காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Sunday, May 18, 2008

யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து

தனிமை பற்றிய குறிப்புகள் - யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து
எச்.பீர்முஹமது
thinnai.com(2003)

தனிமையின் இருத்தல் அனாசியமானது. ஒரு வகையில் விலகலையும், விலக்கப்படலையும் சார்ந்தது. தன் கவிதையின் கருவாக்கத்திற்கு இதுவே காரணமாக அமைந்தது என்கிறார் யுவன். நீண்டகாலமாக தமிழ்ச்சூழலில் கவிதைப்பற்றி நடந்துவரும் விவாதங்களில் சொல்லப்படுகின்றவற்றுள் ஒன்று இது. கவிதை தனிமை நிலையின் உணர்விலிருந்து வருவதா ? அல்லது கூட்டு நிலையில் அதன் தாக்கங்களிலிருந்து வெளிப்படுவதா ? கவிதைக்கு போராட்ட குணம் உண்டா ? இல்லை அது வெறும் தனித்துவமான கலையம்சம் மட்டுந்தானா ? கலை இந்த இரு தன்மைகளுக்குள்ளும் தன்னை ஆட்படுத்தி கொண்டிருந்தது என்பதே உலக வரலாற்று நியதி. ஆப்பிக்காவின் வரலாறும், மத்திய கிழக்கின் வரலாறும், இலங்கை இன போராட்டமும் நமக்கு இதைத்தான் காட்டுகின்றது. தனிமையின் உணர்பதிவுகளாக கவிதை உருவாகும் சூழலில் அது கலைஞூனின் ஆழ்மனப் பதிவாக மட்டுமே இருக்கிறது. புறவெளியில் நம்மிலிருந்து அந்நியப்படும் அல்லது நம்மால் அறியப்படாத விஷயங்களிலிருந்தும் கவிதை உருவாலாம். தமிழ் நவீனக் கவிதைகளை புாிந்து கொள்வதில் வாசகனுக்கு ஏற்படும் சிக்கலுக்கு காரணம் இது தான். அவனின் இயல்பான பிரக்ைஞூ நிலையிலிருந்து அந்நியமான ஒன்றாக அந்த கவிதை இருக்கிறது. இந்நிலையில் படைப்பை மதிப்பிடுவது அல்லது விமர்சிப்பது என்பது அவரவர் சுய வாசிப்பு அனுபவம் கொடுக்கும் தீர்வை மட்டுமே வைத்து முடிவு செய்ய முடியும். விதிவிலக்காக சில சமயங்களில் கவிஞூர்கள் தங்களின் கவிதைகளை கவிதையாக காட்டிக் கொள்வதும் உண்டு. எங்கிருந்தோ கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகளை இடையில் செருகி இது தான் அசல் என்றும் சொல்லி கொள்வது உண்டு. கவிதை வாசகர்களை விட தமிழ்ச்சூழலில் கவிஞூர்கள் அதிகாித்து விட்டார்கள். இதில் எது கவிதை என தேர்ந்தெடுத்து கொள்வது சிரமம் தான். இதிலிருந்து விதிவிலக்காக வந்திருக்கிறது இத்தொகுப்பு புகைச்சுவர் என்பது ஒரு குறியீடு. அதன் நீட்சி என்பது ஒரு தேடல்.
புகைச்சுவருக்கு அப்பால் பூத்திருக்கிறது நீ
என்றும் நுகராத பூ
அதன் வாசனை தொட்டியிலிருந்து
புறப்பட்டு வருகிறேன். ஞூ
மனிதன் நிறங்களை அறிதல் என்பது ஓர் உளவியல் கூறு. அது தொடர்ச்சியானது. முன் நிர்ணயிக்கப்பட்டது. சில நேரங்களில் நம்மால் நிறங்களை அறியக்கூட முடியவதில்லை. ஒரு சட்டைத்துணியை தேர்ந்தெடுக்கும் போது அதன் தெளிவான நிறம் பற்றிய மனப் பிம்பம் உருவாவதற்கு வெகு நாளாகிறது.
நகாின் புறத்தில் வீடுகள்
முளைக்கின்றன. வீடுகளில்
மனிதர்கள் முளைக்கிறார்கள். சில
வீடுகளில் தோட்டம் முளைக்கிறது.
மிகச்சில வீடுகளில் கத்திாி
வெண்டைச் செடிகளுக்கு நடுவே
வானவில் முளைக்கிறது. ஞூ
மனிதர்கள் குழந்தைகளாகும் போது வானவில் கற்றுத் தருகிறது.
நிறபேதம் நிறச்சேர்க்கை
மற்றும் தோன்றுதலும் மறைதலும் பற்றி
விலங்குகளின் கனவுப்பற்றி நமக்குத் தொியாது. மனிதர்களின் கனவுபற்றியே நாம் புாிந்து வைத்திருக்கிறோம். நான் சில நேரங்களில் இதனை அறிந்து கொள்ள விலங்காக மாறி விடலாமா ? என்று கூட யோசித்ததுண்டு. இறப்பிற்குபின் என்னவாகும் என்ற மாதிாியானது இது. மனிதன் வெளி விடாமல் உள்நோக்கி புதைத்து வைத்துக்கொண்டிருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடு தான் கனவு என்றார் பிராய்ட். நம் ஆழ்மனம் வழியாக வெளிப்படுகிறது இது. ஒரே மாதிாியான கனவுகள் வெவ்வேறு இ;டங்களில் ஒரே நேரத்தில் எழும் சாத்தியங்கள் உண்டு. கோட்பாடுகள் கூட வெவ்வேறு சிந்தனையாளர்களால் ஒரே மாதிாியாக புனையப்படுகின்றன. ஆனால் அவர்களுக்கிடையே எவ்விதமான தொடர்பும் இருக்காது. மனிதர்கள் ஆழ்மனதில் புதைத்து வைத்த எண்ணங்கள் விலங்குகளுக்கும் இருக்கலாம்
கனவில் ஒட்டகம் வந்தது
பின்னொரு நாள்
அதைப்பார்க்க போனேன்
நிம்மதியற்று வன்மையாய்
நடைபழகின புலியின்
கூண்டுக்கு வெகுதொலைவில்
திறந்தவெளி கூண்டில்
தனித்து நின்றிருந்தது
ஒருவேளை
நான் கண்ட அதே நேரம்
அதே கனவை
ஒட்டகமும் கண்டிருந்தால்
கேட்கும் அவசியம் நேராது.
வளர்ச்சி என்ற சொல்லாடல் சார்பு நிலையானது. சில நேரங்களில் அருவமானதும் கூட. மனிதனின் வளர்ச்சி ஒன்றின் பின்னணியிலிருந்து தான் வரும். இதில் முழுமையான வளர்ச்சி என்பது இல்லை. இன்னொரு வகையில் வளர்ச்சி என்பது ஓர் ஆதிக்க சொல்லாடலாகவும் இருக்கிறது.
ஒன்றை கீழ் நிறுத்தி விட்டே வளர்ச்சி என்பது மேல்நோக்கப்படுகிறது. தனிமனித வளர்ச்சி, சமூக வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி, உலக வளர்ச்சி இந்நான்கும் ஒன்றையொன்று கீழ்நிறுத்தி விட்டுதான் மேல் நோக்கப்படுகிறது. சாி சமமான வளர்ச்சி என்பது சாத்தியமற்று போய்விடுகிறது.
வளர்ச்சி என்ற ஒரு சொல்லின்
பின்னணியில்
புாிந்து கொள்கிறோம்
தாவரம், கட்டடம் இரண்டும்
உயர்வதை
ஆனால்
தாவரத்தின் வேர் தாவரத்தினடியிலும்
கட்டடத்தின் வேர் மேஸ்திாி
அல்லது பொறியாளனின் மனதடியிலும்
இருப்பதை யாரும் அறிவர்
கிளைக் கவையில் போலவே
வென்ட்டிலேட்டாிலும் மீட்டர் பாக்ஸ்லும்
குருவி கூடு கட்டுகிறது.
இதைவிடவும் முக்கியமானது
ஒன்று உண்டு
என் பெயரோ, உன் பெயரோ இந்
நகாின் பெயரோ
அறியாத மரங்கொத்தி
சுவாில் பட்டையுாிக்க முற்படுவதில்லை
நிலைத்தோற்றம் - நிலைமாற்றம் - நிலைமறுப்பு என்பது இயக்கவியல் விதி. மரம் - விறகு-காி-சாம்பல், கோழி - முட்டை - குஞ்சு - உணவு என்ற சுழற்சி தொடர்ச்சியாய் இருந்து கொண்டிருக்கிறது. அது ஒரு நியதி
என்ன செய்வது இனி
மரம் விறவாகி
விறகு காியாகி
காி சாம்பலாவதை
முட்டை குஞ்சாகி
குஞ்சு கோழியாகி
கோழி உணவாகிச்
சொிப்பதை
பார்த்துக் கொண்டு மட்டும் தான்
இருக்கலாம்.
மேலும் இத்தொகுப்பால் அறிதல் , நான், நீ மற்றும் நாம், மீண்டும, இந்தசிங்கம்,பார்வை போன்ற கவிதைகள் மட்டுமே தனிமையின் உணர்பதிவுகளாக நான் தேர்ந்தெடுத்த, எனக்கு பிடித்தமான கவிதைகள். எழும் கவிதையானது பிரதிகளில் விழுந்து விட்ட பிறகு எல்லாம் கவித்துவ தன்மையை பெறுவதில்லை. இத்தொகுப்பின் குறைபாடும் இது தான் அறியப்படாத விஷயம், வெளி இவற்றை குறியீடு செய்வதில் நான் மேற்குறிப்பிட்ட மட்டுமே இடம் பெறுகின்றன. தமிழ்கவிதையுலகின் அடுத்தகட்ட நகர்தல் சிலவேளை இன்னும் இந்த விஷயத்தை அதிகமாக தொடலாம். யுவனின் இந்த ழூன்றாவது தொகுப்பு புதிய தலைமுறை கவிதைகளின் தொடக்கத்திற்கு ஒரு சாரம்.
(காலச்சுவடு வெளியீடு)

2 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்கள் எழுத்துகளை சிறு பத்திரிகைகளிலும் இணையத்திலும் வாசித்துள்ளேன்.

நீங்கள் வலைப் பதிய வந்தது குறித்து மகிழ்ச்சி.

எச்.பீர்முஹம்மது said...

நான் வலைப்பதிவுக்கு வருவதற்கு முன் என்னை
வாசித்ததற்காக நன்றி. என்னை உங்களுக்கு தெரியும்.
ஆனால் உங்களை எனக்கு தெரியாது. இப்போது தான்
இருவரும் தெரிய வருகிறோம்.