராமகிருஷ்ணன் ,மலையாள நண்பர் பாபு இதிலுள்ள அறிவுஜீவிகள் குறித்த சில அறிமுக கட்டுரைகளை தன் உயிரோசை இணையதளம் மற்றும் உயிர்மை இதழில் வெளியிட்ட அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், நேர்காணல் மற்றும் மொழிபெயர்ப்புகளை வெளியிட்ட புதியகாற்று ஆசிரியர் ஹாமீம் முஸ்தபா, உன்னதம் கௌதமசித்தார்த்தன், கனவு இதழின் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன், என் வலைப்பதிவை பின்தொடர்பவர்கள், அதன் உலகளாவிய வாசகர்கள் ஆகியோர் என் நன்றிக்குரியவர்கள். இணையதளங்களான திண்ணை, கீற்று, இனியொரு, புகலி ஆகியவையும் மிகுந்த நன்றிக்குரியவை. செடியொன்றின் துளிர்விடும் இலையாக, அதன் அசைவூட்டமாக என்னை உற்சாகப்படுத்தி வரும் என் பிரியமான வாழ்க்கை தோழி ஜாஸ்மின் மிக்க நன்றிக்குரியவர். இத்தொகுப்பை வெளிக்கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார்.எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆக்கத்தை தொகுப்பாக கொண்டு வரும் நண்பர் அடையாளம் சாதிக் மிகுந்த நன்றிக்குரியவர். என்னை தொடர்ந்து ஆதரித்து வருபவர். இதிலுள்ள அறிவுஜீவிகளின் கோட்பாடுகள் குறித்த பல கட்டுரைகள் இத்தொகுப்பிற்காக எழுதப்பட்டவை. ஆறு ஆண்டுகள் என் புலம் பெயர் வாழ்க்கையின் நெருக்கடியான காலகட்டத்தின் நகர்வில் பல நாட்களின், பல மணி நேரங்களின் உழைப்பு இது. இதனை தொடர்வதற்கான ஊக்கமும், நம்பிக்கையும் வாசகன் இடமிருந்து தான் தொடக்கம் பெறும். அதனை எதிர்பார்த்தே நான் இயங்கி வருகிறேன். இந்த இயக்கம் தொடர்ந்து செல்லும் நிலையில் என் விமர்சன கண்ணோட்ட பரப்பளவு இதிலிருந்து விரிவடையும் என்ற அழுத்தமான நம்பிக்கையுடன்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;பதிப்பக முகவரி&lt;/p&gt;&lt;p&gt;Adaiyaalam,Publishing Group&lt;/p&gt;&lt;p&gt;1205/1 Karupur Salai&lt;/p&gt;&lt;p&gt;Puthanatham - 621 310&lt;/p&gt;&lt;p&gt;Trichy Dist, Tamilnadu, India&lt;/p&gt;&lt;p&gt;Tel: +91 4332 273444, Fax: +91 4334 27055&lt;/p&gt;&lt;p&gt;email: &lt;a href="mailto:info@adaiyaalam.net"&gt;info@adaiyaalam.net&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-6969151204129793641?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/6969151204129793641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=6969151204129793641' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/6969151204129793641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/6969151204129793641'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2010/07/blog-post.html' title='என் இந்திய பயணம்- புதிய புத்தக வெளியீடு'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qC82IoQv3x0/TFG6iCO-vdI/AAAAAAAAAPQ/dCxVJCAsx4I/s72-c/IMG_4133.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-2020678146480528943</id><published>2010-01-31T10:12:00.000+05:30</published><updated>2010-01-31T10:13:38.779+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதலாளித்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>இஸ்லாமும் முதலாளித்துவமும்- மாக்சிம் ரேடின்சனின் பார்வையில்</title><content type='html'>பிரஞ்சுப் பத்திரிக்கையான ’லெ மோந்தே’, இஸ்லாமிய உலகிம் பற்றிய அபரிமிதமான புலமை பெற்றவர் என்று பாராட்டப்பெற்ற பெருமைக்குரியவர் மாக்ஸிம் ரோடின்சன். கடந்த 2004-ம் ஆண்டு தனது 89ம் வயதில் மறைந்துபோன ரோடின்சன் அரபு மற்றும் இஸ்லாமிய சரித்திரம், நாகரீகம் ஆகியவை குறித்த பல பிரசித்தி பெற்ற புத்தகங்களை எழுதியவர். இவர் 1961ம் ஆண்டு எழுதிய முகம்மதுவின் வாழ்க்கைச் சரித்திரம் எனும் புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்க புத்தகங்களில் ஒன்றாகும். மேலும் இவர் 1966-ல் எழுதிய மாக்ஸ் வெப்பரின் புகழ்வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எதிரொலியாய் எழுதப்பட்ட ’இஸ்லாமும் முதலாளித்துவம்’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மிகச்சமீபத்தில் இவரது ‘மெமாயர்ஸ்’ புத்தகமாய் வெளியிடப்பட்டது. அப்புத்தகம் பிரஞ்சு நாட்டின் தலை சிறந்த எழுத்தாளரான ரோடின்சன் தனது பாரிஸ் நகர வாழ்வினை வாழ்வை மீள்பார்வையினைப் பிரதிபலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகளாவிய பொருளாதார மந்தநிலை முதலாளித்துவத்தின் போக்கில் பெரும் தடையை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாளித்துவ சமூகம் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய மறுமலர்ச்சி கட்டத்தின் தோற்றத்தை பின் தொடர்ந்து உருவானது. அதற்கு முந்தைய நிலபிரபுத்துவ சமூகம் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பெரும் சமூக மாறுதலை ஏற்படுத்தியது. அது வெளிப்படையான மாற்றமாக இல்லாவிட்டாலும் சமூக குழுக்களிடையே முரண்பாடுகளையும், மோதல்களையும் ஏற்படுத்துவதில் பெருவாரியான பங்கை வகித்தது. இதில் ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய இரு பெரும் கண்டங்கள் சார்ந்த முரண்பாடுகள் முக்கியமானவை. உற்பத்தி முறை மற்றும் சமூக உற்பத்தி முறை ஆகிய கருத்தாக்கங்கள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த பொருளாதார, சமூக மாறுதல் உலகின் பெருமதங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுத்தியிருக்கிறதா? குறிப்பாக இஸ்லாமிய சமூக அமைப்பின் மீது தாக்கத்தை செலுத்தியிருக்கிறதா? இஸ்லாம் அதனளவில் முதலாளித்துவ கூறுகளை கொண்டதா? என்பதான கேள்விகள் ஓரியண்டல் சிந்தனையாளர்கள் மத்தியில் எழுந்தன. இதனைக்குறித்து மாக்சிம் ராடின்சன் விரிவாக ஆராய்ந்தார். அதற்காகவே அவரிடம் இருந்து Islam and Capitalism என்ற நூல் வெளியானது. முதலாளித்துவ சமூகம் மத்தியகிழக்கு அரபு சமூகத்தில் எத்தகைய மாறுதலை ஏற்படுத்தியது? அதன் வீச்சு பிற சமூக அமைப்பில் எத்தகைய விளைவுகளை உருவாக்கியது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு மாக்சிம் ராடின்சன் விடைகாண முயற்சித்தார். புதிர்பாதைகள் நிறைந்த கிழக்கத்திய சமூக அமைப்பில் இது குறித்த ஆய்வுமுறை சிக்கலானதாகும். சிக்கலான மலைப்பாதைகள் போன்று இதன் வழிகளும் சிரமமானவை. எந்த ஆய்வாளராலும் திடீர் முன்முடிவுக்கு வர முடியாதவை. ராடின்சன் இதன் புதிர்களை அவிழ்க்க முயன்றார். அதன் கோடுகள் சார்ந்த பாதைக்குள் பயணம் செய்தார்.&lt;br /&gt;மாக்சிம் ராடின்சன் தன் இஸ்லாம் மற்றும் முதலாளித்துவம் பற்றிய ஆய்வை வளர்ச்சி குன்றிய நாடுகளிலிருந்து தொடங்கினார். வளர்ச்சியடைந்த தொழில்வள நாடுகள் மற்றும் வளர்ச்சி குன்றிய வறுமையும், பசியும் ஒன்று சேர்ந்து நிரம்பிய நாடுகள் இவற்றின் போராட்டமாகவே உலகம் இருந்து கொண்டிருக்கிறது. இதுவே உலகின் முக்கிய பிரச்சினையாக வலைகிறது. இவ்வாறான வளர்ச்சி குன்றிய நாடுகளின் பின்தங்கிய மனிதவளம் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் செழுமையான மனித வளம் இவை இரண்டின் இயக்கம் பற்றிய எதார்த்தம் உலகிற்கு மிக முக்கியம். இந்த எதார்த்தம் அரபு நாடுகளை சமூக கட்டுமானத்திற்குள் பிரதிபலிக்க செய்கிறது. இதன் நீட்சியில் சில நூற்றாண்டுகளாகவே உலக அரங்கில் முஸ்லிம் மதத்தின் அங்கதம் குறித்து அதிகம் ஆராய வேண்டியதிருக்கிறது என்றார் ராடின்சன். இதை சார்ந்த நாடுகளில் சில முக்கிய கருத்துருக்களின் வீச்சு குறித்து பார்க்க வேண்டியதிருக்கிறது. அதன் பொருளாதார வளர்ச்சி நிலை, சோசலிசம், முதலாளித்துவம், தேசியம், இஸ்லாம் போன்ற வித்தியாச கருத்துருக்கள் எவ்வாறு உறவுகொள்கின்றன என்பதும் முக்கியம். அரசியல் இதன் பின்னணியில் இயங்குகிறது. அரசியல் உடனடியான, நடைமுறை சார்ந்த கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்வி தெளிவானதும் அதற்கான பதிலை சமீபத்தில் வைத்திருப்பதுமாகும். ஆட்சியாளார்களின் செயல்பாடு, மற்றும் அரசியலாளர்கள் இதன் பதிலுக்கு ஏற்ற செயல்முறைகளை அரங்கிற்கு கொண்டு வருகிறார்கள். அரசியல் செயல்பாடு, பொருளாதார செயல்பாடு, கருத்தியல் மற்றும் கலாசார மரபு இவற்றிற்கிடையேயான இணைப்பு மற்றும் சரியான உறவு முறை என்பது என்ன? இதற்கான முன்முடிவுகள் சாத்தியமானவை. மத்திய கிழக்கின் வரலாற்றிலிருந்து எளிதில் பெற முடிந்தவை. முதலாளித்துவம் இந்த நாடுகளுக்கு உவப்பான கருத்தாக்கமா? என்பது குறித்த விவாதம் ஓரியண்டல் மற்றும் ஐரோப்பிய சிந்தனையாளர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவ கருத்தாக்கம் மத்திய கிழக்கு அரபுலகில் அதன் ஐரோப்பிய வருகைக்கு பிற்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் அறிமுகமானது. அங்குள்ள பெரும் நிலபரப்புகள் மற்றும் தொழில்வளங்கள் எல்லாம் தனிநபர்களுக்கு சொந்தமாயின. பூர்வீக நாடோடி பழங்குடிகள் தங்களின் பாரம்பரியத்தை இழந்தார்கள். முதலாளித்துவம் மற்றும் இஸ்லாம் குறித்த ஒப்பீடு முஸ்லிம் சிந்தனையாளர்கள், பொருளியலாளர்கள், மற்றும் வரலாற்றாளர்களால் ஐரோப்பாவில் அதிகம் விவாதிக்கப்பட்டது. இவர்கள் எல்லோருமே ஒரு அர்த்தத்தில் தர்க்கத்தின் அடிப்படையை மறந்து விடுகிறார்கள் என்கிறார் ராடின்சன். முஸ்லிம்களின் மத மரபு மற்றும் தேசிய வாதம் அல்லது இரண்டும் எப்போதுமே நவீன பொருளாதார முறைமைகளுக்கு எதிராக இருந்ததில்லை. இன்னொரு வகையில் இந்த மரபு பொருளாதார மற்றும் சமூக நீதிக்கு சாதகமானதாகவே இருக்கிறது. இஸ்லாம் குறித்த அனுதாபம் கொண்ட ஐரோப்பிய சிந்தனையாளர்கள் சிலர் மேற்கண்ட கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.முதலாளித்துவம் என்ற சொல்லாடலை பற்றி வித்தியாசமான கருதுகோள்கள் இருக்கின்றன. இவை விரிந்த பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வகையில் இது தனித்த சில பொருளாதார நிறுவனங்களை குறிக்கிறது. மேலும் இந்த நிறுவனங்களின் சட்டகத்தில் இயங்கும் அரசமைப்பையும், அதன் மனோபாவத்தையும் குறிக்கும். இதனடிப்படையில் முதலாளித்துவ நிறுவனங்கள் சில தருணங்களில் மொத்த சமூக அமைப்பையும் தன் கூட்டிற்குள் இழுக்கும். ஆனால் அவை அந்த சமூகத்தில் சிறுபான்மையாகவே இருக்கும். உற்பத்தி சாதனங்களின் தனியுடைமை, தாராள வர்த்தகம், இலாபத்திற்கான எத்தனிப்பு, சந்தைக்கான உற்பத்தி, பணப்பொருளாதாரம், போட்டி செயல்முறை, வர்த்தக செயல்பாட்டில் அறிவின் நுட்பம் போன்ற கூறுகள் இவற்றை இயக்கும் சக்திகளாக இருக்கும். முதலாளித்துவத்தின் மற்றொரு அர்த்த வகைபாடு மொத்த சமூகத்தையும் குறிக்கும். அதன் நிறுவனங்கள் அல்லது மனோபாவம் இவற்றை அர்த்தப்படுத்தவதில் முக்கிய பங்காற்றுகிறது. இது மேற்கத்திய சமூகத்தையே அதிகம் குறிக்கிறது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இந்த அமைப்பே உலகை முதலாளித்துவமாக பிரதிநிதித்துவம் செய்தது. இதில் ரோமப்பேரரசு முக்கிய பங்கு வகித்தது. முதலாளித்துவம் குறித்த வியாக்கியானங்கள் மார்க்சியர்களால் அதிகம் வெளிப்படுத்தப்பட்டன. இவர்களால் மட்டுமே இதன் தரவுகள் தெளிவாக முன் வைக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட பொருளாதார நிறுவனங்கள் பற்றியும், நவீன ஐரோப்பாவில் அது எவ்வாறு பரிணமித்தது என்பது பற்றியும் மார்க்சியர்களே அதிக அளவில் ஆராய்ந்தனர். ஆக முதலாளித்துவம் என்பது ஒரு வகையில் அதன் விரிந்த அர்த்தத்தில் குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றின் உற்பத்தி முறையாக இருக்கிறது. அதன் உரிமையாளர் தன் உற்பத்தி பண்டங்களுக்கு கூலியை வழங்கி, இலாபத்தை திரட்டுகிறார். இது தொழிலக முதலாளித்துவம். மற்றொரு வகையில் குறிப்பிட்ட சமூகத்தின் பொருளாதார முறைமையும், அதன் இயங்குமுறையும் ஒன்றை ஒன்று ஊடுபாவுதன் வழி அதன் இயக்கம் நிலவுகிறது. இது புதிய பொருளாதார காலகட்டத்தில் சோவியத் ரஷ்யாவின் முதலாளித்துவ வியாக்யானமாக இருந்தது. இறுதியாக முதலாளித்துவ "சமூக பொருளாதார அமைப்பு". இந்த அமைப்பே நாம் வாழும் வகைமையில் இருக்கிறது. நாம் ஒரு தனி மனிதனாகவும், அதே நேரத்தில் முதலாளித்துவ சமூக மனிதனாகவும் இருக்கிறோம். "நான் வாங்குகிறேன். அதனால் இருக்கிறேன்" என்ற ழீன் பூதிலாரின் மேற்கோள் இங்கு கவனிக்கத்தக்கது. இந்த வகைப்பாடு என்பது இடைக்கால ஐரோப்பாவின் வணிக மற்றும் நிதி மூலதனத்தின் எச்சமே. இந்த வடிவங்கள் இடைக்கால முஸ்லிம் உலகில் வழக்கில் இருந்தது என்கிறார் ரோடின்சன். ஐரோப்பாவில் முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு பரிணமித்த போது இஸ்லாம் அதன் சொந்த வெளிக்குள்ளும் இதை பிரதிபலித்தது. இஸ்லாமிய சமூக பொருளாதார அமைப்பை பற்றி ஆராயும் போது அதன் ஆரம்ப கட்டத்தில் வழக்கில் இருந்த லேவாதேவி முறை, (Money lending)வர்த்தக நடவடிக்கை ஆகியவற்றில் இருந்து தொடங்க வேண்டும். இஸ்லாமின் ஆரம்ப கட்டத்தில் மெக்கா நகர வர்த்தகர்கள் இடையே வட்டிக்கு பணம் கொடுத்தல் பிரதான தொழிலாக இருந்தது. இது பண்டமாற்று முறைமையிலும் வழக்கில் இருந்தது. வர்த்தக நடவடிக்கையில் மெக்கா நகரம் அரபுலகின் மையமாக திகழ்ந்தது. மார்க்ஸ் வணிக மூலதனத்தின் இருத்தலும் அதன் வளர்ச்சியும் குறிப்பிட்ட கட்டம் வரை அதன் சொந்த நிபந்தனையாக இருக்கிறது என்கிறார். இது பண்டைய அரபுலகிற்கு சரியாகவே பொருந்துகிறது. லேவாதேவி முறை வழக்கில் இருந்து குறிப்பிட்ட கட்டத்தில் அது தடை செய்யப்பட்டது. கடன் செயல்பாட்டில் இஸ்லாம் மதரீதியான கட்டளைகளை விதித்தது. அதை ஓர் ஒப்பந்தமாக்கியது. திருமணம் என்பது இஸ்லாமில் ஒப்பந்த நடவடிக்கையாக மாறியது இதன் தர்க்க தொடர்ச்சியே. நாணய முறை அடுத்த கட்டத்தை நோக்கி பரிணமித்தது. தினார், திர்ஹம், ரியால் என்பதாக பல வடிவங்களை எடுத்தது. இதன் தொடர்ச்சியில் பண வளத்தின் தர்க்க ஒழுங்கானது குறிப்பிட்ட வடிவத்தில் குவியமாகிறது. அதற்கு முதலாளித்துவ உற்பத்தி முறைமை காரணமாக இருக்கிறது. இதன் படி உற்பத்தி என்பது வணிகத்திற்காக நடைபெறுகிறது. விற்பனை பெரிய அளவில் இருக்கிறது. ஒரு வணிகர் பொருட்களை ஒரு வாடிக்கையாளர் வாங்குவதோடு திருப்தியடையமாட்டார். மாறாக தன் ஒரு கொள்முதலில் பல வாங்குபவர்கள் இருக்க வேண்டும் என்பதை தான் எதிர்பார்ப்பார். இன்னொரு அர்த்தத்தில் வணிக மூலதனத்தின் வளர்ச்சியானது தன் பரிமாற்ற மதிப்பிற்காக அதிக அளவில் உற்பத்தியை பெருக்குவதுடன், உற்பத்தி பொருட்களை அதே அளவில் பண்டமாக்கவும் செய்கிறது. ஆக முதலாளித்துவ வணிகம் மொத்தமாக இருக்கும் பட்சத்தில் பணத்தை சந்தைக்கான உற்பத்திக்கு பயன்படுத்துகிறது. இஸ்லாமின் ஆரம்ப கட்டம் உற்பத்திக்கானதாக இல்லாமல் வணிக பரிமாற்றமாக இருந்தது. வணிக செயல்பாடே மொத்த சமூகத்தின் பொருளாதார இயக்கத்தை தீர்மானித்தது. இதன் படி முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ நிறுவனங்கள் இதனடிப்படையில் செய்யப்பட்ட மூலதன கணக்கீட்டின் படி இயங்குகின்றன. இந்த இயக்கமுறை இவ்வுலகில் நாகரீகமடைந்த எல்லா நாடுகளிலும் வழக்கில் இருந்தது. சீனா, இந்தியா, ஈராக்,எகிப்து மற்றும் சிரியா ஆகியவற்றில் இடைக்கட்டத்தில் வழக்கில் இருந்த இந்த முறைமையானது நவீனகாலகட்டத்திலும் தொடர்ந்தது. இஸ்லாமின் பொருளாதார கூறுகளில் கூலி உழைப்பு முக்கிய இடம் பெறுகிறது. இஸ்லாமிய பொருளாதார அடிப்படைக்கு குர் ஆனும் , நபியின் சொல், செயல் வழியும் மூலக்கூறாகும். குர் ஆனை பொறுத்தவரை கூலி உழைப்பு ஆட்சேபனையற்ற இயற்கை நிறுவனமாகும். கூலி உழைப்பை குர் ஆன் இறைவனோடு தொடர்புபடுத்தி பேசுகிறது. இன்னொரு இடத்தில் மோசஸ் பற்றிய தொன்மத்தோடும் கூலி உழைப்பை தொடர்புபடுத்துகிறது. மேலும் அக்காலகட்டத்தில் நிலவிய கந்து வட்டி முறையை கடுமையாக எதிர்த்தது. இங்கு ரிபா என்ற சொல் பெருக்கம் (increase)என்ற அர்த்தத்தில் குர் ஆன் பயன்படுத்துகிறது. இது தற்கால வட்டி என்பதை குறிக்கும் interest என்பதல்ல என்கிறார் ரோடின்சன். மாறாக பணம் இரட்டிப்பாவதை ரிபா குறிக்கும் என்கிறார். அக்காலத்தில் யூதர்கள் மற்றும் அரபு பழங்குடியினர் மத்தியில் இந்த வழக்கம் இருந்தது. அவர்களுடனான அரபுகளின் பொருளாதார முரண்பாடு இந்த வழக்கத்தை தடை செய்யும் அளவிற்கு சென்றது. தற்காலிக தடை முறையாக வந்த இந்த வழக்கம் பின்னர் லௌகீகமயமாகி விட்டது. ஆக இஸ்லாமிய சமூக, பொருளாதார கட்டமைப்பை குர் ஆனின் கட்டளை சார்ந்த கோட்பாடுகள் வரையறுக்கின்றன. மேலும் உற்பத்தி சாதனங்களின் உடைமை குறித்து இஸ்லாமிய அடிப்படைகளில் எந்த கட்டுப்பாடும் இல்லை. கந்து வட்டி மற்றும் ஜகாத் என்ற வரி விதிப்பு மூலம் ஒருவனின் சொத்து என்பது இறைவனின் கண்காணிப்புக்குள்ளான ஒன்றாக இருக்கிறது. ஆக சொத்து என்பது குடும்பத்தின் பிரிக்கப்படாத வடிவமாக இருக்கிறது. அதே நேரத்தில் சில சூழ்நிலைகளில் அரசின் உடைமையாகவும் இருக்கும். சில முஸ்லிம் நாடுகளில் குறிப்பிட்ட அளவிலான நிலப்பகுதிகள் ஒரு குறிப்பிட்ட இனக்குழு அல்லது கிராமத்திற்கு சொந்தமான ஒன்றாக இருக்கின்றன. இவ்வாறாக சொத்துரிமை என்பது குறிப்பிட்ட கருதுகோள்கள் அடிப்படையில் லௌகீக வாழ்க்கையின் ஒவ்வொருவரின் உரிமையாக இருக்கிறது. இந்த உரிமை அதன் பொருளாதய இருப்பை தீர்மானிக்கிறது.முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு முறை என்பது முஸ்லிம் நாடுகளில் தற்போதைய கட்டத்திற்கு முன்னர் வழக்கில் இருக்கவில்லை என்கிறார் ரோடின்சன். மாறாக முதலாளித்துவத்தின் வெற்று வர்த்தக அமைப்பு முறையின் மறு பிரதிபலிப்பாகவே முந்தைய அரபு சமூகம் இருந்திருக்கிறது. அன்றைய அரபு சமூகத்தில் மெக்கா நகரம் முதலாளித்துவ வர்த்தக மையமாக இருந்தது. அதன் பெரும்பாலான குடிமைகள் குறைஷி என்ற உயர் வர்க்கத்தை சார்ந்தவர்கள். அவர்கள் தங்களை வர்த்தகம் மற்றும் வட்டிக்கு கடன் வழி உயர்த்திக்கொண்டனர். மார்க்ஸ் இதனை அறிவார்ந்த வர்த்தக நடவடிக்கை என்றார். பண்டங்களை வாங்குவது மற்றும் விற்பது போன்ற நடவடிக்கையால் அவர்களின் மூலதனம் பெருகியது. அவர்களின் பெருக்கத்திற்கு மத ரீதியான நடைமுறைகளையோ அல்லது கோட்பாடுகளையோ துணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. இவர்களின் இந்த பொருளாதார நடவடிக்கையை கார்ல் பொலைன் இழைக்கப்படாத பொருளாதாரம் (unembedded economy)என்றார். அதாவது முறைப்படியான பொருளாதார நிறுவனங்களை கட்டமைக்காமல் சமூகத்தின் பொருளாதார சூழலிலிருந்து வேறுபட்டு வெறும் இனக்குழு சார்ந்த பொருளாதார நடவடிக்கை தான் அது. இங்கு பண்டங்களின் தேவை மற்றும் அளிப்பை சார்ந்து அதன் விலைகளும் ஏற்ற இறக்கமான சூழலில் இருந்தன. அன்றைய கட்டத்தில் மெக்கா நகரம் அரேபிய தீபகற்பத்தின் சிறு பகுதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் நிலையான பொருளாதார கட்டமைப்பை கொண்டு பண்டங்களை சந்தைக்கு அனுப்பும் திருப்பு மையமாகவும் இருந்தது. நறுமணப்பொருட்களின் வர்த்தகம் இங்கிருந்து அரேபிய முழுவதற்கும் பரவி குறைஷி இனக்குழுவிற்கு வருமானத்தை பண வடிவில் அள்ளிக்குவித்த கேந்திரமாகவும் இருந்தது.&lt;br /&gt;இதன் தொடர்ச்சியில் அரபுகள் அரேபிய தீபகற்பம் முழுவதையும் கைப்பற்றி அங்கு அரசமைப்பை ஏற்படுத்தினர். தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் அவர்கள் குடிமக்கள் மீது வரிவிதிப்பை ஏற்படுத்தினர். அங்கு வர்த்தக நடவடிக்கைக்கும், பண - பரிமாற்ற முறைமைக்கும் அனுமதி அளித்தனர். இந்நிலையில் மெக்கா குறைஷிகள் தங்கள் மூதாதையர்களின் வர்த்தக நடவடிக்கைகளை பின் தொடர்ந்தவர். அவர்களில் ச அத் பின் மொசைப் ஒருவர். தன் வாழ்நாள் முழுவதும் முன்னோர்களின் பொருளாதார நடவடிக்கையை அறிவதிலும், அதனை செயல்படுத்துவதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.&lt;br /&gt;கி.பி 750 ல் அப்பாஸிட் வம்ச புரட்சிக்கு பின்னர் இனக்குழுக்களுக்கிடையே சமத்துவத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பொழுது பெரும்பாலான மக்கள் இஸ்லாமிற்கு மாறி விட்டார்கள். மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகள் அரபுகள் வசம் வந்து விட்டன. வியாபார நடவடிக்கைகள் இந்த பிராந்தியம் முழுவதும் பரவி வியாபித்தன. ஏற்கனவே துண்டிக்கப்பட்டிருந்த பகுதிகள் ஒன்றிணைந்ததால் அதிகப்படியான புதிய பண்டங்கள் ஒரு பொதுவான சுழற்சி மையத்திற்கு திருப்பப்பட்டன. அதன் பிறகு இப்பிராந்தியங்களில் முறைப்படியான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இது பதினான்காம் நுற்றாண்டு காலத்திய நடவடிக்கையாகும். முஸ்லிம் பேரரசு காலத்திய வணிகர்கள் இலாபத்திற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி தங்களின் விளைவை மதிப்பிட்டுக் கொண்டனர். அவர்களின் வணிக இலாபங்கள் ஒவ்வொன்றும் பண வடிவில் மாற்றப்பட்டன. இக்காலத்திய வணிகம் பற்றிய விளக்கம் பல்வேறு இஸ்லாமிய பொருளாதார அறிஞர்களால் கொடுக்கப்பட்டது. குறிப்பாக பதினான்காம் நூற்றாண்டு சமூகவியலாளரும், வரலாற்றாசிரியருமான இப்னு கல்தூண் இதில் முக்கியமானவர். அக்கால வணிக நடைமுறையை குறித்து இப்னு கல்தூண் பின்வருமாறு குறிப்பிடுகிறார். " வணிகம் பற்றிய அர்த்தம் தெரிந்தது தான். அதாவது பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதன் மூலம் மூலதனத்தை பெருக்கி இலாபத்தை ஏற்படுத்துதல். இந்த பொருட்கள் அடிமைகள் , தானியங்கள், மிருகங்கள், ஆயுதங்கள் மற்றும் ஆடைகளை உள்ளடக்கியதாக இருக்கலாம். இதில் உறிஞ்சப்பட்ட தொகையே இலாபம். இந்த இலாபத்தை உருவாக்க பொருட்கள் சந்தையின் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப சேமிக்கப்படுகின்றன. இதுவே அதிகப்படியான இலாபத்தை உருவாக்குகிறது. மேலும் வணிகர்கள் தங்களின் பொருட்களை தேவைக்கு ஏற்ப பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இங்கு சொந்த நாட்டை விட ஏற்றுமதி செய்யப்படும் நாட்டில் பொருட்களுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. இதுவும் அவர்களுக்கு அதிகப்படியான இலாபத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது. ஆக ஒரு பழைய வணிகர் வணிகத்தின் உண்மையை அறிய முயல்பவரிடம் இவ்வாறு கூறுகிறார். " மலிவாக வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய். இதுவே உனக்கான வணிகம்."&lt;br /&gt;வணிகம் பற்றிய இப்னு கல்தூனின் மேற்கண்ட வரிகள் அக்காலத்திய எதார்த்தத்தை வெளிக்கொணர்பவை.அதே இப்னு கல்தூன் வணிகத்தின் கடன் நடவடிக்கைகள் குறித்து பிந்தைய கட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். " ஒருவர் கடன் கொடுப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டால், பெரும்பாலானோர் அதை திருப்பியளிக்க மறுத்து விடுகிறார்கள். இந்நிலையில் கடனீந்தோர் தங்களின் கடன் தொகைக்காக ஏராளமான கஷ்டங்களை சந்திக்க வேண்டியதிருக்கிறது. இது மாதிரியான பழக்கங்கள் ஒருவர் வணிகத்தில் ஈடுபடுவதை தடுத்து விடுகிறது. இது ஒரு தொழில் என்ற நிலையில் ஒருவர் சாதுரியமாக, தந்திரமாக, பிடிவாதமாக, கறாராக, கலக குணத்துடன் வணிகத்தில் ஈடுபடுவதை நியாயப்படுத்துகிறது. சில அபூர்வ வணிகர்கள் மட்டுமே இம்மாதியான தவறுகளில் இருந்து விலகி நின்று வணிகச் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள்."இப்னுகல்தூனின் முந்தைய கோட்பாடுகள் அக்காலத்தில் இஸ்லாமிய உலகில் நிலவிய சமூக பொருளாதார கட்டமைப்பை குறித்து அதிகம் விளக்குகின்றன. இப்னு கல்தூன் தன்னை சுற்றியுள்ள கலாசார உலகத்தை கூர்மையான கண் கொண்டு நோக்கினார். அவரை பொறுத்தவரை ஒரு மாதிரி வணிகன் என்பவன் அதற்காக போராடுபவனும், எங்கும் எப்பொழுதும், அதன் எல்லா வழிகளிலும் பணத்தை அடைபவனுமாவான். ஆக இடைக்கால முஸ்லிம் உலகம் ஆரம்ப கால இஸ்லாமிய உலகிலிருந்து பரிணாமமடைந்து தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களை கையாளும் திறன் பெற்றிருந்தது. மேலும் உழைப்பு பிரிவினை (Division of labour)அடிப்படையில் பொருட்களின் பரிவர்த்தனை குறித்தும் அறிந்திருந்தது. இவ்வாறாக இடைக்கால இஸ்லாமிய உலகம் பணத்தின் மதிப்பையும், விலைமதிப்பற்ற உலோகங்களின் குணங்கள் பற்றியும் அறிந்திருந்தது. இங்கு செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தின் ஒரு பகுதியை நிலத்தில் முதலீடு செய்தார்கள். இந்த கட்டம் ஒரு வேளை முதலாளித்துவ திசையல்லாத வளர்ச்சி நிலையா? என்பதை பற்றிய சந்தேகம் இன்றும் பொருளாதார அறிஞர்களிடம் இருக்கிறது.&lt;br /&gt;ஆனால் நமக்கு நிலத்தில் முதலீடு செய்வதற்கும், வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்குமான விகிதாச்சார உறவு குறித்து ஏதும் தெரியவில்லை. இது அதிகமும் நேரம், இடம், சூழல் ஆகியவற்றை சார்ந்து இருக்கிறது. இப்னு கல்தூன் பாதுகாப்பற்ற தருணங்களில் நிலத்தில் முதலீடு செய்வதை அபாயம் என்கிறார். முஸ்லிம் உலகில் இவ்வாறான தொழில் வளர்ச்சியானது உற்பத்தியை நோக்கிச் சென்று பரிவர்த்தனை மதிப்பை சமன் செய்ய முயன்றது. ஒரு பொருளாதார கட்டமைப்பு குறிப்பிட்ட சமூகத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர மாதிரியின் படி முன்னோக்கிச்சென்றால் அது காலத்திற்கு ஏற்ப ஒவ்வாமையை தான் ஏற்படுத்தும் என்கிறார் மாக்சிம் ரோடின்சன். மேலும் மூன்று வித கருத்தியல்கள் முக்கியமானவை. தேசியவாத கருத்தியல், மதகருத்தியல், பிரபஞ்சம் தழுவிய மனித கருத்தியல். இம்மூன்றும் பிரதேசம், கடவுள், மனிதன் போன்ற கருதுகோள்களால் சமன் செய்யப்படுகின்றன. இங்கு மதகருத்தியல் அடிப்படையிலான கடவுள் சார்ந்த சமூக பொருளாதார கட்டமைப்பு முன்னோக்கம் சாராதது என்கிறார் ரோடின்சன். சோஷலிச சமூக பொருளாதார கட்டமைப்பில் இஸ்லாம் மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. பொருளாதார நிகழ்வுக்காக வெகுஜன திரளின் கருத்தியல் அடிப்படையிலான நகர்வு என்பது நவீன தேவையாக இருக்கிறது. முந்தைய கட்டத்தில் ஒருவரும் பொருளாதார கட்டமைப்பை கால மாற்றத்திற்கு ஏற்ப நகர்த்துவது குறித்து சிந்தித்திருக்க மாட்டார்கள். ஆக இஸ்லாமும் வெகுஜன திரளை பொருளாதார முடிவுகளை நோக்கி நகர்த்தவில்லை என்கிறார் ரோடின்சன். முதலாளித்துவ கருத்தியலை பொறுத்தவரை வரலாற்று ரீதியாக இஸ்லாம் அதன் எல்லைகளை தொட்டும், தாண்டியும், முறித்தும் பயணித்து வந்திருக்கிறது. இஸ்லாமிய நாடுகளின் தற்போதைய மற்றும் முந்தைய உதாரணங்கள் இதனை அதிகமும் பிரதிபலிக்கின்றன. இதனை குறித்து ஐரோப்பிய ஓரியண்டலிஸ்டாக அதிகம் ஆராய்ந்த மாக்சிம் ரோடின்சன் இஸ்லாம் குறித்த பொருளாதார கோட்பாட்டாளரில் முக்கியமானவராக தெரிகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-2020678146480528943?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/2020678146480528943/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=2020678146480528943' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/2020678146480528943'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/2020678146480528943'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2010/01/blog-post.html' title='இஸ்லாமும் முதலாளித்துவமும்- மாக்சிம் ரேடின்சனின் பார்வையில்'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-4325971957339404078</id><published>2009-11-26T16:16:00.000+05:30</published><updated>2009-11-26T16:54:35.825+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போதைப்பொருள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆப்கானிஸ்தான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணெய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாரிக் அலி'/><title type='text'>எண்ணெயும் போரும்- தாரிக் அலியின் கோட்பாடுகள் குறித்து</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_qC82IoQv3x0/Sw5jStEmtBI/AAAAAAAAAOw/wKiO31TGplQ/s1600/tariq-ali2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5408369375506248722" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 262px" alt="" src="http://1.bp.blogspot.com/_qC82IoQv3x0/Sw5jStEmtBI/AAAAAAAAAOw/wKiO31TGplQ/s320/tariq-ali2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இருபதாம் நூற்றாண்டு உலகிற்கு அளித்த பெருங்கொடை பெட்ரோலியம். இதற்காகவே கடந்த நூற்றாண்டில் போர்கள் பல நடைபெற்றிருக்கின்றன.வியட்நாம் போரில் அமெரிக்க தோல்விக்கு எண்ணெயும் ஒரு காரணம் என்று பிந்தைய கட்டத்தில் போரியல் நிபுணர்கள் வெளிப்படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் தான் பெட்ரோல் குறித்த முக்கியத்துவத்தை சர்வதேச சமூகம் உணர்ந்து கொண்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்த காலகட்டத்தில் பிரான்சு அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்." எமக்கு ஒரு துளி பெட்ரோல் ஓரு துளி இரத்தத்திற்கு சமமானது." இதனை தொடர்ந்து எல்லோரும் அதன் தீவிரத்தை உணரத்தொடங்கினார்கள். உலக வரலாற்றில் கனிம வளங்களை மனிதன் போராடி தான் கண்டறிந்திருக்கிறான். இயற்கை அதன் வளத்தை சிலருக்கு மட்டுமே கையளிக்கிறது. இதற்காகவே வரலாற்றில் பல போர்கள் நடந்திருக்கின்றன. காலம் கடக்கும் போது கனிம வளங்களும் மனிதனின் மற்றொரு இருப்பாக மாறுகின்றன. இருப்பும் காலமும் (Being and Time)ஒன்றை ஒன்று சார்பானவை. இவை பெட்ரோல் விஷயத்தில் சரியாகவே பொருந்துகின்றன.சராசரி மனிதனின் வாழ்க்கை தரம் உயரும் போது பெட்ரோலிய பயன்பாடும் அதிகரிக்கிறது. இவை தனிநபர் வருமான வரம்பிற்கு நேர்விகிதத்தில் இருக்கின்றன. தனிநபரின் வருமானம் அதிகரிக்கும் போது அதன் ஒத்திசைவாக பெட்ரோலிய செலவு அதிகரிக்கிறது. இங்கு பெட்ரோல் அளவு மாற்றத்திற்கு உட்படுகிறது. உலகின் தற்போதைய சராசரி பெட்ரோலிய நுகர்வு என்பது தனிநபருக்கு வருடத்திற்கு 4.4 பீப்பாய்கள். இவற்றின் சராசரியை வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் அதிகப்படுத்துகின்றன. ஆனால் வளரும் நாடுகளான மூன்றாம் உலக நாடுகள் இன்னும் உலக சராசரிக்கு கீழே இருக்கின்றன. இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் நுகர்வு விகிதங்கள் இவற்றை வெளிப்படுத்துகின்றன. அமெரிக்கா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்சு ஆகியவை அதிக அளவில் பெட்ரோலை உறிஞ்சு கொள்ளும் நாடுகள். அமெரிக்காவின் வருடாந்திர சராசரி தனி நபர் பெட்ரோலிய நுகர்வு 24 பீப்பாய்கள். இதில் அங்குள்ள பெரும் முதலாளிகளே எல்லாவற்றையும் உறிஞ்சி சராசரியை அதிகரிக்க செய்கிறார்கள். பெட்ரோலின் இந்த முரண் ஓட்டம் நாடுகளுக்கிடையேயான உராய்வுகளுக்கு வழி வகுக்கிறது. ஓர் அர்த்தத்தில் போருக்கான துணைக்கோளாகவும் பெட்ரோல் இருக்கிறது. இதனடிப்படையில் இருபதாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நான்கு போர்கள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றை பற்றி தாரிக் அலி தன் அடிப்படைவாத மோதல்கள் (The Clash of Fundementalism)நூலில் விரிவாக ஆராய்ந்தார். இரண்டாம் உலகப்போர் காலனிய தகர்ப்பிற்கான புதிய செயல்முறையை தொடங்கி வைத்தது. பழைய பேரரசுகள் எல்லாம் அவற்றின் சொந்த முரண்பாடு காரணமாக பலவீனம் அடைந்தன. ஜெர்மன் ஏகாதிபத்தியம் தோல்வியடைந்தது. அமெரிக்கா பொருளாதார மற்றும் இராணுவ அடிப்படையிலான பெரும் வல்லரசாக உலகளாவிய நிலையில் துளிர் விட தொடங்கியது. இரண்டாம் உலகப் போர் முடிந்த கட்டத்தில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய இரு வல்லரசுகளுக்கிடையேயான பனிப்போர் முன்னோக்கி சென்றது. அந்த கட்டத்தில் அமெரிக்கா, சோவியத், பிரிட்டன் ஆகிய மூன்று வல்லரசுகளும் ஐரோப்பாவை தங்கள் ஆதிக்கத்தின் கோளங்களாக கூறு போட எழுதப்படாத ஒப்பந்தங்களை இட்டுக்கொண்டன. ஸ்டாலின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, இத்தாலி, பிரான்சு, கிரீஸ் போன்ற நாடுகள் ஆங்கிலோ-அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ் வந்தன. இந்நிலையில் உலகின் பெரும் பெட்ரோல் மையமாக மத்திய கிழக்கு பிராந்தியம் இருக்கிறது. அன்றைய கட்டத்தில் இவை துண்டிக்கப்பட்டு ஏகாதிபத்தியங்களின் துணைக்கோளாக இருந்தன. 1948 ல் இஸ்ரேல் உருவான பிறகு இப்பிராந்தியத்தில் உணர்வு மற்றும் வாழ்நிலை ரீதியான பதட்டம் அதிகமானது. இஸ்ரேலின் உருவாக்கமும் அவற்றின் மீதான மேற்கத்திய அக்கறையும் தாரிக் அலியை பொறுத்தவரை எண்ணெய்க்கான செயல்தந்திரமே. இந்த இடத்தில் மேற்குலகம் இஸ்ரேலை "எண்ணெய், எண்ணெய், எண்ணெய்" என்பதாக பதிலீடு செய்கிறது. இதனடிப்படையிலான முதல் போர் எகிப்து மற்றும் இஸ்ரேல், மேற்கத்திய வல்லாதிக்க அரசுகளுக்குமிடையே ஏற்பட்டது. எகிப்து அப்போது நாசரின் கட்டுப்பாட்டில் இருந்தது. நாசர் தொடக்கத்தில் பிரிட்டன் ஆதரவாளராகவும் , பின்னர் கம்யூனிச அனுதாபியாகவும், அதற்கு பிறகு எகிப்து தேசியவாதியாகவும் மாறினார். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு எகிப்தின் உட்கட்டமைப்பு, சூழல் தகவமைப்பு, கனிம வளங்கள், புராதன சின்னங்கள் இவை குறித்த ஆர்வம் மேற்கத்திய அரசுகளுக்கு ஏற்பட்டது. பிரிட்டன் நாசர் சோவியத் யூனியனின் அனுதாபியாக மாறிய போது அவரை கொலை செய்ய குறி வைத்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. நாசர் தொடர்ந்து எகிப்து நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தினார். இந்நிலையில் இந்திய பிரதமரான நேரு எகிப்துக்கு சென்று நாசரை சந்தித்தார். ஆப்ரிக்கா நாடு என்ற வகையில் எகிப்து தனித்து இயங்க வேண்டும் என்றும், அணிசேரா அமைப்பில் சேர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 1955 ல் நடந்த அதன் மாநாட்டில் நாசர் இந்தியா, சீனா ஆகியவற்றின் ஆதரவால் அதிகம் தாக்கமுற்றார். அவரிடம் நேரு எகிப்து எப்பொழுதும் பனிப்போர் காலகட்டத்தில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் யூகோஸ்லோவியா அதிபரான டிட்டோவை நாசர் சந்தித்தார். டிட்டோவும் நேருவின் வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பனிப்போர் அணிகளிலிருந்து விலகி இருக்கும் படி நாசரை வலியுறுத்தினார். அதே நேரத்தில் எகிப்திலிருந்து நிரந்தரமாக விலகி கொள்ளும் படி பிரிட்டனை வலியுறுத்தலாம் என்றார். அதேகாலகட்டத்தில் எகிப்தில் இஸ்லாம் மற்றும் அதற்கு வெளியில் கருத்தியல் அடிப்படையிலான ஏராளமான குழுக்கள் இருந்தன. அவர்கள் இஸ்லாமிய உலகம் பிளவுப்பட்டது இருப்பதை கண்டறிந்தார்கள்.மேலும் சவூதி அரேபியா, ஈரான், துருக்கி, ஜோர்டான், ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வாஷிங்டன் மற்றும் பிரிட்டனின் ஊதுகுழல்களாக இருந்தன. அதில் சிரியா சின்ன ஊதுகுழலாக இருந்தது. இரு வல்லாதிக்க அரசுகளும் தங்களின் நீண்டகால நகர்விற்காக மத்திய கிழக்கு பிராந்தியத்தை தங்களுக்கு சார்பானவையாக திருப்பின. இதில் இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகியவை மட்டுமே சுதந்திரமாக இயங்கின. வல்லாதிக்கங்களின் கட்டுப்பாட்டு தந்திரங்கள் எவற்றுக்கும் இவை அடிபணியவில்லை. அதற்கான தண்டனையை அவர்களுக்கு மிக அருகில் காத்துக்கொண்டிருந்தது. எகிப்து நைல் நதியின் குறுக்கே அணைக்கட்டுவதற்காக அமெரிக்கா மற்றும் சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கியிடம் நிதி உதவி கோரியிருந்தது. இது அங்கீகரிக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால் திடீரென இது ரத்துசெய்யப்பட்டது. எகிப்து உலக அரங்கில் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள விரும்புவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியது. இதன் பின்னரசியல் பாகிஸ்தான், துருக்கி, ஈரான் ஆகியவற்றின் இடையீடு தான் என்பது பின்னர் தெரியவந்தது. அன்றைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான ஜாண் போஸ்டர் டல்லஸ் நிதி உதவி மறுப்பை பற்றி 1956 ஜுலை 19 ல் எகிப்துக்கு அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தினார். அதன் பின்னர் சில நாட்களில் அதிபரான நாசர் அலெக்சாண்டிரியாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் இதைப் பற்றி மக்களிடம் விரிவாக எடுத்துரைத்தார். அதில் ஏகாதிபத்தியத்தின் கோபத்தை அடக்க வேண்டும் என்றும், அமெரிக்க மற்றும் பிரிட்டனின் மிரட்டல்களை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் தனியாரிடம் இருக்கும் சூயஸ் கால்வாய் பகுதியை தேசியமயமாக்க வேண்டும். இதன் மூலம் அணை கட்ட வருமானம் வரும் என்றார். இதை கூட்டத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் மத்தியில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வல்லாதிக்கங்களை குறிப்பாக பிரிட்டனை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.காரணம் சூயஸ் கால்வாயின் நிழல் கட்டுப்பாட்டாளராக பிரிட்டன் இருந்து வந்ததுடன் அதன் வருமானத்தின் ஒருபகுதி அதற்கு சென்று கொண்டிருந்தது. சூயஸ் கால்வாய் என்பது உலகிலேயே அதிக அளவில் நீர்வழி போக்குவரத்து நடைபெறும் பகுதியாகும். இது 101 மைல்கள் தூரம் கொண்டது. முக்கியமாக ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களை சரியாக பிரிக்க கூடியதாகவும், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் ஆகியவற்றுக்கு இடையே அமைந்திருப்பதால் ஐரோப்பாவுடன் நீர்வழியாக இணைப்பளிக்கும் கால்வாயாக இருக்கிறது. ஆகவே எகிப்தின் இந்த முடிவு அநேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பழிவாங்கும் சந்தர்ப்பத்தை அவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தன. நாசரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவர் அரபுலகின் ஹீரோவாகவும், காலனிய எதிர்ப்பாளராகவும் மாறினார். இதனை தொடர்ந்து எகிப்திய அரசியல் தலைவர்களும், மேற்கத்திய சார்பானவர்களும் அடுத்து நிகழப்போகும் மோசமான நிகழ்வுகளை கண்டு பயந்தனர்.பிரிட்டன் பிரதமரான அந்தோணி ஏடன் நாசரை "நைல் பிரதேசத்தின் ஹிட்லர்" என வர்ணித்தார். நாசர் இதை அறிந்தே இருந்தார். பிரிட்டன் தன் துப்பாக்கி இராஜதந்திரத்தை செயல்படுத்தும் எனவும், அதற்காக இஸ்ரேலையும் பயன்படுத்தும் எனவும் அறிந்திருந்தார். இதற்காக அவர் இஸ்ரேலிய பிரதமரான மோசே சாரத்திற்கு கடிதம் எழுதினார். அதில் " இந்த விவகாரத்திற்கு வெளியே இருக்கும் படியும், இரு நாடுகளுக்குமிடையேயான பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம்" எனவும் குறிப்பிட்டிருந்தார். மோசே சாரத் கொஞ்சம் அனுதாப உணர்வு கொண்டவர் தான். ஆனால் அதிபரான பென்குரியன் இரத்த வாடையை உட்கொண்டவர். அதனால் நாசரின் இந்த கடிதத்தை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லை. இதன் தொடர்ச்சியில் அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் பிரிட்டன், பிரான்சு, இஸ்ரேல் ஆகியவை எகிப்தின் மீது தாக்குதல் நடத்த தீர்மானித்தன. 1956 அக்டோபர் 29 ல் இஸ்ரேலிய படைகள் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதி மீது தாக்குதல் நடத்தின. அதற்கு இருநாட்கள் கழித்து ஆங்கில -பிரெஞ்சு படைகளின் கூட்டமைப்பு சூயஸ் கால்வாய் மீது இறங்கியது. வல்லாதிக்க அரசுகளின் இந்த ஆக்கிரமிப்பு செயல்பாட்டை பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகள் ஆதரித்தன. இந்நிலையில் எகிப்திய படைகள் பலவீனப்பட்டன. இந்நிலையில் எகிப்துக்கு உதவும் பொருட்டு சோவியத் யூனியன் எகிப்திலிருந்து படைகளை பின்வாங்கும் படி இறுதி எச்சரிக்கை விடுத்தது. அதற்கு அடுத்த நாள் இந்த நாடுகள் தங்களின் இராணுவ நடவடிக்கையை நிறுத்திக்கொண்டன. பின்னர் அமெரிக்க ஜனாதிபதியான ஐசன்கோவர் மூன்று நாடுகளின் செயல்பாட்டை வெளிப்படையாக விமர்சித்தார். நாங்கள் இராணுவ ஆக்கிரமிப்பை மன்னிக்க மாட்டோம் என்றார். இதன் பிறகு பிரிட்டன் மற்றும் பிரான்சு ஆகியவை செய்த் துறைமுகத்திலிருந்து தங்களின் படைகளை வாபஸ் பெற்றன. இதுவே முதல் எண்ணெய் போர் என வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. நாசரை பொறுத்தவரை அவர் சண்டையில் தோற்றிருக்கலாம். ஆனால் போரில் ஒரு வகையில் வெற்றிப்பெற்று விட்டார். காரணம் போர் முடிந்த பிறகு எகிப்தின் எல்லா வங்கிகளும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் தேசியமயமாயின. போலந்து பொருளாதார நிபுணரான ஆஸ்கர் லேஞ் போர் நடக்கும் இரு வருடங்களுக்கு முன்பு எகிப்துக்கு பயணம் செய்து திட்டமிடப்பட்ட பொருளாதார திட்டங்கள் எகிப்தை விரைவில் வளப்படுத்தும் என்றார். இதனை சுவீகரித்துக்கொண்ட நாசர் அதனடிப்படையில் திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார். இதன் நகர்வில் எகிப்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சிறந்த ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகான எண்ணெய் போர் குவைத் மீதான் ஈராக்கின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து 1991ல் அமெரிக்க தலைமையிலான பன்னாட்டுப்படைகள் ஈராக்கை தாக்கிய போது ஏற்பட்டது. உலகின் 25 சதவீத எண்ணெய் வளத்தை கொண்டிருக்கும் ஈராக் அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக தன் 42 மில்லியன் பேரல் எண்ணெய் வளத்தை இழந்தது. குவைத் மற்றும் ஈராக் ஆகியவற்றில் பல எண்ணெய் வயல்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டன. இது உலக அளவில் பெட்ரோலிய உற்பத்தியில் மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அமெரிக்காவின் கொசாவா, கொலம்பியா, ஆப்கானிஸ்தான் போர்கள் இந்த எண்ணெய் காரணியை மீண்டும் உறுதிப்படுத்தியது. ஆப்கான் மீதான சோவியத் போரின் போது அமெரிக்க ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு ஆயுதப்பயிற்சியும், நிதி உதவியும் அளித்தது. ஆக இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய வரலாற்றில் எண்ணெய் என்பது அமெரிக்காவின் மிகப்பெரும் புவி அரசியல் கூறாக இருந்தது என்கிறார் தாரிக் அலி. மேலும் 2003 ஆம் ஆண்டைய அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு போர் அமெரிக்காவின் நீண்டகால திட்டத்தை மிகச்சரியாக நிறைவேற்ற செய்தது. 1991 போரை அடுத்து அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஈராக் மீது பொருளாதார தடை விதித்தது. அதன் பிறகு பல நாடுகள் ஈராக்கிடமிருந்து எண்ணெயை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக உணவுப்பொருட்களை அளித்தன. இது உணவுக்கு எண்ணெய் திட்டம் என்றழைக்கப்பட்டது. இதில் பல அரசுகள் பெருமளவில் மோசடி செய்தன. இது குறித்த விரிவான வரலாற்றுத் தகவல்களும், விமர்சன பூர்வமான அணுகுமுறையும் அடங்கிய நூலான The Bush in Babylon தாரிக் அலியிடமிருந்து வெளிவந்தது. வளைகுடா மற்றும் பால்கன் பிரதேசம் மீதான அமெரிக்காவின் கட்டற்ற போரானது தார்மீக வெற்று காசோலையின் நகல் உதாரணம் என்றார் தாரிக் அலி. அவரின் மத்திய கிழக்கு மற்றும் மேற்குலக ஆய்வுமுறைகள் அனைத்திலும் ஏகாதிபத்தியம் மீதான விமர்சனம் நிறைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெயின் பரிமாற்றத்தை பதிலீடு செய்யும் ஒன்று போதைப்பொருள். அமெரிக்கா ஆப்கானிஸ்தான், இந்தோ சீனா போன்ற பிரதேசங்களை இந்த பதிலீட்டு வளையத்திற்குள் கொண்டு வருகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய அமெரிக்க வரலாறு முழுவதும் தூர கிழக்கு நாடுகளுடனான மருந்து கடத்தலில் இருந்து தான் தொடங்குகிறது.1950 ல் தொடங்கிய கொரிய யுத்தம் இதன் பின்னணியில் தான் தொடங்கியது. மாவோ தலைமையிலான சீனப்புரட்சிக்கு பின்னர் சீனாவின் மாபெரும் ஓபிய கடத்தல் முடிவுக்கு வந்தது. இது உலக போதை மருந்து பரிவர்த்தனையில் 85 சதவீதமாகும். ஐம்பதுகளில் இந்தோ சீனா பகுதியிலிருந்து போதை மருந்துகள் ஈரான், லெபனான், சிரியா போன்ற பகுதிகளுக்கு கடத்தப்பட்டது. ஆப்கான் மீதான சோவியத் போரும், அமெரிக்க போரும் எண்ணெய், போதை மருந்து ஆகியவற்றை நேரெதிர் திசையில் பதிலீடு செய்பவை. ஆப்கான் மீதான சோவியத் போரின் போது அமெரிக்க ஜனாதிபதியான ஜிம்மி கார்டர் சொன்னார்." மத்திய கிழக்கு பிரதேசத்தை சோவியத் யூனியன் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் அமெரிக்காவின் பெட்ரோலிய பொருளாதாரத்திற்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அரேபிய வளைகுடாவை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே இந்த இலக்கை அடையும் முயற்சி. 1970 க்கு முன்பு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியத்திற்கெதிரான எண்ணெய் வள நாடுகளின் புரட்சி காரணமாக தெற்கு மற்றும் வடக்கு பூகோள பிரதேசங்களின் புதிய உலக ஒழுங்கு ஏற்பட்டது. அங்கு தனிநபர் வருமான வீதம் அதிகரித்தது. புள்ளி விபரங்களின் படி 1960 மற்றும் 1980 க்கும் இடைப்பட்ட காலத்தில் லத்தீன் அமெரிக்கா நாடுகளின் தனிநபர் வருமான வீதம் 73 சதவீதம் அதிகரித்தது. ஆப்ரிக்காவின் தனிநபர் வருமான வீதம் 34 சதவீதம் அதிகரித்தது.எண்பதுகளுக்கு பிறகு சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா இடையே எண்ணெய் வள பகிர்தல் தொடர்பான இரகசிய உடன்பாட்டிற்கு பிறகு அமெரிக்கா அந்நாடுகளின் தன் இராணுவ ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது. இதன் விளைவாக 1980 க்கும் 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் லத்தீன் அமெரிக்காவில் வருமான வளர்ச்சி 6 சதவீதமாக குறைந்தது.அதே நேரத்தில் ஆப்ரிக்காவில் வளர்ச்சி 23 சதவீதமாக சரிவடைந்து பெரும்பாலான நாடுகள் பட்டினி நிலைமைக்கு தள்ளப்பட்டன. சவூதியுடனான ஒப்பந்தம் அதன் டாலர்களை அதன் இடத்திற்கே மீண்டும் திரும்ப செய்தது. ஆக 1956 எகிப்து மீதான போர், 1967 அரபு-இஸ்ரேல் போர், 1991 ஈராக் போர், கொலம்பியா போர், வியட்நாம் போர், ஆப்கான் போர் எல்லாமே இனி பௌதீக இருப்பு பெட்ரோலை வைத்தே தீர்மானிக்கப்படும் என்பதை உலகுக்கு அறிவித்தது. இயற்கை வளங்கள் மீதான மனிதனின் போராட்டம் என்பது 16 நூற்றாண்டின் இறுதிபகுதியில் ஏற்பட்ட முதலாளித்துவ சமூகத்தின் தோற்றத்திற்கு பிறகே ஏற்பட்டது. அன்று முதல் இன்றுவரை முடிவற்ற தொலைக்காட்சி தொடர் மாதிரி எண்ணெய் மீதான இந்த முரண்பாடு நிகழ்ந்து கொண்டிருந்தது. இதை குறித்து ஆராய்ந்த கீழைச்சிந்தனையாளர்களில் தாரிக் அலி மிக முக்கியமானவராக இருக்கிறார். இதைப்பற்றியே அவரின் எழுத்துக்களே எண்ணெய் விவகாரம் சார்ந்து இன்றும் கோடிடப்படுபவையாக இருக்கின்றன.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7748589852161636488-4325971957339404078?l=mohammedpeer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mohammedpeer.blogspot.com/feeds/4325971957339404078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7748589852161636488&amp;postID=4325971957339404078' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/4325971957339404078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7748589852161636488/posts/default/4325971957339404078'/><link rel='alternate' type='text/html' href='http://mohammedpeer.blogspot.com/2009/11/blog-post.html' title='எண்ணெயும் போரும்- தாரிக் அலியின் கோட்பாடுகள் குறித்து'/><author><name>எச்.பீர்முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/04037882964203960456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_qC82IoQv3x0/SCrIoN6Dy5I/AAAAAAAAADM/QDSTxfmG1nc/S220/PIC_0379.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qC82IoQv3x0/Sw5jStEmtBI/AAAAAAAAAOw/wKiO31TGplQ/s72-c/tariq-ali2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-1842195047138553875</id><published>2009-10-19T10:53:00.000+05:30</published><updated>2009-10-19T11:39:08.369+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோம்சாம்ஸ்கி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதிகாரம்'/><title type='text'>அதிகார பரப்பின் பயங்கரம் குறித்து - நோம் சாம்ஸ்கியுடன் ஒரு நேர்காணல்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_qC82IoQv3x0/Stv5DYhrz6I/AAAAAAAAAOg/7AVxYyek_i4/s1600-h/noam_chomsky_human_rights.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5394178815224958882" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 292px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://2.bp.blogspot.com/_qC82IoQv3x0/Stv5DYhrz6I/AAAAAAAAAOg/7AVxYyek_i4/s320/noam_chomsky_human_rights.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோம் சாம்ஸ்கி உலகளாவிய மார்க்சிய/ எதிர் ஏகாதிபத்திய சிந்தனையாளர். உலகம் முழுவதும் தனக்கான விரிந்த வாசக அறிவு பரப்பை கொண்டவர். அமெரிக்காவின் ஏகாதிபத்திய செயல்பாடுகளுக்கு தீவிர எதிர் உருவமாக செயல்படுபவர். பல்கலைகழக வட்டாரத்தில் மொழியியல் கோட்பாட்டாளராக தன் பணியை சாம்ஸ்கி தொடங்கினார். மனித இனம் பிறக்கும் போது மொழி உள்வாங்கலுக்கான இயற்கையான இயந்திர அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்றார் சாம்ஸ்கி. ஐம்பதுகளில் மேற்கின் மொழியியல் தடத்தில் புதிய உத்திகளை அறிமுகப்படுத்திய சாம்ஸ்கி அதன் அடிப்படையிலான ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார். உக்ரேனிய யூத வம்சத்தை சார்ந்த சாம்ஸ்கி தன் பத்தாவது வயதிலேயே பாசிசம் மற்றும் ஸ்பெயின் உள்நாட்டுப்போர் குறித்த கட்டுரைகளை எழுதினார். மொழியியலில் இவரின் முக்கிய ஆய்வு முறை என்பது மொழி மற்றும் மனம் இவற்றுக்கிடையேயான உறவை ஆராய்ந்ததாகும். இது மொழி மற்றும் மனம் (Language and mind )என்ற பெயரில் பின்னர் நூலாக வெளிவந்தது. மிகேல் பக்தின் மற்றும் விட்கென்ஸ்டீன் ஆகியோரின் பின்தொடரலான சாம்ஸ்கியின் ஆய்வு மற்றும் சிந்தனைதளம் தொண்ணூறுகளில் அரசியல் கோட்பாடுகளை நோக்கி நகர்ந்தது. மார்க்சியம் , எதிர் ஏகாதிபத்தியம், காலனியம், தாராளமயம் போன்ற கோட்பாடுகளில் ஆர்வம் கொண்டு அது தொடர்பான ஆய்வுகளில் கவனம் செலுத்தினார். மார்க்சியம் பற்றிய ஆய்வுகளில் ரஷ்ய மார்க்சியரான தியோடர் ஷானினை தன் முன்னோடியாக கருதினார். வியட்நாம் போரின் போது அமெரிக்காவிற்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றினார். அதன் தொடர்ச்சியில் அறிவுஜீவிகளின் பொறுப்புணர்வு (Responsibility of intellectuals) என்ற நூல் சாம்ஸ்கியிடமிருந்து வெளிவந்தது. அநேகமாக இரண்டாயிரத்திற்கு பிறகு அவரின் சிந்தனை தளம் மொழியியலில் இருந்து விலகி அரசியல் கோட்பாடுகள் மீதே அதிகமும் மிதந்து வருகிறது. அமெரிக்க எதிர்ப்பு நிலைபாட்டை எடுக்கும் காரணத்தால் இவருக்கு பல தரப்பில் இருந்தும் கொலைமிரட்டல்கள் வந்தன. இதன் காரணமாக இவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பல்வேறு கோட்பாட்டு விஷயங்களில் மேற்கின் பல அறிவுஜீவிகளோடு உரையாடல் நடத்தி இருக்கிறார். அதில் அறிவு மற்றும் அதிகாரம் குறித்து எழுபதுகளில் மிஷல் பூக்கோவுடன் அவர் நடத்திய விவாதம் முக்கியமானது. ஐம்பதுகளில் இருந்து தொடங்கி அறுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் இதுவரை சாம்ஸ்கியிடம் இருந்து வெளிவந்திருக்கின்றன. language and mind, logical structure of linguistic theory, Refelctions on language, human rights and american foreign policy, The soviet union vs Socialism, on power and ideology, Culture of terrorism, Classwarfare, Necessary illusions, What uncle sam really wants,Pirates and Emperors: Old and new போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. தமிழ் உள்பட இந்திய அறிவுத்துறை வட்டாரங்களில் பிரபலமானவரான சாம்ஸ்கி வழக்கமாக கருத்தரங்கிற்கு அறிவுஜீவிகள் வருகை தரும் அரபுபல்கலைகழகத்திற்கு இஸ்ரேல்-தேசியம்-பாலஸ்தீன் குறித்த கருத்தரங்கிற்காக சில மாதங்களுக்கு முன்பு வருகை தந்திருந்தார். தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர் வரிசையில் இவரோடு உரையாட வேண்டும் என்ற ஆர்வம் மனதிற்குள் அலையாக ததும்பி கொண்டிருந்தது. மற்ற அறிவுஜீவிகள் மாதிரி இவரை அணுகுவது கடினம் என்ற மனப்பிம்பத்தை வழக்கமாக என்னை ஆதரிக்கும் அரபு பல்கலைகழக பேராசிரியர் முனீர் ஹசன் உடைத்தெறிந்தார். அவரின் துணையில்லாமல் இது நடந்திருக்காது. கால அவகாசம் கருதி குறைந்த நேரமே சாம்ஸ்கியுடன் நேர்காண முடிந்தது. இருந்தாலும் அந்த உரையாடல் நுட்பமானதும், செறிவானதுமான அறிவுபரப்பை உள்வாங்கி வெளிவந்ததில் எனக்கு நானே திருப்தியடைகிறேன். அதுவே என்னை முன்னோக்கி நகர்த்துகிறது. உன்னதம் மாதஇதழில் வெளிவந்த இந்த நேர்காணலை வலைப்பதிவு வாசகர்களுக்காக இங்கு மீள்பதிவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எச்.பீர்முஹம்மது:- சாம்ஸ்கி, நீங்கள் மொழியியல் அறிஞராக அறிவுத்துறையில் நுழைந்தாலும் அரசியல் கோட்பாட்டாளராகவே அதிகமும் அறியப்படுகிறீர்கள். செப்டம்பர் 11 நிகழ்வுக்கு பிறகு உலகம் முழுவதும் அறியப்படும் அறிவுஜீவி. மொழியியல் மற்றும் பிற அறிவுத்துறை பகுதிகள் இவற்றை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? உங்கள் பின்னணியோடு தொடங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாம்ஸ்கி:- என் முதல் அறிவார்ந்த ஈடுபாடு மொழியியல் வழி தான் நிகழ்ந்தது. மொழியின் எல்லை மற்றும் அதன் சாத்தியபாடுகள் குறித்து ஆராய வேண்டும் என்று இளமைக்காலம் முதலே ஆர்வம் கொண்டிருந்தேன். மொழி மீதான மனித பிரக்ஞை எத்தகையது? அதன் எதார்த்த வெளிப்பாடு என்பது என்ன? மாதிரியான கேள்விகள் என்னை ஆக்கிரமித்து கொண்டன. என் பின்னணி உக்ரேனிய யூத வம்சத்தோடு தொடர்புடையது. என் தந்தை அங்கிருந்து வந்தவர். செமிடிக் மொழிக்குடும்ப கிளையான யத்திஷ் மற்றும் ஹிப்ரு ஆகியவற்றின் பின்னணியில் நான் வளர்க்கப்பட்டேன். இதன் இன்னொரு தொடர்புறு தளத்தில் ஆங்கிலம் ஆட்கொண்டிருந்தது. இளமையில் ஹிப்ரு மொழி மற்றும் அதன் இலக்கியம் ஆகியவற்றை அறிதலுக்கான நிர்பந்தத்தில் இருந்தேன். அதன் காரணமாக ஹிப்ரு மொழியின் கட்டமைப்பு குறித்து அதிகம் படிக்க தொடங்கினேன். இவற்றிலிருந்து நான் கண்டறிந்த முடிவு என்பது மொழி என்பது வெறுமனே உரையாடல் கருவி அல்ல. அது இதை தாண்டிய மனித இயல்போடு பதிவுறும் ஒன்றாகும். மொழியின் இலக்கண அமைப்பு முறைக்கும் மனித நடத்தையியலுக்குமான தொடர்பு, அதன் வெளிப்பாடுகள் என்பதான எல்லை வரை நீண்டது. என் கல்வித்துறை வாழ்க்கையின் ஏறத்தாழ 25 ஆண்டுகளை மொழியியல் எடுத்துக்கொண்டது. பிறக்கும் குழந்தையின் மொழி எவ்வாறு இருக்கும்? அதற்கும் புறநிலை சமூகத்திற்குமான உறவு என்ன என்பதை குறித்து ஆராய்ந்தேன். உளவியலில் மொழி ஒரு செயல்பாட்டு கருவி. அதுவே மிகுந்த சாத்தியபாட்டை ஏற்படுத்தும் ஒன்று. ஒரு தனிமனிதன் மொழியை படிக்கும் போது ஒரே நேரத்தில் அறிவையும் அடைகிறான். அவனின் சிந்தனை தளத்தை அது பிரதிபலிக்கும் காலத்தில் நடத்தையியலை வடிவமைப்பதிலும் மொழி முக்கியமான இடத்தை அடைகிறது. என் எழுத்துவாழ்க்கையில், சிந்தனையில் மொழியியல் ஒரு கட்டத்தில் முன்னோக்கி நின்றது. எழுபதுகளில் நடந்த வியட்நாம் போர் எனக்கு அரசியல் கோட்பாடுகள் மீதான ஆர்வத்திற்கு வழி ஏற்படுத்தியது. அமெரிக்காவிற்கு எதிரான மிகவும் கொதிநிலையான மனநிலையில் அப்போது இருந்தேன். அதை எழுத்துக்கும் மனித இயல்புக்குமான இடைவெளியை நேராக்கும் முயற்சி எனலாம். தனிமனிதன் தன்னை அறிந்து கொள்வதில் இருந்து தொடங்கும் ஒரு நடவடிக்கை என இதை புரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எச்.பீர்முஹம்மது:- உங்களின் மொழியியல் ரீதியான ஆய்வு முறைகள் இன்னொரு கட்டத்தில் அதிகாரம், மனித இருப்பு, உலக போக்குகள் குறித்த ஆய்வுபரப்பாக விரிவடைந்தது. இது குறித்த உங்களின் உரையாடல்கள், விவாதங்கள் முக்கியமானவை. அறிவுஜீவிகள் பலருடன் இது சார்பான விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறீர்கள். குறிப்பாக மிஷல் பூக்கோவுடன் எழுபதுகளில் நீங்கள் நடத்திய விவாதம் முக்கியமானது. அதில் நீங்கள் உங்கள் தரப்பாக முன்வைத்த தரவுகளை நடப்பு சூழலில் எவ்வாறு அணுகுறீர்கள்?தற்போது அறிவு என்பதையே அதிகாரம் எனக் கொள்ளலாமா?&lt;br /&gt;சாம்ஸ்கி:- மனித இருப்பு அதன் இயல்பு மற்றும் மொழிக்கும் அதற்குமான உறவு என்பவற்றை குறித்து நான் அதிகம் சிந்தித்ததுண்டு. அது ஒரு வசந்த காலம். நானும் மிஷல் பூக்கோவும் நீதி, அதிகாரம் குறித்து விவாதித்த தருணங்கள். உலக வரலாற்றில் 17 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இயற்கையை அறிதல் என்பது மனித வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி பார்க்கப்படவில்லை. இயற்கை இருப்பானது உயிருள்ளது உயிரற்றது என்ற வகைப்பாட்டிற்குள் மட்டுமே பார்க்கப்பட்டது. இயற்கை ஒரு விதமான வரிசைக்கிரமத்திற்குள் கொண்டுவரப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்கை அறிவியல் வெகுவாகவே மாறிவிட்டது. அதன் அளவுகோல்கள் விரிவடைந்து விட்டன. புதிய சொல்லாடல்கள் உருவாகி இருக்கின்றன. உதாரணமாக உயிரியலை எடுத்துக்கொள்ளுங்கள். மனித உடலமைப்பை விவரிக்கையில் திசுக்கள், செல்கள் என அது நீள்கிறது. செல்களின் கட்டமைப்பை பற்றி கூட விவரிக்கும். ஆனால் அவை அனைத்தையும் மனித இயல்போடு பொருத்தி பார்ப்பது சாத்தியமானதா? இல்லை என்பதே என் கருத்து. நியூட்டனின் புவிஈர்ப்பு விசையும், கார்ட்டீசிய விதியும் மனித இயல்போடு பொருந்தி வராதவை. இயற்பியலில் தனிமங்களின் சலனங்கள் வாழ்க்கை பற்றிய கருத்துருவத்தோடு சேர்த்து விளக்க முடியாதவை. உயிரியலும், இயற்பியலும் அதனதன் தனித்த கருதுகோள்களை கொண்டவை. அவை எவ்விதத்திலும் மனித இயல்பு மற்றும் வாழ்விற்கான கருதுகோள்களை உள்ளடக்கி இருக்கவில்லை. அவை இன்னொரு நெருக்கடியை நோக்கி நகரக்கூடும். மனித அறிவு என்பதை பொறுத்தவரை ஒருவர் தற்போது என்ன அறிந்திருக்கிறார்?. அதன் எல்லை என்ன? என்பதற்கும் இருபது வருடங்களுக்கு முன்னர் என்ன அறிந்திருந்தார் என்பதற்கும் இடைவெளி அதிகம். நான் பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு திரும்புகிறேன். தெகார்த்தே மற்றும் அவரை பின்தொடர்ந்தவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். தெகார்த்தே சிந்தனை மனம் உடலிலிருந்து தனித்து இயங்குவதாக நம்பினார். அவரளவில் அவரின் அன்றைய நிலைபாடு சரியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருந்திருக்கலாம். அன்றைய தருணத்தில் அது ஒரு விஷயமல்ல. ஆனால் இன்று இயற்கை அறிவியல் மாறி இருக்கிறது. மனம் பற்றிய கருதுகோள் மாறியிருக்கிறது. அறிவின் சலனம் ஒரு புள்ளியை நோக்கி நகர்கிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அது அதிகாரம் என்ற சாரத்தை உள்ளடக்கி இருக்கிறது. அதன் பயன்மதிப்பு குறைந்து விட்டது. இந்நிலையில் அறிவார்ந்த சமூகத்திடம் இருவிதமான பணிகள் கோட்பாட்டளவிலும், செயல்நிலையிலும் காத்திருக்கின்றன. ஒன்று எதிர்கால நீதி சமூகத்தை அதற்கான மனித சமூக கோட்பாட்டு வடிவில் உருவாக்குவது. அதற்கான உறுதியான மனித கருத்துருவத்தை, சாரத்தை ஏற்படுத்துவது. இரண்டாவது பணி என்பது நம் சொந்த சமூகத்தில் அதிகாரத்தின் இயல்பை அதன் பயங்கரத்தை, அழிவை குறித்து தெளிவாக புரிந்து கொண்டு அதனை எதிர்கொள்வது. மேலும் அதிகார நிறுவனங்களை பற்றி அறிந்து கொள்வது.அது பொருளாதார, வணிக, மற்றும் நிதி நிறுவனங்கள் வடிவில் வெளிப்படும். பன்னாட்டு நிறுவன குழுமங்கள் (Multinational group of companies)இதன் சிறந்த பிரதிபலிப்பு. ஆக தற்போதைய சூழலிலும் அதிகாரத்தை அதன் அசலான தன்மையில் காண முடிகிறது.&lt;br /&gt;எச்.பீர்முஹம்மது:- அதிகாரம் குறித்த உங்களின் பார்வை சார்பு நிலையாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். மன்னிக்கவும். நீங்கள் இலங்கை விவகாரம் குறித்து லங்கா கார்டியன் பத்திரிகைக்கு நேர்காணல் அளித்திருந்தீர்கள். என்ன நிகழ்ந்தது என்றே தெரியவில்லை. அவர்கள் உங்களை வென்று விட்டார்கள். இலங்கை விவகாரம் பாலஸ்தீன் போன்றே இரு நூற்றாண்டுகளின் துயரம். அதற்கு மறுப்பாக என் நண்பர்கள் சிலர் (நாகர்ஜுனன், ஜமாலன், பெருந்தேவி) அறிவுத்துறையை சார்ந்த பலரின் கையெழுத்து அடங்கிய விளக்க அறிக்கை ஒன்றை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்கள். நானும் அதில் கையெழுத்திட்டிருந்தேன். பாலஸ்தீன் குறித்த ஆழ்ந்த அனுதாபமும், அவதானமும் கொண்ட நீங்கள் ஏன் தெற்காசிய விவகாரங்களிலிருந்து உங்களை துண்டித்து கொள்கிறீர்கள்.? (Disconnect from south asian affairs)&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாம்ஸ்கி:- இலங்கை விவகாரம் குறித்து லங்கா கார்டியனுக்கு நான் அளித்த நேர்காணல் தவறாக பிரதியாக்கம் செய்யப்பட்டதாகவே கருதுகிறேன். எனக்கு அந்த விவகாரம் குறித்த விரிவான அகன்ற படிப்போ அல்லது பார்வையோ இல்லை. இதை நான் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கான பதிலிலும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் சொன்னது போன்றே அது ஒரு துயரம் தான். அது தீர்க்கப்பட வேண்டும். அங்குள்ள சிறுபான்மையினர் எல்லா வித சம உரிமைகளை பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எச்.பீர்முஹம்மது:- நான் இதற்கு முன் எல்லோரிடத்திலும் கேட்ட கேள்வியை தான் உங்களிடத்திலும் கேட்கிறேன். பாலஸ்தீன் விவகாரம் இந்த நூற்றாண்டிலும் தீர்க்கப்பட முடியாத நீண்டு விரிந்திருக்கும் ஒன்றாகவே இருக்கிறது. இது குறித்து நீங்கள் பல உரையாடல்கள் நடத்தியிருக்கிறீர்கள். மேலும் சில அறிவுஜீவிகள் இந்த விஷயத்தில் ஏன் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.? உங்கள் அதிகாரம், ஜனநாயக சமூகம் குறித்த பார்வைக்கு எவ்விதத்தில் இது பொருந்துகிறது? அங்கு தர மாற்றம் (qualitative change)சாத்தியமா?&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;சாம்ஸ்கி:- இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரம் இந்த பிராந்தியத்தில் ஒரு தொடர்கதை வடிவமாகவே இருக்கிறது. இங்கு தர மாற்றம் சாத்தியம் என்றே நான் கருதுகிறேன். ஒஸ்லோ சமாதான உடன்படிக்கைக்கு பிறகு இஸ்ரேலிய கல்வியாளரான சொல்மோ பென் அமி சொன்னார். " ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை நவகாலனிய வடிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவரின் இயல்பான வாழ்க்கைக்கு மற்ற வரை சார்ந்திருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது." இதனால் தான் எட்வர்ட் செய்த் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தார். இஸ்ரேல் - எகிப்து இடையேயான ஒப்பந்தத்திற்கு சற்று முன்பு வரை காசா பகுதி பாலஸ்தீனியர்கள் 200 சிறுபகுதிகளாக துண்டாக்கப்பட்டு சிறைப்பட்டு கிடந்தார்கள். நீண்ட காலத்திற்கு பிறகே அவர்கள் இணைக்கப்பட்டார்கள்.இஸ்ரேல் விவகாரத்தின் கடந்து போன ஐம்பது ஆண்டுகளும் ஒரு துன்பியல் நாடகத்திற்கான முன்வடிவமே. பராக், பராஸ், ஷெரோன் என எல்லோருமே இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக போர்க்குற்றவாளிகளே. அமெரிக்காவின் அரவணைப்பு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கான மிகப்பெரும் காரணம். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலான அதன் ராஜதந்திர ரீதியான உதவிகளும், நிதி உதவியும் இஸ்ரேலை குறிப்பிட்ட சட்டகத்திற்குள் வரும்படி செய்கின்றன. இஸ்ரேல் இந்த வரம்பிற்குள் நின்றே பாலஸ்தீனை எதிர்கொள்கிறது. அது சில தருணங்கள் தவிர மற்ற தருணங்களில் அதை மீறுவதே இல்லை. பாலஸ்தீன் சுயநிர்ணய உரிமை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பல தருணங்களில் அமெரிக்க வீட்டோ அதிகாரத்தின் மூலம் தோற்கடித்திருக்கிறது. மனித உரிமை அமைப்பில் கொண்டு வரப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களை கூட வாக்குரிமை மூலமும், அதிகார உத்தி வழியும் தோற்கடித்திருக்கிறது. அமெரிக்க என்பது உலகளாவிய அதிகார மையம். இஸ்ரேல் - பாலஸ்தீன் என்பது அதன் பக்க வி
