காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Thursday, December 13, 2012

குர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம் வெளியீட்டு விழா நிகழ்வுகள்


எச்.பீர்முஹம்மதின் குர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம் என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 4 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது. வெளி ரங்கராஜன் தொடக்க உரை நிகழ்த்தினார். பேராசிரியர் முத்துமோகன் நூலை வெளியிட புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வெங்கட பிரகாஷ் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை கோ.வி. லெனின் வெளியிட பெங்களூர் பாலா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியை இந்த புத்தகத்தை வெளியிட்ட ஆழி பதிப்பகத்தின் செந்தில் நாதன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் முத்துமோகன் ” தேசியம் இனம் என்பதை மார்க்சியம் எவ்வாறு பார்க்கிறது. அதன் கோட்பாடு சார்ந்த புரிதல் என்ன? லெனின் எவ்வாறு இந்த விஷயத்தை அணுகினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்தியகிழக்கை எவ்வாறு பார்க்கிறது மற்றும் குர்துகளின் வாழ்வியல் போராட்டம் என்பதை குறித்த பல விஷயங்களை எடுத்துரைத்தார். இது சார்ந்த விவாதங்கள், உரையாடல்கள் நடைபெற்றன. பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு முத்துமோகன் பதில் அளித்தார். ஆழி பதிப்பகம் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது.





No comments: